NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil

    இந்தியா உலகம் வணிகம் விளையாட்டு தொழில்நுட்பம் பொழுதுபோக்கு ஆட்டோ வாழ்க்கை காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
     
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / மரணதண்டனை மனு விசாரணை: யாசின் மாலிக்கை ஒசாமா பின்லேடனுடன் ஒப்பிட்ட NIA
    மரணதண்டனை மனு விசாரணை: யாசின் மாலிக்கை ஒசாமா பின்லேடனுடன் ஒப்பிட்ட NIA
    இந்தியா

    மரணதண்டனை மனு விசாரணை: யாசின் மாலிக்கை ஒசாமா பின்லேடனுடன் ஒப்பிட்ட NIA

    எழுதியவர் Sindhuja SM
    May 29, 2023 | 05:17 pm 1 நிமிட வாசிப்பு
    மரணதண்டனை மனு விசாரணை: யாசின் மாலிக்கை ஒசாமா பின்லேடனுடன் ஒப்பிட்ட NIA
    சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, அல்கொய்தா தலைவர் ஒசாமா பின்லேடனுடன் மாலிக்கை ஒப்பிட்டுப் பேசினார்.

    பயங்கரவாதத்திற்கு நிதியுதவி அளித்த வழக்கில், பிரிவினைவாத தலைவரும், ஜம்மு காஷ்மீர் விடுதலை முன்னணியின்(JLF) தலைவருமான யாசின் மாலிக்கிற்கு மரண தண்டனை வழங்கக் கோரி தேசிய புலனாய்வு அமைப்பு(NIA) டெல்லி உயர் நீதிமன்றத்தை அணுகியுள்ளது. NIA சமர்ப்பித்த மனுவை இன்று விசாரித்த உயர் நீதிமன்றம், தற்போது ஆயுள் தண்டனை அனுபவித்து வரும் மாலிக்கிற்கு நோட்டீஸ் அனுப்பியது. நீதிபதிகள் சித்தார்த் மிருதுல் மற்றும் தல்வந்த் சிங் ஆகியோர் அடங்கிய அமர்வு, ஆகஸ்ட் 9 ஆம் தேதி மாலிக்கை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த பிடிவாரண்ட் பிறப்பித்தது. விசாரணையின் போது, ​​NIA சார்பில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, அல்கொய்தா தலைவர் ஒசாமா பின்லேடனுடன் மாலிக்கை ஒப்பிட்டுப் பேசினார்.

    அமெரிக்கா செய்தது சரி என்று நான் நினைக்கிறேன்: மேத்தா

    "இந்த நீதிமன்றத்தில் ஒசாமா பின்லேடன் இருந்திருந்தால், அவர் அதை போல் தான் நடத்தப்பட்டிருப்பார்" என்று மேத்தா கூறினார். குற்றம் சாட்டப்பட்டவர் பயங்கரவாத மற்றும் பிரிவினைவாத நடவடிக்கைகளில் ஈடுபட்டதாகவும், இதை "அரிதான" வழக்காகக் கருதி மரண தண்டனை வழங்க வேண்டும் என்றும் SG துஷார் மேத்தா வாதிட்டார். இதற்கு பதிலளித்த நீதிபதி மிருதுல், உலகெங்கிலும் உள்ள எந்த நீதிமன்றத்திலும் ஒசாமா ஆஜர்படுத்தப்படவில்லை என்பதால் இருவரையும் ஒப்பிட முடியாது என்று கூறினார். அப்போது, "அமெரிக்கா செய்தது சரி என்று நான் நினைக்கிறேன்," என்று மேத்தா கூறினார். ஆனால், இதற்கு நீதிபதி மிருதுல் கருத்து தெரிவிக்க மறுத்துவிட்டார். தற்போது, ஆகஸ்ட் 9 ஆம் தேதி மாலிக் நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என்ற நோட்டீஸ் மட்டும் பிறப்பிக்கப்பட்டுள்ளது.

    இந்த காலவரிசையைப் பகிரவும்
    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    இந்தியா
    உயர்நீதிமன்றம்

    இந்தியா

    தமிழகத்தில் முதல் முறையாக கேலோ இந்தியா விளையாட்டுப் போட்டிகள் நடத்த மத்திய அரசு ஒப்புதல்! தமிழகம்
    இந்தியாவில் ஸ்டார்ட்-அப்பை பதிவு செய்வதற்கான வழிமுறை என்ன? ஸ்டார்ட்அப்
    ஊழல் வழக்கு: ரோல்ஸ் ராய்ஸ் மீது சிபிஐ வழக்கு பதிவு  ரோல்ஸ் ராய்ஸ்
    சர்வதேச தடகள போட்டியில் தங்கம் வென்ற தமிழக வீரர் செல்வ பி திருமாறன்! தடகள போட்டி

    உயர்நீதிமன்றம்

    ஆடல் பாடல் நிகழ்ச்சிகளுக்கு புதிய உத்தரவு பிறப்பிக்க தேவையில்லை - மதுரை உயர்நீதிமன்றம் தமிழ்நாடு
    சடலங்களுடன் உடலுறவு கொள்வதற்கு எதிராக சட்டம் இயற்றப்பட வேண்டும்: உயர்நீதிமன்றம் இந்தியா
    வனப் பாதுகாப்பு மசோதா தமிழ் மொழியில் வெளியிடப்படும்: மத்திய அரசு  இந்தியா
    பெண்ணின் நிர்வாண உடலை ஆபாசமாக கருதக்கூடாது: கேரள உயர்நீதிமன்றம்  இந்தியா
    அடுத்த செய்திக் கட்டுரை

    இந்தியா செய்திகளை விரும்புகிறீர்களா?

    புதுப்பித்த நிலையில் இருக்க குழுசேரவும்.

    India Thumbnail
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2023