NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / கைவிரல் ரேகை பதிவு செய்யவில்லை என்றால் ரேஷன் கார்டு ரத்தா? தமிழக அரசு தந்த விளக்கம்
    அடுத்த செய்திக் கட்டுரை
    கைவிரல் ரேகை பதிவு செய்யவில்லை என்றால் ரேஷன் கார்டு ரத்தா? தமிழக அரசு தந்த விளக்கம்
    இந்த தகவல் உண்மையில்லை என தமிழக அரசு அறிக்கை வெளியிட்டுள்ளது

    கைவிரல் ரேகை பதிவு செய்யவில்லை என்றால் ரேஷன் கார்டு ரத்தா? தமிழக அரசு தந்த விளக்கம்

    எழுதியவர் Venkatalakshmi V
    Feb 08, 2024
    08:57 am

    செய்தி முன்னோட்டம்

    கைவிரல் ரேகை பதிவு செய்யாத குடும்ப உறுப்பினர்களின் பெயர்கள், குடும்ப அட்டையில் இருந்து நீக்கப்படாது என்று தமிழக அரசு விளக்கம் அளித்துள்ளது.

    முன்னதாக, நேற்று, ரேஷன் கடைகளில் குடும்ப அட்டைதாரர்களின் விரல்ரேகை சரிபார்ப்பு செய்யாதவர்கள் நீக்கம் செய்யப்படுவார்கள் என்ற செய்தி பரவியது.

    இது பலரையும் கலங்க வைத்தது.

    இந்த நிலையில், இந்த தகவல் உண்மையில்லை என தமிழக அரசு அறிக்கை வெளியிட்டுள்ளது.

    அதோடு, அக்டோபர் 2023 முதல் குடும்ப உறுப்பினர்களின் விரல்ரேகை சரிபார்ப்புப்பணி நடைபெற்று வருகிறது என்றும், இதுவரை 63% குடும்ப அட்டைதாரர்களின் விவரங்கள் சரிபார்க்கப்பட்டுள்ளன என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    குடும்ப அட்டைதாரர்கள் அவரவர்கள் வசதிக்கேற்ப விவரங்களை புதுப்பித்துக் கொள்ளலாம் என்றும் தமிழ்நாடு உணவுத்துறை விளக்கம் அளித்துள்ளது.

    பயோமெட்ரிக் சரிபார்ப்பு

    ஆதார் விவரங்கள் மற்றும் குடும்ப அட்டை விவரங்கள் சரி பார்ப்பு

    தேசிய உணவு பாதுகாப்பு சட்டம், 2013-ன் படி, குடும்ப அட்டைதாரர்களின் ஆதார் விவரங்களை சரிபார்க்க, மின்னணு குடும்ப அட்டையில் இணைக்கப்பட்ட அனைத்து பயனாளிகளின் விரல் ரேகை சரிபார்ப்பை மேற்கொள்ள வேண்டும் என்று மத்திய அரசு சுற்றறிக்கை அனுப்பியுள்ளது.

    அதன்படி, குடும்ப உறுப்பினர்களுக்கு ஏதும் இடையூறின்றி இப்பணியினை செய்திட அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    மேலும் அவர்கள் ஓய்வாக இருக்கும் போதோ அல்லது பொருள்களை வாங்க ரேஷன் கடைக்கு வரும் போதோ கைவிரல் ரேகைப்பதிவு மூலம் புதுப்பிக்க கூறப்பட்டு, அக்டோபர்-2023 முதல் குடும்ப உறுப்பினர்களின் விரல்ரேகை சரிபார்ப்புப்பணி நடைபெற்று வருகிறது.

    சில நாளிதழ்களில் குறிப்பிட்டிருப்பது போல் குடும்ப அட்டைகள் ஏதும் ரத்து செய்யப்பட மாட்டாது. கைவிரல் ரேகை பதிவு செய்யாத குடும்ப உறுப்பினர்களின் பெயர்கள் நீக்கப்படாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    ட்விட்டர் அஞ்சல்

    ரேஷன் கார்டு ரத்தா?

    #JustIn | "ரேஷன் கடைகளில் குடும்ப அட்டைதாரர்களின் விரல்ரேகை சரிபார்ப்பு செய்யாதவர்கள் நீக்கம் செய்யப்படுவார்கள் என்பது தவறான தகவல்

    இதுவரை 63% குடும்ப அட்டைதாரர்களின் விவரங்கள் சரிபார்க்கப்பட்டுள்ளன. குடும்ப அட்டைதாரர்கள் அவரவர்கள் வசதிக்கேற்ப விவரங்களை புதுப்பித்துக் கொள்ளலாம்… pic.twitter.com/mLJSo1nScs

    — Sun News (@sunnewstamil) February 7, 2024
    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    தமிழக அரசு
    தமிழகம்
    தமிழ்நாடு
    தமிழ்நாடு செய்தி

    சமீபத்திய

    'கலாம்: இந்தியாவின் ஏவுகணை நாயகன்': டாக்டர் ஏபிஜே அப்துல் கலாமின் வாழ்க்கை வரலாற்றுப் படத்தில் நடிக்கும் தனுஷ் தனுஷ்
    ஆப்பிள் ஏர்ப்ளே பிழை, ஐபோன்களை ஹேக் செய்யக்கூடியதாக ஆக்குகிறதாம்: எவ்வாறு பாதுகாப்பது?  ஆப்பிள்
    இந்த ஹோண்டா ஸ்கூட்டரின் விலை ₹12 லட்சம்: அதன் அம்சங்களை தெரிந்துகொள்ளுங்கள் ஹோண்டா
    உங்கள் ஆர்டர்களை, ட்ரோன்கள் மூலம் ஒரு மணி நேரத்தில் டெலிவரி செய்யும் அமேசான் அமேசான்

    தமிழக அரசு

    எம்.எஸ்.தோனி தொடர்ந்த அவதூறு வழக்கு - ஐபிஎஸ் அதிகாரிக்கு சிறை தண்டனை  எம்எஸ் தோனி
    ரூ.6000 புயல் நிவாரண தொகைத் திட்டத்தை சென்னையில் தொடங்கி வைத்தார் முதல்வர் ஸ்டாலின்  தமிழ்நாடு
    அண்ணா பல்கலைக்கழகத்திற்கு உட்பட்ட 4 மாவட்ட செமஸ்டர் தேர்வுகள் ஒத்திவைப்பு கனமழை
    கனமழை எதிரொலி - திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களுக்கு நாளை பொது விடுமுறை அறிவிப்பு  ஆட்சியர்

    தமிழகம்

    செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனு: அமலாக்கத்துறை பதிலளிக்க உத்தரவு  செந்தில் பாலாஜி
    17 தமிழக மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை  புதுச்சேரி
    தமிழகத்தில் 29 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு; சென்னையில் கனமழைக்கு வாய்ப்பில்லை மழை
    பஸ் ஸ்ட்ரைக்: மதுரை தவிர மற்ற ஊர்களில் பேருந்துகள் வழக்கம்போல இயக்கம் போக்குவரத்து

    தமிழ்நாடு

    தமிழகம்: அடுத்த 7 நாட்களுக்கான வானிலை முன்னறிவிப்பு  புதுச்சேரி
     ஜனவரி 2ல் பிரதமர் மோடி தமிழ்நாடு வருகை; ₹19,850 கோடி மதிப்பிலான திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுகிறார் பிரதமர் மோடி
    தமிழகம்: அடுத்த 7 நாட்களுக்கான வானிலை முன்னறிவிப்பு  புதுச்சேரி
    தமிழகம்: அடுத்த 7 நாட்களுக்கான வானிலை முன்னறிவிப்பு  புதுச்சேரி

    தமிழ்நாடு செய்தி

    ஷிவ் தாஸ் மீனா தமிழக அரசின் புதிய தலைமை செயலாளராக நியமனம்; யார் அவர்? தமிழக அரசு
    தக்காளியை தொடர்ந்து மளிகை பொருட்களின் விலையும் ஏற்றம் தமிழ்நாடு
    முத்தமிழறிஞர் கலைஞர் பெயரில், செப்டம்பர் 15ஆம் தேதி முதல் மகளிர் உரிமை தொகை: தமிழக முதல்வர் தமிழ்நாடு
    "அமலாக்கத்துறையின் சோதனையை சட்டரீதியாக அமைச்சர் பொன்முடி சந்திப்பார்": முதலமைச்சர் ஸ்டாலின் ரெய்டு
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025