NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil

    இந்தியா உலகம் வணிகம் விளையாட்டு தொழில்நுட்பம் பொழுதுபோக்கு ஆட்டோ வாழ்க்கை காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
     
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / நிபா வைரஸால் பாதிக்கப்பட்டவர்கள் 70% உயிரிழக்க வாய்ப்பு: அதிர்ச்சி தகவல் 
    நிபா வைரஸால் பாதிக்கப்பட்டவர்கள் 70% உயிரிழக்க வாய்ப்பு: அதிர்ச்சி தகவல் 
    1/2
    இந்தியா 1 நிமிட வாசிப்பு

    நிபா வைரஸால் பாதிக்கப்பட்டவர்கள் 70% உயிரிழக்க வாய்ப்பு: அதிர்ச்சி தகவல் 

    எழுதியவர் Sindhuja SM
    Sep 16, 2023
    12:27 pm
    நிபா வைரஸால் பாதிக்கப்பட்டவர்கள் 70% உயிரிழக்க வாய்ப்பு: அதிர்ச்சி தகவல் 
    கேரளாவின் கோழிக்கோட்டில் நேற்று புதிதாக ஒரு நிபா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டது.

    கொரோனா நோயால் பாதிக்கப்பட்டவர்களை விட நிபா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் இறப்பு விகிதம் மிக அதிகம் என்று இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில்(ஐசிஎம்ஆர்) தலைவர் டாக்டர் ராஜீவ் பால் தெரிவித்துள்ளார். டாக்டர் பாஹ்லின் கூற்றுப்படி, கோவிட் நோயால் பாதிக்கப்பட்டவர்கள் உயிரிழப்பதற்கு 2-3 சதவீதம் மட்டுமே வாய்ப்புள்ளது. ஆனால், நிபா வைரஸால் பாதிக்கப்பட்டவர்கள் உயிரிழப்பதற்கு 40-70 சதவீதம் வாய்ப்புள்ளது. கேரளாவின் கோழிக்கோட்டில் நேற்று புதிதாக ஒரு நிபா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. இதனையடுத்து, கேரளாவில் நிபா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 6 ஆக உயர்ந்துள்ளது. அதில் ஏற்கனவே 2 பேர் உயிரிழந்துவிட்டனர். இந்த 6 நோயாளிகளை தெரியாமல் தொடர்பு கொண்டவர்களின் எண்ணிக்கை 1,080ஆக உயர்ந்துள்ளது. இவர்கள் அனைவரும் தற்போது சுகாதாரத்துறையின் கண்காணிப்பில் உள்ளனர்.

    2/2

    நிபா வைரஸுக்கு தடுப்பூசி உருவாக்க ஐசிஎம்ஆர் திட்டம் 

    கேரளாவில் இந்த வைரஸின் பாதிப்புகள் அதிகரித்து வரும் நிலையில், நிபா வைரஸ் தொற்றுக்கு சிகிச்சை அளிக்க மேலும் 20 டோஸ் மோனோக்ளோனல் ஆன்டிபாடியை வழங்குமாறு ஆஸ்திரேலியாவுக்கு இந்தியா அழைப்பு விடுத்துள்ளது. இதற்கிடையில், நிபா வைரஸ் நோய்க்கு எதிரான தடுப்பூசியை உருவாக்கும் பணியை தொடங்க திட்டமிட்டுள்ளதாக ஐசிஎம்ஆர் தெரிவித்துள்ளது. "2018 ஆம் ஆண்டில் ஆஸ்திரேலியாவில் இருந்து சில டோஸ் மோனோக்ளோனல் ஆன்டிபாடியைப் பெற்றோம். ஆனால், தற்போது, ​​10 நோயாளிகளுக்கு மட்டுமே அந்த டோஸ்கள் போதுமானதாக இருக்கும்," என்று டாக்டர் ராஜீவ் பால் கூறியுள்ளார். இந்தியாவுக்கு வெளியே நிபா வைரஸால் பாதிக்கப்பட்ட 14 பேர் மோனோக்ளோனல் ஆன்டிபாடி சிகிச்சைக்குப் பிறகு பூரண குணமடைந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    கேரளா
    இந்தியா
    நிபா வைரஸ்

    கேரளா

    நிபா வைரஸ்: இறந்தவரின் தோப்புக்குள் வௌவால்கள் காணப்படுவதாக தகவல் நிபா வைரஸ்
    கேரளாவில் நிபா வைரஸ்: 5 பேருக்கு பாதிப்பு உறுதி, தொடர்பு பட்டியலில் 700 பேர் நிபா வைரஸ்
    கேரளத்தில் பயங்கரமான நிபா வைரஸால் பரபரப்பு: 7 கிராமங்களில் பள்ளிகள், வங்கிகள் மூடல்  கோழிக்கோடு
    கேரளாவிற்கு நிபா வைரஸ் எச்சரிக்கை: 2 பேர் 'இயற்கைக்கு மாறான' முறையில் பலி  இந்தியா

    இந்தியா

    4வது நாளாக தொடரும் காஷ்மீர் பயங்கரவாத என்கவுண்டர்: இதன் நோக்கம் என்ன? ஜம்மு காஷ்மீர்
    இன்றைய தங்கம் வெள்ளி விலை நிலவரம்: செப்டம்பர் 16 தங்கம் வெள்ளி விலை
    உள்நாட்டு கச்சா எண்ணெய் மீதான விண்டுஃபால் வரியை உயர்த்திய மத்திய அரசு வணிகம்
    Sports Round Up : ஐசிசி தரவரிசையில் இந்தியா முன்னேற்றம்; பேட்மிண்டனில் இந்திய ஜோடி தோல்வி; டாப் விளையாட்டு செய்திகள் ஐசிசி

    நிபா வைரஸ்

    நிபா வைரஸ் எதிரொலி - கேரளா கோழிக்கோட்டில் 24ம் தேதி வரை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை கொரோனா
    அச்சுறுத்தும் நிபா வைரஸ்: அறிகுறிகளும், தற்காப்பு நடவடிக்கைகளும் என்ன வைரஸ்
    தமிழ்நாட்டில் நிபா வைரஸ் தாக்கம் இதுவரை கண்டறியப்படவில்லை - மா.சுப்பிரமணியம் டெங்கு காய்ச்சல்
    புதுச்சேரி-மாகே பள்ளி கல்லூரிகளுக்கு செப்.24 வரை விடுமுறை புதுச்சேரி
    அடுத்த செய்திக் கட்டுரை

    இந்தியா செய்திகளை விரும்புகிறீர்களா?

    புதுப்பித்த நிலையில் இருக்க குழுசேரவும்.

    India Thumbnail
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2023