NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / தமிழ்நாட்டில் நிபா வைரஸ் தாக்கம் இதுவரை கண்டறியப்படவில்லை - மா.சுப்பிரமணியம்
    அடுத்த செய்திக் கட்டுரை
    தமிழ்நாட்டில் நிபா வைரஸ் தாக்கம் இதுவரை கண்டறியப்படவில்லை - மா.சுப்பிரமணியம்
    தமிழ்நாட்டில் நிபா வைரஸ் தாக்கம் இதுவரை கண்டறியப்படவில்லை - மா.சுப்பிரமணியம்

    தமிழ்நாட்டில் நிபா வைரஸ் தாக்கம் இதுவரை கண்டறியப்படவில்லை - மா.சுப்பிரமணியம்

    எழுதியவர் Nivetha P
    Sep 16, 2023
    02:48 pm

    செய்தி முன்னோட்டம்

    டெங்கு தடுப்பு நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை மேற்கொள்ள தமிழ்நாடு மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியம் இன்று(செப்.,16) சென்னை ஓமந்தூரார் மருத்துவமனைக்கு சென்றார்.

    அங்கு ஆலோசனை கூட்டம் நடந்து முடிந்த பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் பாதிப்பானது அதிகரித்து விட கூடாது என்னும் நோக்கில் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.

    இதுகுறித்து தலைமை செயலாளர் தலைமையிலும் ஆலோசனை கூட்டமானது நடத்தப்பட்டது என்று கூறினார்.

    தமிழகத்தில் உள்ள இணை-துணை இயக்குனர்கள் மற்றும் டீன்கள் என கிட்டத்தட்ட 296 மருத்துவ அதிகாரிகளுடன் நடந்த இந்த ஆலோசனை கூட்டத்தில் மழைக்கால தொற்று பரவல், கொசு மற்றும் டெங்கு ஒழிப்பு குறித்த நடவடிக்கைகளை எடுக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது என்றும் தெரிவித்துள்ளார்.

    அமைச்சர் 

    தமிழகத்தின் எல்லை மாவட்டங்களில் தீவிர கண்காணிப்பு 

    தொடர்ந்து பேசிய அவர், கேரளாவில் அதிகளவு பரவி வரும் நிபா வைரஸ் தமிழகத்தில் இதுவரை கண்டறியப்படவில்லை என்று கூறியுள்ளார்.

    எனினும், தமிழகத்தின் 6 எல்லை மாவட்டங்களில் நோய் தொற்று குறித்து தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது என்றும் தகவல் அளித்துள்ளார்.

    மேலும், மழைக்காலங்களில் இது போன்று டெங்கு, மலேரியா காய்ச்சல் பரவுவது சகஜம் தான் என்றும் கூறியதாக தெரிகிறது.

    இதனிடையே கடந்த ஜனவரி மாதம் முதல் தமிழ்நாட்டில் இதுவரை 4 ஆயிரத்து 48 பேர் டெங்குவால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்றும், மக்கள் அடுத்த 3 மாதங்களுக்கு கவனமாக இருக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    டெங்கு காய்ச்சல்
    நிபா வைரஸ்
    தமிழ்நாடு

    சமீபத்திய

    சென்னையில் அதிகாலை முதல் மிதமழை; தமிழகத்தில் இன்று கனமழை எச்சரிக்கை எங்கே? தமிழகம்
    தீவிரமான புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ள முன்னாள் அமெரிக்கா அதிபர் ஜோ பைடன் ஜோ பைடன்
    ஜூன் 3 ஆம் தேதி டாடா ஹாரியர் EV அறிமுகம்: என்ன எதிர்பார்க்கலாம்? டாடா மோட்டார்ஸ்
    மாம்பழம், பப்பாளி, வாழைப்பழம்- சாப்பிட மட்டுமல்ல, பளபளப்பான சருமத்திற்கான மாஸ்க்காகவும் பயன்படுத்தலாம் சரும பராமரிப்பு

    டெங்கு காய்ச்சல்

    தேசிய டெங்கு தினம் 2023: டெங்கு பற்றி நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய உண்மைகள்! ஹெல்த் டிப்ஸ்
    டெங்கு தடுப்பூசி: 3வது கட்ட சோதனை விரையில் தொடங்க இருக்கிறது  இந்தியா
    டெங்கு காய்ச்சல் பரவலை தடுப்பதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் - பொது சுகாதாரத்துறை  சென்னை
    கேரளாவில் அதிகரிக்கும் டெங்கு - தமிழகத்தில் கண்காணிப்பு நடவடிக்கைகள் தீவிரம்  சுகாதாரத் துறை

    நிபா வைரஸ்

    கேரளத்தில் பயங்கரமான நிபா வைரஸால் பரபரப்பு: 7 கிராமங்களில் பள்ளிகள், வங்கிகள் மூடல்  கோழிக்கோடு
    அச்சுறுத்தும் நிபா வைரஸ்: அறிகுறிகளும், தற்காப்பு நடவடிக்கைகளும் என்ன வைரஸ்
    கேரளாவில் நிபா வைரஸ்: 5 பேருக்கு பாதிப்பு உறுதி, தொடர்பு பட்டியலில் 700 பேர் கோழிக்கோடு
    நிபா வைரஸ்: இறந்தவரின் தோப்புக்குள் வௌவால்கள் காணப்படுவதாக தகவல் கோழிக்கோடு

    தமிழ்நாடு

    25-க்கும் மேற்பட்ட சுங்கச்சாவடிகளில் இன்று முதல் கட்டணம் உயர்வு வாகனம்
    மேட்டுப்பாளையும் ரயில் நிலையத்தின் 150வது ஆண்டுவிழாக் கொண்டாட்டம் கோயம்புத்தூர்
    ப்ரீ-ஃபயர் கேம் விளையாடியதால் நேர்ந்த விபரீதம் : 8ம் வகுப்பு மாணவன் தற்கொலை தற்கொலை
    ஆதித்யா L1 திட்டத்திற்கும் திட்ட இயக்குநராக நியமிக்கப்பட்டிருக்கும் தமிழர் ஆதித்யா L1
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025