NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / மரணதண்டனை மனு விசாரணை: யாசின் மாலிக்கை ஒசாமா பின்லேடனுடன் ஒப்பிட்ட NIA
    அடுத்த செய்திக் கட்டுரை
    மரணதண்டனை மனு விசாரணை: யாசின் மாலிக்கை ஒசாமா பின்லேடனுடன் ஒப்பிட்ட NIA
    சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, அல்கொய்தா தலைவர் ஒசாமா பின்லேடனுடன் மாலிக்கை ஒப்பிட்டுப் பேசினார்.

    மரணதண்டனை மனு விசாரணை: யாசின் மாலிக்கை ஒசாமா பின்லேடனுடன் ஒப்பிட்ட NIA

    எழுதியவர் Sindhuja SM
    May 29, 2023
    05:17 pm

    செய்தி முன்னோட்டம்

    பயங்கரவாதத்திற்கு நிதியுதவி அளித்த வழக்கில், பிரிவினைவாத தலைவரும், ஜம்மு காஷ்மீர் விடுதலை முன்னணியின்(JLF) தலைவருமான யாசின் மாலிக்கிற்கு மரண தண்டனை வழங்கக் கோரி தேசிய புலனாய்வு அமைப்பு(NIA) டெல்லி உயர் நீதிமன்றத்தை அணுகியுள்ளது.

    NIA சமர்ப்பித்த மனுவை இன்று விசாரித்த உயர் நீதிமன்றம், தற்போது ஆயுள் தண்டனை அனுபவித்து வரும் மாலிக்கிற்கு நோட்டீஸ் அனுப்பியது.

    நீதிபதிகள் சித்தார்த் மிருதுல் மற்றும் தல்வந்த் சிங் ஆகியோர் அடங்கிய அமர்வு, ஆகஸ்ட் 9 ஆம் தேதி மாலிக்கை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த பிடிவாரண்ட் பிறப்பித்தது.

    விசாரணையின் போது, ​​NIA சார்பில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, அல்கொய்தா தலைவர் ஒசாமா பின்லேடனுடன் மாலிக்கை ஒப்பிட்டுப் பேசினார்.

    details

    அமெரிக்கா செய்தது சரி என்று நான் நினைக்கிறேன்: மேத்தா

    "இந்த நீதிமன்றத்தில் ஒசாமா பின்லேடன் இருந்திருந்தால், அவர் அதை போல் தான் நடத்தப்பட்டிருப்பார்" என்று மேத்தா கூறினார்.

    குற்றம் சாட்டப்பட்டவர் பயங்கரவாத மற்றும் பிரிவினைவாத நடவடிக்கைகளில் ஈடுபட்டதாகவும், இதை "அரிதான" வழக்காகக் கருதி மரண தண்டனை வழங்க வேண்டும் என்றும் SG துஷார் மேத்தா வாதிட்டார்.

    இதற்கு பதிலளித்த நீதிபதி மிருதுல், உலகெங்கிலும் உள்ள எந்த நீதிமன்றத்திலும் ஒசாமா ஆஜர்படுத்தப்படவில்லை என்பதால் இருவரையும் ஒப்பிட முடியாது என்று கூறினார்.

    அப்போது, "அமெரிக்கா செய்தது சரி என்று நான் நினைக்கிறேன்," என்று மேத்தா கூறினார். ஆனால், இதற்கு நீதிபதி மிருதுல் கருத்து தெரிவிக்க மறுத்துவிட்டார்.

    தற்போது, ஆகஸ்ட் 9 ஆம் தேதி மாலிக் நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என்ற நோட்டீஸ் மட்டும் பிறப்பிக்கப்பட்டுள்ளது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    இந்தியா

    சமீபத்திய

    ஜப்பானை முந்தி உலகின் நான்காவது பெரிய பொருளாதார நாடாக மாறியது இந்தியா; நிதி ஆயோக் சிஇஓ தகவல் பொருளாதாரம்
    நிச்சயமற்ற நிலையில் எம்எஸ் தோனியின் ஐபிஎல் எதிர்காலம்; உதவி பயிற்சியாளர் ஸ்ரீராம் வெளியிட்ட தகவல் எம்எஸ் தோனி
    ராஜினாமாவெல்லாம் கிடையாது; பங்களாதேஷ் இடைக்கால அரசின் தலைமை ஆலோசகர் முகமது யூனுஸ் திட்டவட்டம் பங்களாதேஷ்
    மே மாத இறுதிவரை நின்ஜா ZX-4R பைக்கிற்கு க்கு ரூ.40,000 தள்ளுபடியை அறிவித்தது கவாஸாகி கவாஸாகி

    இந்தியா

    புதிய நாடாளுமன்ற திறப்பு விழா: அழைப்பை ஏற்றுக்கொண்ட 2 எதிர்க்கட்சிகள்  நாடாளுமன்றம்
    இந்திய நிறுவனங்களின் மீது அதிகரித்த ரேன்சம்வேர் இணையத் தாக்குதல்கள்! சைபர் கிரைம்
    இந்தியாவில் ஒரே நாளில் 535 கொரோனா பாதிப்பு: 5 பேர் உயிரிழப்பு கொரோனா
    உலக நீளம் தாண்டுதல் போட்டியில் தங்கம், வெள்ளி வென்ற இந்தியா! இந்திய அணி
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025