NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / புதிய கோவிட் மாறுபாடு ஜே.என்.1: பூஸ்டர் டோஸ் தேவையில்லை என சுகாதார அமைச்சகம் தகவல்
    அடுத்த செய்திக் கட்டுரை
    புதிய கோவிட் மாறுபாடு ஜே.என்.1: பூஸ்டர் டோஸ் தேவையில்லை என சுகாதார அமைச்சகம் தகவல்

    புதிய கோவிட் மாறுபாடு ஜே.என்.1: பூஸ்டர் டோஸ் தேவையில்லை என சுகாதார அமைச்சகம் தகவல்

    எழுதியவர் Srinath r
    Dec 24, 2023
    04:52 pm

    செய்தி முன்னோட்டம்

    நாட்டில் அண்மையில் வேகமாக பரவி வரும் ஜே.என்.1 வகை கொரோனாவுக்கு எதிராக, பூஸ்டர் டோஸ் தடுப்பூசி செலுத்துவதற்கான அவசியம் இல்லை என சுகாதார துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    தி ஹிந்து நாளிதளிடம் பேசிய இந்தியா SARS-CoV-2 ஜெனோமிக்ஸ் கூட்டமைப்பின் (INSACOG) தலைவர் என்.கே. அரோரா, ஜே.என்.1 தொற்று எண்ணிக்கை அதிகரித்து வந்தாலும், நான்காவது டோஸ் தடுப்பூசி செலுத்துவதற்கான அவசியம் இல்லை என விவரித்தார்.

    "அதிக அபாயம் உள்ளவர்கள் மற்றும் 60 வயதுக்கு மேல் இணை நோய் உள்ளவர்கள் மட்டும் மூன்றாவது டோஸ் தடுப்பூசி செலுத்திக் கொள்ளவில்லை என்றால் இப்போது செலுத்திக் கொள்ளலாம்.

    தற்போது பொதுமக்களுக்கு நான்காவது டோஸ் தேவையில்லை. மக்கள் பீதி அடையாமல் முன்னெச்சரிக்கையாக இருக்குமாறு நாங்கள் அறிவுறுத்துகிறோம்" என அரோரா கூறினார்.

    2nd card

    இவ்வகை தீவிர பாதிப்புகளை ஏற்படுத்தாது

    உலகம் முழுவதும் கொரோனா வைரஸின் புதிய மாறுபாடுகள், துணை வகைகள் மற்றும் பிறழ்வுகள் கண்டறியப்படுவதை அரோரா சுட்டிக்காட்டினார்.

    "அதிர்ஷ்டவசமாக, இந்த ஓமிக்ரான் வகைகள் எதுவும், தீவிர பாதிப்பையும் தீவிர பாதிப்பையோ, மருத்துவமனைகளில் அனுமதிக்கப்படுவதையோ ஏற்படுத்தாது.

    ஜே.என்.1 துணை மாறுபாட்டின் அறிகுறிகள் காய்ச்சல், மூக்கிலிருந்து சளி வெளியேறுதல், இருமல், அவ்வப்போது வயிற்றுப்போக்கு மற்றும் கடுமையான உடல் வலிகள் ஆகியவை அடங்கும். ஒரு வாரத்திற்குள் இது குணமாகிவிடும்.

    மத்திய சுகாதார அமைச்சகம் மாநிலங்களிடம் கொரோனா பரிசோதனைகளை அதிகப்படுத்தவும், சேகரிக்கப்படும் மாதிரிகளை ஆய்வு செய்வதற்காக அனுப்பி வைக்கும் படியும் உத்தரவிட்டுள்ளது" என அரோரா கூறினார்.

    3rd card

    கடந்த 24 மணி நேரத்தில் ஒருவர் உயிரிழப்பு

    இன்று காலை 8 மணி நிலவரப்படி, கடந்த 24 மணி நேரத்தில் 656 புதிய தொற்று பாதிப்புகள் பதிவாகியுள்ளது. இதனை தொடர்ந்து, கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்று வருவோரின் எண்ணிக்கை 3,742 ஆக உயர்ந்துள்ளது.

    மேற்குறிப்பிட்ட சமயத்தில் கேரளாவில் தொற்று பாதிப்புக்கு ஒருவர் உயிரிழந்தார். இந்தியாவில் இதுவரை 5,33,333 கொரோனா பாதிப்பால் உயிரிழந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

    17 டிசம்பர் 2023 நிலவரப்படி, உலகளவில் 772 மில்லியனுக்கும் அதிகமான உறுதிப்படுத்தப்பட்ட தொற்று பாதிப்புகளும் மற்றும் கிட்டத்தட்ட ஏழு மில்லியன் இறப்புகள் பதிவாகியுள்ளன.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    கொரோனா
    கொரோனா தடுப்பூசிகள்
    கோவிட் 19
    கோவிட்

    சமீபத்திய

    EPFO 3.0: ஜூன் 2025இல் அமலுக்கு வரும் புதிய திட்டம்; விரைவில் கிளைம் பணத்தை ஏடிஎம்மிலேயே பெறலாம் வருங்கால வைப்பு நிதி
    பங்களாதேஷில் ஷேக் ஹசீனா மீது மனித குலத்திற்கு எதிரான குற்றச்சாட்டுகள் பதிவு பங்களாதேஷ்
    வடகிழக்கு இந்தியாவில் பெய்துவரும் கனமழையால் 25 பேர் பலி; மீட்பு மற்றும் நிவாரண பணிகள் தீவிரம் கனமழை
    உங்கள் ஏரியாவில் நாளை (ஜூன் 2) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள்  மின்தடை

    கொரோனா

    இந்தியா மற்றும் உலகளவில் இன்றைய கொரோனா நிலவரம் இந்தியா
    சீனாவில் பரவி வரும் புதுவகை நிமோனியா காய்ச்சல்- விளக்கம் கேட்கும் உலக சுகாதார அமைப்பு சீனா
    சிங்கப்பூரில் 13 மாத குழந்தை கொரோனாவால் மரணம் சிங்கப்பூர்
    டிசம்பர் 1 முதல் இந்தியர்களுக்கு இலவச விசாவை அறிவித்தது மலேசியா மலேசியா

    கொரோனா தடுப்பூசிகள்

    நாசல் கொரோனா தடுப்பூசி-இலவசமாக வழங்க மத்திய அரசுக்கு தமிழக அரசு வலியுறுத்தல் கோவிட் தடுப்பூசி
    இந்தியாவில் வேகமாக அதிகரிக்கும் கொரோனா: ஒரே நாளில் 1,134 பாதிப்புகள் இந்தியா
    தீவிரமடையும் பாதிப்பு - கொரோனா தடுப்பூசி மருந்துகளை வாங்க வேகமெடுக்கும் மகாராஷ்டிரா! மகாராஷ்டிரா
    தமிழகத்தில் அதிகரிக்கும் கொரோனா; சுற்றுலாத்தலங்களில் கட்டாய கொரோனா பரிசோதனை கொடைக்கானல்

    கோவிட் 19

    சீனாவின் புதிய கொரோனா அலை: வாரந்தோறும் 65 மில்லியன் பாதிப்புகள் ஏற்பட வாய்ப்பு சீனா
    இந்தியாவில் ஒரே நாளில் 490 கொரோனா பாதிப்பு: 2 பேர் உயிரிழப்பு இந்தியா
    இந்தியாவில் ஒரே நாளில் 310 கொரோனா பாதிப்பு: 2 பேர் உயிரிழப்பு இந்தியா
    சீனாவில் அதிகரிக்கும் கொரோனா: இந்தியா கவலைப்படத் தேவையில்லை  இந்தியா

    கோவிட்

    இந்தியாவில் ஒரே நாளில் 224 கொரோனா பாதிப்பு: ஒருவர் உயிரிழப்பு இந்தியா
    இந்தியாவில் ஒரே நாளில் 310 கொரோனா பாதிப்பு: 3 பேர் உயிரிழப்பு இந்தியா
    இந்தியாவில் ஒரே நாளில் 288 கொரோனா பாதிப்பு: 2 பேர் பலி இந்தியா
    இந்தியாவில் ஒரே நாளில் 267 கொரோனா பாதிப்பு: 2 பேர் பலி இந்தியா
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025