NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / தேசிய கல்விக்கொள்கையை ஏற்க மறுத்ததால் தமிழக அரசுக்கு நிதி கட்; சென்னை உயர்நீதிமன்றத்தில் மத்திய அரசு தகவல்
    அடுத்த செய்திக் கட்டுரை
    தேசிய கல்விக்கொள்கையை ஏற்க மறுத்ததால் தமிழக அரசுக்கு நிதி கட்; சென்னை உயர்நீதிமன்றத்தில் மத்திய அரசு தகவல்
    தேசிய கல்விக்கொள்கையை ஏற்க மறுத்ததால் நிதி கட் என உயர்நீதிமன்றத்தில் மத்திய அரசு தகவல்

    தேசிய கல்விக்கொள்கையை ஏற்க மறுத்ததால் தமிழக அரசுக்கு நிதி கட்; சென்னை உயர்நீதிமன்றத்தில் மத்திய அரசு தகவல்

    எழுதியவர் Sekar Chinnappan
    May 23, 2025
    08:18 pm

    செய்தி முன்னோட்டம்

    தேசிய கல்விக் கொள்கையை (NEP) செயல்படுத்துவது தொடர்பான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் (MoU) கையெழுத்திட தமிழக அரசு மறுத்ததால், தமிழகத்திற்கான கல்வி தொடர்பான நிதியை நிறுத்தி வைத்துள்ளதாக மத்திய அரசு சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

    கோவையில் உள்ள மறுமலர்ச்சி இயக்கத்தின் நிர்வாகி வி.ஈஸ்வரன் தாக்கல் செய்த மனு மீதான விசாரணையின் போது இந்த அறிக்கை வந்தது.

    கல்வி உரிமைச் சட்டத்தின் (RTE) கீழ் தனியார் பள்ளிகளில் பின்தங்கிய மாணவர்களுக்கு 25% இடஒதுக்கீட்டின் கீழ், நடப்பு கல்வியாண்டில் சேர்க்கை தொடங்கப்படவில்லை என்ற கவலையை மனு எழுப்பியது.

    நீதிபதிகள் ஜி.ஆர்.சுவாமிநாதன் மற்றும் வி.லட்சுமிநாராயணன் ஆகியோர் அடங்கிய டிவிஷன் பெஞ்ச், 25% RTE ஒதுக்கீட்டிற்கு ஒதுக்கப்பட்ட நிதி குறித்த விவரங்களை சமர்ப்பிக்குமாறு மத்திய அரசுக்கு முன்பு உத்தரவிட்டது.

    வாதம்

    மத்திய அரசு பெரியண்ணன் போல் செயல்படுவதாக தமிழக அரசு வாதம்

    வழக்கு மீண்டும் தொடங்கியதும், மத்திய அரசு சார்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் ஏ.ஆர்.எல்.சுந்தரேசன், தமிழகம் மத்திய அரசுடன் தேவையான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திடவில்லை என்றும், அதனால்தான் RTE விதியின் கீழ் தனியார் பள்ளி கட்டணங்களை திருப்பிச் செலுத்துவதற்கான நிதி விடுவிக்கப்படவில்லை என்றும் கூறினார்.

    பெரும்பாலான பிற மாநிலங்கள் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டாலும் தமிழக அரசு கையெழுத்திடவில்லை என்று சுந்தரேசன் குறிப்பிட்டார்.

    கொள்கை சீரமைப்பில் நிதியை நிபந்தனைக்குட்படுத்துவதன் மூலம் மத்திய அரசின் அணுகுமுறை பெரியண்ணன் அணுகுமுறையை பிரதிபலிக்கிறது என்று தமிழகத்தின் கூடுதல் அட்வகேட் ஜெனரல் ஆர்.ரவீந்திரன் எதிர்த்தார்.

    இதையடுத்து, மே 28 அன்று 25% RTE ஒதுக்கீடு தொடர்பாக நடைபெற்ற கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகளின் விவரங்களை சமர்ப்பிக்குமாறு தமிழக அரசுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    சென்னை உயர் நீதிமன்றம்
    மத்திய அரசு
    தமிழகம்
    தமிழக அரசு

    சமீபத்திய

    தேசிய கல்விக்கொள்கையை ஏற்க மறுத்ததால் தமிழக அரசுக்கு நிதி கட்; சென்னை உயர்நீதிமன்றத்தில் மத்திய அரசு தகவல் சென்னை உயர் நீதிமன்றம்
    ஆர்சிபி அணியின் கேப்டன் ஆனார் ஜிதேஷ் சர்மா; ரஜத் படிதார் இம்பாக்ட் வீரராக வைக்கப்பட்டது ஏன்? ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்
    அதிகரிக்கும் கொரோனா பரவல்; பூஸ்டர் தடுப்பூசி செலுத்த எய்ம்ஸ் மருத்துவர் வலியுறுத்தல் கொரோனா தடுப்பூசிகள்
    பாகிஸ்தான் விமானங்கள் இந்திய வான்வெளியை பயன்படுத்துவதற்கான தடை நீட்டிப்பு; பாகிஸ்தானும் பதிலுக்கு நீட்டித்தது இந்தியா

    சென்னை உயர் நீதிமன்றம்

    'இசையமைப்பாளர் இளையராஜா எல்லோருக்கும் மேலானவர் அல்ல': சென்னை உயர் நீதிமன்றம் 'நறு'க்கென கொட்டு இளையராஜா
    ஐபிஎல் டிக்கெட் கள்ளச்சந்தையில் விற்பனை: சென்னை உயர்நீதிமன்றம் கெடுபிடி ஐபிஎல்
    மாதம் ரூ.71ஆயிரம் வரை சம்பளம் : மாவட்ட நீதிமன்றங்களில் 2,329 காலியிடங்கள் இந்தியா
    கோவை தேர்தல் முடிவை நிறுத்தக் கோரிய வழக்கு; உயர் நீதிமன்றம் பிறப்பித்த அதிரடி உத்தரவு கோவை

    மத்திய அரசு

    10 ஆண்டுகளில் ஸ்மார்ட் சிட்டிகளுக்காக ₹1.5 லட்சம் கோடி செலவிட்டுள்ளதாம் இந்தியா! இந்தியா
    பாகிஸ்தான் அரசின் சமூக ஊடக கணக்கை முடக்கியது மத்திய அரசு பயங்கரவாதம்
    ஏப்ரல் 27 தான் கடைசி: அனைத்து பாகிஸ்தானியர்களும் இந்தியாவை விட்டு வெளியேற உத்தரவு பாகிஸ்தான்
    27 மருந்துகளை மளிகை கடைகளில் விற்க அனுமதிக்கும் சட்டத்தை இந்தியாவில் அறிமுகம் செய்ய திட்டம் இந்தியா

    தமிழகம்

    கலைஞர் பெயரில் பல்கலைக்கழகம்: சட்டப்பேரவையில் சிறப்பு தீர்மானம் நிறைவேற்றம் கலைஞர் கருணாநிதி
    தமிழகம் முழுவதும் குடும்ப நல நீதிமன்றங்களுக்கு மே 1 முதல் 15 நாள் கோடை விடுமுறை தமிழ்நாடு
    உங்கள் ஏரியாவில் நாளை (ஏப்ரல் 25) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள்  மின்தடை
    கலை அறிவியல் கல்லூரிகள் கோடை விடுமுறைக்கு பின் திறப்படுவது எப்போது? அரசு அறிவிப்பு கல்லூரி

    தமிழக அரசு

    மும்மொழி கொள்கை எதிர்ப்பு: 2025-26 தமிழ்நாடு நிதிநிலை அறிக்கைக்கான புதிய இலச்சினை வெளியீடு தமிழ்நாடு
    தமிழக பட்ஜெட்டில் கைவிடப்பட்ட ரூபாய் சின்னத்தை வடிவைமைத்தது முன்னாள் திமுக எம்எல்ஏவின் மகன் தமிழகம்
    இசைஞானி இளையராஜாவிற்கு தமிழக அரசு சார்பில் விழா: முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு இளையராஜா
    சட்டப்பேரவையில் தமிழக பட்ஜெட் இன்று தாக்கல்: நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டியவை தமிழக முதல்வர்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025