NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / கனடாவில் கொல்லப்பட்ட காலிஸ்தான் பயங்கரவாதியை ஏன் இந்தியா தேடி வந்தது?
    அடுத்த செய்திக் கட்டுரை
    கனடாவில் கொல்லப்பட்ட காலிஸ்தான் பயங்கரவாதியை ஏன் இந்தியா தேடி வந்தது?
    நிஜ்ஜார் தடை செய்யப்பட்ட காலிஸ்தான் புலிப் படையின்( KTF) தலைவராவார்.

    கனடாவில் கொல்லப்பட்ட காலிஸ்தான் பயங்கரவாதியை ஏன் இந்தியா தேடி வந்தது?

    எழுதியவர் Sindhuja SM
    Sep 23, 2023
    07:18 pm

    செய்தி முன்னோட்டம்

    வரலாற்று நிகழ்வு: கடந்த ஜூன் மாதம் கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியாவில் வைத்து, காலிஸ்தான் பயங்கரவாதியான ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கொல்லப்பட்டார். அவரது கொலையில் இந்திய அரசாங்கத்திற்கு நேரடி தொடர்பு இருப்பதாக கனட அரசாங்கம் பெரும் குற்றசாட்டை முன்வைத்துள்ளது.

    இந்நிலையில், காலிஸ்தான் பயங்கரவாதி ஹர்தீப் சிங் நிஜ்ஜார் இந்தியாவில் நடத்திய தாக்குதல்களின் பட்டியல் ஒன்று வெளியாகியுள்ளது. அந்த பட்டியலை இப்போது பார்க்கலாம்.

    காலிஸ்தான் பயங்கரவாதி ஹர்தீப் சிங் நிஜ்ஜார், கனேடிய மண்ணில் பயங்கரவாத குழுக்கள் மற்றும் தனிநபர்களுக்கு பயிற்சி அளித்தல், நிதியளித்தல் போன்ற விஷயங்களில் தீவிரமாக ஈடுபட்டுருந்தார் என்று உளவுத்துறை தெரிவித்திள்ளது.

    நிஜ்ஜார் தடை செய்யப்பட்ட காலிஸ்தான் புலிப் படையின்( KTF) தலைவராவார்.

    வ்ஜ்க

    போலி பாஸ்போர்ட்டை வைத்து கனடாவுக்கு தப்பி சென்ற நிஜ்ஜார்

    1980கள் மற்றும் 1990களில், காலிஸ்தான் கமாண்டோ படை (KCF) தீவிரவாதிகளுடன் நிஜ்ஜார் தொடர்பில் இருந்தார்.

    2012இல் அவர் காலிஸ்தான் புலிப் படையின்( KTF) தலைவரானார்.

    இதற்கிடையில், 1996ஆம் ஆண்டு "ரவி ஷர்மா" என்ற பெயரில் போலி பாஸ்போர்ட்டை தயார் செய்த நிஜ்ஜார், கனடாவிற்கு தப்பிச் சென்று அங்கு டிரக் டிரைவராகவும், பிளம்பராகவும் பணியாற்றி வந்தார்.

    மேலும், அவர் கனடாவில் இந்தியாவுக்கு எதிரான வன்முறை போராட்டங்களை ஏற்பாடு செய்தும் இந்திய தூதர்களை அச்சுறுத்தியும் தீவிரவாத செயல்களில் ஈடுபட்டு வந்தார்.

    கனடாவில் உள்ள உள்ளூர் குருத்வாராக்கள் நடத்தும் பல்வேறு நிகழ்ச்சிகளில் இந்திய தூதரக அதிகாரிகள் கலந்து கொள்ள தடை விதிக்க வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்து வந்தார்.

    டவ்க்கி

    2007ஆம் ஆண்டில் கனேடிய குடிமகன் ஆன நிஜ்ஜார் 

    அவர் கனடாவில் ஆயுதப் பயிற்சி முகாம்களை ஏற்பாடு செய்து, அங்கு AK-47 போன்ற துப்பாக்கிகளைப் பயன்படுத்த தனிநபர்களுக்கு பயிற்சி அளித்தார்.

    கனடாவில் குடியேறுவதற்கு தனக்கு நிதியுதவி செய்த ஒரு பெண்ணை அவர் 1996இல் மணந்துகொண்டார் என்று கூறப்பட்டது.

    ஆனால், அந்த பெண் 1997ஆம் ஆண்டு கனடாவிற்கு சென்று வேறொரு ஆணுடன் திருமணம் செய்து கொண்டார்.

    அதனால், அவரால் அப்போது கனேடிய குடிமகனாக ஆக முடியவில்லை.

    2001இல், நிஜ்ஜார் அந்த தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்தார். ஆனால், அது அவருக்கு சாதகமாக முடியவில்லை.

    2007ஆம் ஆண்டில்தான் அவர் கனேடிய குடிமகன் ஆனார்.

    ஆரம்பத்தில் பாபர் கல்சா இன்டர்நேஷனல்(BKI) அமைப்பின் செயல்பாட்டாளராக இருந்த நிஜ்ஜார், KTF தலைவரும் பயங்கரவாதியுமான ஜக்தர் சிங் தாராவுடன் தொடர்பு கொண்டார்.

    துஜோய்வ்க்

    நிஜ்ஜாருக்கு பாகிஸ்தானில் பயங்கரவாத பயிற்சி அளிக்கப்பட்டது 

    KTF தலைவரும் பயங்கரவாதியுமான ஜக்தர் சிங் தாரா, முன்னாள் பஞ்சாப் முதல்வர் பியாந்த் சிங்கின் கொலையாளியாவார். அவர் பாகிஸ்தானை சேர்ந்தவர்.

    பைசாகி ஜாதா அமைப்பின் உறுப்பினர் போல நடித்து, ஜக்தர் சிங் தாராவை சந்திக்க நிஜ்ஜார் ஏப்ரல் 2012ல் பாகிஸ்தானுக்குச் சென்றார்.

    2012 மற்றும் 2013 ஆம் ஆண்டுகளில் நிஜ்ஜாருக்கு ஆயுதங்கள் மற்றும் வெடிபொருட்கள் பயிற்சி அளிக்கப்பட்டது.

    ஐஎஸ்ஐ மற்றும் ஜக்தர் சிங் தாரா மூலம், நிஜ்ஜாருக்கு ஆயுதங்கள் மற்றும் வெடிபொருட்கள் பயிற்சி அளிக்கப்பட்டது.

    2013இல் நிஜ்ஜார் KTFஇல் சேர்ந்தார்.

    அதன்பின், KTF ஐ வலுப்படுத்துவதற்கும், பஞ்சாபில் பயங்கரவாத நடவடிக்கைகளை ஒழுங்கமைப்பதற்கும் 2013 மற்றும் 2014ஆம் ஆண்டுகளில் பயங்கரவாதிகளை சந்திக்க அவர் மீண்டும் பாகிஸ்தானுக்குச் சென்றார்.

    ஏ யப

    2018 'மோஸ்ட் வாண்டட்' பட்டியலில் நிஜ்ஜார் 

    2013ஆம் ஆண்டில், அமெரிக்காவைச் சேர்ந்த ஹர்ஜோத் சிங் பைரிங் மற்றும் நிஜ்ஜார் ஆகியோர் கையடக்க ஜிபிஎஸ் சாதனங்களில் பயிற்சி பெற கனடாவுக்கு அனுப்பப்பட்டனர்.

    2015ஆம் ஆண்டில், ஜக்தர் சிங் தாரா தாய்லாந்தில் இருந்து இந்தியாவுக்கு நாடு கடத்தப்பட்ட பிறகு, நிஜ்ஜார் KTFயின் தலைவர் ஆனார்.

    பஞ்சாபில் பல பயங்கரவாத தாக்குதல்கள் நிஜ்ஜரால் நடத்தப்பட்டதாகக் கூறப்படுகிறது.

    பிப்ரவரி 2018இல் கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவிடம் அப்போதைய பஞ்சாப் முதல்வர் கேப்டன் அமரீந்தர் சிங் வழங்கிய 'மோஸ்ட் வாண்டட்' பட்டியலில் நிஜ்ஜாரின் பெயர் இடம்பெற்றிருந்தது

    பஞ்சாபின் ஜலந்தர் மாவட்டத்தில் உள்ள பர்சிங்பூரைச் சேர்ந்த நிஜ்ஜார், பயங்கரவாதம் தொடர்பான நடவடிக்கைகளில் நீண்டகாலமாக ஈடுபட்டிருந்ததாக உளவுத்துறை ஆவணத்தில் கூறப்பட்டுள்ளது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    இந்தியா
    காலிஸ்தான் ஆதரவாளர்கள்
    கனடா
    உலகம்

    சமீபத்திய

    ஜூன் 3 ஆம் தேதி டாடா ஹாரியர் EV அறிமுகம்: என்ன எதிர்பார்க்கலாம்? டாடா மோட்டார்ஸ்
    மாம்பழம், பப்பாளி, வாழைப்பழம்- சாப்பிட மட்டுமல்ல, பளபளப்பான சருமத்திற்கான மாஸ்க்காகவும் பயன்படுத்தலாம் சரும பராமரிப்பு
    ஐபிஎல் 2025: ஜெய்ப்பூரில் பஞ்சாப் கிங்ஸ் அணி முதல் இன்னிங்ஸில் அதிகபட்ச ஸ்கோரை பதிவு செய்தது பஞ்சாப் கிங்ஸ்
    'ஆபரேஷன் சிந்தூர்' பதிவு தொடர்பாக அசோகா பல்கலைக்கழக பேராசிரியர் கைது  ஹரியானா

    இந்தியா

    பெண்களுக்கான இடஒதுக்கீடு மசோதாவுக்கு ஒப்புதல் அளித்தது மத்திய அமைச்சரவை  நாடாளுமன்றம்
    காலிஸ்தான் பயங்கரவாதியை கொன்றதாக கூறி உயர்மட்ட இந்திய அதிகாரியை வெளியேற்றியது கனடா  கனடா
    இந்திய-கனட மோதலுக்கு காரணமான காலிஸ்தான் பயங்கரவாதி: யாரிந்த ஹர்தீப் சிங் நிஜ்ஜார்?  கனடா
    இன்றைய தங்கம் வெள்ளி விலை நிலவரம்: செப்டம்பர் 19 தங்கம் வெள்ளி விலை

    காலிஸ்தான் ஆதரவாளர்கள்

    காலிஸ்தான் ஆதரவாளர்கள் பிரச்சனை: செய்தியாளர்களை சந்தித்த பஞ்சாப் ஐஜிபி இந்தியா
    மகாத்மா காந்தி சிலையை சிதைத்த காலிஸ்தான் ஆதரவாளர்கள் கனடா
    அமெரிக்காவில் காலிஸ்தான் ஆதரவாளர்களுக்கு எதிராக இந்தியர்கள் நடத்திய அமைதி பேரணி இந்தியா
    பிபிசி பஞ்சாப் ட்விட்டர் கணக்கு முடக்கம்: இந்தியாவுக்கு எதிரான தகவல்களை பரப்பியதாக குற்றசாட்டு இந்தியா

    கனடா

    'சல்மான் கானை கண்டிப்பாக கொல்வோம்': கனடாவை சேர்ந்த ரவுடி மிரட்டல்  இந்தியா
    அமெரிக்க H1-B விசா வைத்திருப்பவர்கள் இனி கனடாவிலும் வேலை செய்யலாம்  அமெரிக்கா
    கனடாவில் இருக்கும் இந்திய தூதர்களுக்கு மிரட்டல்: இந்தியா கவலை இந்தியா
    காலிஸ்தான் பிரச்சனை: கனட நாட்டு தூதருக்கு சம்மன் அனுப்பியது மத்திய அரசு  காலிஸ்தான் ஆதரவாளர்கள்

    உலகம்

    'ஜி20 மாநாட்டில் சீன அதிபர் கலந்து கொள்ளாதது ஏமாற்றம் அளிக்கிறது': ஜோ பைடன்  அமெரிக்கா
    சர்ச்சைக்குரிய சுவரொட்டிகளை வெளியிட்டதால் கனடா பள்ளியில் நடத்தப்பட இருந்த காலிஸ்தான் நிகழ்ச்சி ரத்து கனடா
    ஜி20 உச்சி மாநாட்டில் சீன அதிபருக்கு பதிலாக கலந்து கொள்ள இருக்கும் லீ கியாங்: யார் இவர்? சீனா
    ஜோ பைடனின் இந்திய பயணத்திற்கு முன்னதாக அவரது மனைவிக்கு திடீர் கொரோனா பாதிப்பு  அமெரிக்கா
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025