NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / ரயில்வே ஸ்டேஷனில் சக்கர நாற்காலி பயன்படுத்த 10,000 ரூபாய் வசூலித்த போர்ட்டர்; ரயில்வே நிர்வாகம் எடுத்த அதிரடி  
    அடுத்த செய்திக் கட்டுரை
    ரயில்வே ஸ்டேஷனில் சக்கர நாற்காலி பயன்படுத்த 10,000 ரூபாய் வசூலித்த போர்ட்டர்; ரயில்வே நிர்வாகம் எடுத்த அதிரடி  
    ஒரு என்ஆர்ஐ பயணியிடமிருந்து ரூ.10,000 அளவுக்கு அதிகமாக கட்டணம் வசூலித்துள்ளார் போர்ட்டர்

    ரயில்வே ஸ்டேஷனில் சக்கர நாற்காலி பயன்படுத்த 10,000 ரூபாய் வசூலித்த போர்ட்டர்; ரயில்வே நிர்வாகம் எடுத்த அதிரடி  

    எழுதியவர் Venkatalakshmi V
    Jan 02, 2025
    01:32 pm

    செய்தி முன்னோட்டம்

    டெல்லியின் ஹஸ்ரத் நிஜாமுதீன் ரயில் நிலையத்தில் சக்கர நாற்காலி சேவைக்காகவும், தனது சாமான்களை நடைமேடைக்கு எடுத்துச் செல்லவும், ஒரு என்ஆர்ஐ பயணியிடமிருந்து ரூ.10,000 அளவுக்கு அதிகமாக கட்டணம் வசூலித்துள்ளார்.

    இந்த சம்பவம் வெளிச்சத்துக்கு வந்ததையடுத்து, ரயில்வே துறை விசாரணை நடத்தி அவரது உரிமத்தை ரத்து செய்தது.

    90 சதவீத தொகையை பயணிகளுக்கு திருப்பித் தருமாறும் போர்ட்டருக்கு உத்தரவிடப்பட்டது.

    வடக்கு ரயில்வே தனது டெல்லி பிரிவு போர்ட்டரின் பேட்ஜை திரும்பப் பெற்றதாகக் கூறியது.

    இதுபோன்ற சம்பவங்களுக்கு "பூஜ்ஜிய சகிப்புத்தன்மை கொள்கை" இருப்பதாக ரயில்வே மேலும் கூறியது, மேலும் அது பயணிகளின் நலன்களை முதன்மையாகக் கருதுகிறது.

    விவரங்கள்

    சம்பவம் வெளிச்சத்திற்கு வந்ததும் ரயில்வே துறை நடவடிக்கை

    ரயில் நிலையங்களில் சக்கர நாற்காலி உதவி சேவை இலவசம் என்பதை அறிந்த என்ஆர்ஐ பயணியின் மகள் பேயல் ரயில்வேயில் புகார் அளித்தார். இச்சம்பவம் டிசம்பர் 28ம் தேதி நடந்தது.

    சிசிடிவி காட்சிகளை சரிபார்த்த பிறகு போர்ட்டர் அடையாளம் காணப்பட்டு, பயணியிடம் ரூ.9,000 திரும்ப வழங்கப்பட்டது.

    இந்த சம்பவம் குறித்து அதிர்ச்சி மற்றும் அவநம்பிக்கையை வெளிப்படுத்திய கோட்ட ரயில்வே மேலாளர், ரயில்வே தனது பயணிகளுக்கு பாதுகாப்பான மற்றும் வசதியான பயணத்தை வழங்க உறுதிபூண்டுள்ளதாக கூறினார்.

    மேலும் ரயில்வே நிர்வாகம் அனைத்து பயணிகளுக்கும் ஏதேனும் பிரச்சனைகளை எதிர்கொண்டால் உடனடியாக 139 என்ற ஹெல்ப்லைன் எண்ணை தொடர்பு கொள்ளுமாறு வேண்டுகோள் விடுத்துள்ளது

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    இந்திய ரயில்வே
    ரயில்கள்
    ரயில் நிலையம்

    சமீபத்திய

    மகன் யாத்ராவின் பட்டமளிப்பு விழாவில் ஒன்றாக பங்கேற்ற தனுஷ் - ஐஸ்வர்யா ரஜினிகாந்த் தனுஷ்
    இந்தியாவில் மே மாத விற்பனையில் 22 சதவீதம் வளர்ச்சி கண்ட டொயோட்டா கிர்லோஸ்கர் நிறுவனம் டொயோட்டா
    இந்தியாவின் மே மாத ஜிஎஸ்டி வசூல் 16.4 சதவீதம் வளர்ச்சி; மத்திய நிதியமைச்சகம் தகவல் ஜிஎஸ்டி
    EPFO 3.0: ஜூன் 2025இல் அமலுக்கு வரும் புதிய திட்டம்; விரைவில் கிளைம் பணத்தை ஏடிஎம்மிலேயே பெறலாம் வருங்கால வைப்பு நிதி

    இந்திய ரயில்வே

    நவீன வசதிகளுடன் வந்தே பாரத் சிறப்பு ரயில் விரைவில்! அம்சங்கள் என்ன? வந்தே பாரத்
    மூத்த குடிமக்களுக்கு மீண்டும் கட்டண சலுகை வேண்டும்!மத்திய அரசுக்கு வலியுறுத்தல் ரயில்கள்
    ஸ்ரீ ராமாயண யாத்ரா 18 நாட்கள் சுற்றுலா பயணம் - ஏப்ரல் 7இல் புறப்படும்! ரயில்கள்
    ரயில் தண்டவாளத்திற்கு இடையே இருக்கும் இந்த பெட்டி எதற்கு தெரியுமா? ரயில்கள்

    ரயில்கள்

    சென்னையில் முதல் ஓட்டுநர் இல்லாத மெட்ரோ ரயில்; உற்பத்தி பணிகள் வெற்றிகரமாக நிறைவு சென்னை
    இந்த ஆறு ரயில் பயணங்களை மிஸ் பண்ணிடாதீங்க; சுற்றுலா ஆர்வலர்களுக்கு சூப்பர் டிப்ஸ் கொடுத்த மத்திய அமைச்சர் பயணம்
    பேலஸ் ஆன் வீல்ஸ் ரயில் சீசன் தொடங்கியது! முன்பதிவு செயல்முறை, விலை மற்றும் இதர விவரங்கள் இந்திய ரயில்வே
    ஜார்க்கண்டில் சரக்கு ரயில் பெட்டிகள் தடம்புரண்டு விபத்து ஜார்கண்ட்

    ரயில் நிலையம்

    செங்கல்பட்டு ரயில் நிலையத்தில் இறந்து கிடந்த நபர்- 5 மணி நேரமாக சடலம் அகற்றப்படாத அவலம் செங்கல்பட்டு
    உத்தரப்பிரதேசம் விரைவு ரயிலில் தீ விபத்து - 19 பேர் காயம் உத்தரப்பிரதேசம்
    தனி நபருக்காக இயக்கப்பட்ட ரயில் - சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் பயணிகள் அவதி  சென்னை
    தெரிந்து கொள்ளுங்கள்- ஏன் ஏசி பெட்டிகள் எப்போதும் ரயிலின் நடுவில் இருக்கிறது? ரயில்கள்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025