Page Loader
நேபாள பிரதமர் 4 நாள் பயணமாக இன்று இந்தியா வருகிறார்
இந்த பயணத்தின் போது நேபாள பிரதமர் பிரசந்தா, ஜனாதிபதி மற்றும் துணை ஜனாதிபதியை சந்திப்பார்.

நேபாள பிரதமர் 4 நாள் பயணமாக இன்று இந்தியா வருகிறார்

எழுதியவர் Sindhuja SM
May 31, 2023
02:14 pm

செய்தி முன்னோட்டம்

நேபாள பிரதமர் புஷ்ப கமல் தஹால் 'பிரசந்தா' அதிகாரபூர்வ பயணமாக இன்று(மே 31) இந்தியாவுக்கு வர இருக்கிறார். கடந்த ஆண்டு டிசம்பரில் பதவியேற்ற பிறகு அவர் மேற்கொள்ளும் முதல் இந்திய பயணம் இதுவாகும். அவருடன் அவரது உயர்மட்ட அரசாங்க குழுவும் வரவுள்ளது. இந்த பயணத்தின் போது நேபாள பிரதமர் பிரசந்தா, ஜனாதிபதி மற்றும் துணை ஜனாதிபதியை சந்திப்பார். மேலும், இருதரப்பு உறவுகள் குறித்து விவாதிக்க பிரதமர் நரேந்திர மோடியுடன் அவர் விரிவான பேச்சுவார்த்தை நடத்துவார். இந்த 4 நாள் சுற்றுப்பயணத்தின் போது, புது டெல்லி, உஜ்ஜைன் மற்றும் மத்தியப் பிரதேசத்தில் உள்ள இந்தூர் ஆகிய இடங்களை அவர் பார்வையிட இருக்கிறார்.

details

 பிரதமர் பிரசாந்தாவின் நான்காவது இந்திய பயணம் 

பிரசந்தா(68), தனது மகள் கங்கா தஹாலுடன் இந்த பயணத்தை மேற்கொள்ள இருக்கிறார். "பிரதமர் மோடியின் அழைப்பின் பேரில் அவர் இந்தியாவுக்கு செல்கிறார். மேலும் அமைச்சர்கள், செயலாளர்கள் மற்றும் மூத்த அரசு அதிகாரிகள் அடங்கிய குழுவை அவர் வழிநடத்துவார்" என்று நேபாள வெளியுறவு அமைச்சகம் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது. பிரதமர் மோடி-பிரசந்தா சந்திப்பின் போது, ஆற்றல் ஒத்துழைப்பு, இணைப்பு திட்டங்கள், வர்த்தக வசதிகள் மற்றும் மேம்பாட்டு ஒத்துழைப்பு முயற்சிகள் ஆகியவை விவாதிக்கப்படும் என்று கூறப்படுகிறது. "நேபாளப் பிரதமர் 'பிரசாந்தா' நான்காவது இந்திய பயணம் இதுவாகும். இந்த பயணம் நேபாளத்திற்கும் இந்தியாவிற்கும் இடையிலான பழமையான, பன்முக மற்றும் நல்லுறவை மேலும் வலுப்படுத்தும்" என்று நேபாள வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.