NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / லாலன் சிங் ராஜினாமா செய்ததைத் தொடர்ந்து, ஜேடியுவின் புதிய தலைவராக நிதிஷ்குமார் பொறுப்பேற்றார்
    அடுத்த செய்திக் கட்டுரை
    லாலன் சிங் ராஜினாமா செய்ததைத் தொடர்ந்து, ஜேடியுவின் புதிய தலைவராக நிதிஷ்குமார் பொறுப்பேற்றார்

    லாலன் சிங் ராஜினாமா செய்ததைத் தொடர்ந்து, ஜேடியுவின் புதிய தலைவராக நிதிஷ்குமார் பொறுப்பேற்றார்

    எழுதியவர் Srinath r
    Dec 29, 2023
    04:57 pm

    செய்தி முன்னோட்டம்

    டெல்லியில் வெள்ளிக்கிழமை பிற்பகல் நடைபெற்ற கட்சியின் தேசிய செயற்குழு கூட்டத்தில், பீகாரை ஆளும் ஐக்கிய ஜனதா தளத்தின்(ஜேடியு) தலைவராக மாநிலத்தின் முதல்வர் நிதிஷ் குமார் மீண்டும் ஒருமனதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

    நிதிஷ்குமார், அவரது சகாவான லாலன் சிங் ராஜினாமா செய்த சில நிமிடங்களில், மீண்டும் தலைவராக தேர்வானார். இதன் மூலம், பீகார் மாநில அரசியலில் பல வாரங்களாக நிலவி வந்த குழப்பம் முடிவுக்கு வந்தது.

    மாநிலத்தில் ஐக்கிய ஜனதா தளத்துடன் கூட்டணியில் உள்ள, லல்லு பிரசாத் யாதவன் ராஷ்டிரிய ஜனதா தள கட்சியுடன் லாலன் சிங் நெருக்கம் காட்டியதே, அவர் நீக்கப்படுவதற்கு காரணம் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

    2nd card

    தேர்தலை கருத்தில் கொண்டு விலகியதாக லாலன் சிங் விளக்கம்

    அடுத்த ஆண்டு வரவிருக்கும் நாடாளுமன்ற தேர்தலை கருத்தில் கொண்டு, தனது தொகுதியில் கவனம் செலுத்துவதற்காக லாலன் சிங் ராஜினாமா செய்ததாக, அதிகாரபூர்வ தகவல்கள் தெரிவிக்கின்றன.

    சிங், பீகாரின் முங்கர் தொகுதியில் இருந்து இரண்டு முறை மக்களவை எம்பியாக தேர்ந்தெடுக்கப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.

    "லாலன் சிங் தேர்தல் வேலைகளில் பரபரப்பாக இருப்பதால், கட்சி தலைமையை நிதிஷ்குமார் இடம் ஒப்படைக்க விரும்பினார். அதை அவரும் ஒப்புக்கொண்டார்" என பீகார் அமைச்சர் விஜய் குமார் சவுத்ரி தெரிவித்துள்ளார்.

    லாலன் சிங் தன்னை தலைவராக உருவாக்கிக் கொள்ள முடியாததால், அவர் மீது நிதீஷ் குமார் அதிருப்தியில் இருந்ததாகவும் தகவல்கள் கூறுகின்றன.

    3rd card

    பிரதமர் கனவிலிருந்த நித்திசுக்கு கிடைத்த கட்சி தலைவர் பதவி

    நாடாளுமன்றத் தேர்தலில் பாஜகவுக்கு எதிரான, இந்தியா கூட்டணியில் நிதிஷ்குமாரின் ஐக்கிய ஜனதா தளம் இடம் பெற்றுள்ளது.

    இந்த கூட்டணியின் பிரதமர் வேட்பாளராக நிதீஷ் குமார் விரும்புவதாக கூறப்படும் நிலையில், அவர் மீண்டும் கட்சிக்கு தலைமை ஏற்றுள்ளார்.

    இருப்பினும், கூட்டணியில் உள்ள ஆம் ஆத்மி, அகில இந்திய திரிணாமுல் காங்கிரசு உள்ளிட்ட கட்சிகள், காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கேவை பிரதமர் வேட்பாளராக முன்மொழிந்தனர்.

    இதனால், இந்தியா கூட்டணியில் விரிசல் ஏற்பட்டதாக கூறப்பட்ட நிலையில், நித்திஷ் குமார் அந்த வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்தார்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    நிதிஷ் குமார்
    பீகார்
    டெல்லி
    பிரதமர்

    சமீபத்திய

    தமிழ்நாட்டில் SSLC பொதுத்தேர்வு முடிவுகள் வெளியீடு: தேர்ச்சி விகிதம் 93.80% தமிழ்நாடு
    'Thug Life' படப்பிடிப்பு தளத்தில் கமலிடம் 'தக் லைஃப் மொமெண்ட்' காட்டிய சிம்பு; அவரே பகிர்ந்த சுவாரசிய தகவல் கமல்ஹாசன்
    மாணவர்கள் கவனத்திற்கு, SSLC மற்றும் பிளஸ் 1 பொதுத்தேர்வு முடிவுகள் இன்று வெளியீடு பொதுத்தேர்வு
    முதன்முறையாக, தாலிபான் வெளியுறவுத்துறை அமைச்சரிடம் பேசிய இந்தியா வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் எஸ்.ஜெய்சங்கர்

    நிதிஷ் குமார்

    பீகாரில் 30 பள்ளி மாணவர்களை ஏற்றிச்சென்ற படகு கவிழ்ந்து விபத்து பீகார்
    இந்தியா கூட்டணியில் தொய்வா? பீகார் முதல்வருடன் உரையாடிய மல்லிகார்ஜுன கார்கே  மல்லிகார்ஜுன் கார்கே
    சட்டசபையில் கொச்சையாக பேசியதற்கு மன்னிப்பு கேட்டார் பீகார் முதல்வர் நிதிஷ் குமார்  பீகார்

    பீகார்

    பீகார் பாலம் இடிந்து விழுந்ததற்கு முதல்வர் நிதிஷ் குமார் அளித்த பதில் இந்தியா
    முகங்களை அடையாளம் கண்டு கள்ள ஓட்டுகளை தடுக்கும் புதிய தொழிநுட்பம் இந்தியா
    கலைஞர் கோட்டம் திறப்பு விழா - பீகார் முதல்வரின் தமிழக வருகை திடீர் ரத்து  கருணாநிதி
    தேசியளவிலான எதிர்க்கட்சிகள் பொதுக்கூட்டம் - பாட்னா செல்கிறார் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் மு.க ஸ்டாலின்

    டெல்லி

    தூதரக பதிவு எண்ணில் போலி கார்- டெல்லி காவல்துறையினர் மற்றும் வெளியுறவுத் துறையை எச்சரித்த சிங்கப்பூர் தூதர் சிங்கப்பூர்
    சௌமியா விஸ்வநாதன் கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட 4 பேருக்கும் ஆயுள் தண்டனை  கொலை
    கணவன்-மனைவி சண்டையால் பாதியிலேயே டெல்லியில் தரையிறக்கப்பட்ட தாய்லாந்து விமானம்  தாய்லாந்து
    காலிஸ்தான் பிரிவினைவாதி விவகாரத்தில் இந்திய அரசு அதிகாரி மீது அமெரிக்கா வழக்குப்பதிவு: தகுந்த நடவடிக்கை எடுப்பதாக இந்தியா உறுதி காலிஸ்தான் ஆதரவாளர்கள்

    பிரதமர்

    இஸ்ரேல் தாக்குதலில் காசா மருத்துவமனையில் 12 பேர் கொல்லப்பட்டனர்- ஹமாஸ் சுகாதார அமைச்சகம் இஸ்ரேல்
    சர்வதேச தீர்மானங்களை மீறி உளவு செயற்கைக்கோளை ஏவும் வடகொரியா வட கொரியா
    ஜனவரி 12ம்.,தேதி நாடாளுமன்ற முற்றுகை போராட்டம் - இந்தியா கூட்டணியின் மாணவர் அமைப்பு அறிவிப்பு  எதிர்க்கட்சிகள்
    டிசம்பர் 1 முதல் இந்தியர்களுக்கு இலவச விசாவை அறிவித்தது மலேசியா மலேசியா
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025