NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / NEET: 'சீரற்ற' மதிப்பெண்கள் கணக்கீடு தொடர்பாக NTAக்கு நோட்டீஸ் அனுப்பிய உச்சநீதிமன்றம்
    அடுத்த செய்திக் கட்டுரை
    NEET: 'சீரற்ற' மதிப்பெண்கள் கணக்கீடு தொடர்பாக NTAக்கு நோட்டீஸ் அனுப்பிய உச்சநீதிமன்றம்

    NEET: 'சீரற்ற' மதிப்பெண்கள் கணக்கீடு தொடர்பாக NTAக்கு நோட்டீஸ் அனுப்பிய உச்சநீதிமன்றம்

    எழுதியவர் Venkatalakshmi V
    Jun 27, 2024
    01:23 pm

    செய்தி முன்னோட்டம்

    2024ஆம் ஆண்டுக்கான நீட் தேர்வு (நீட்-யுஜி)க்கான மதிப்பெண்களைக் கணக்கிடுவதில் முறைகேடுகள் நடந்ததாகக் கூறப்படும் தேசிய தேர்வு முகமைக்கு (NTA) உச்ச நீதிமன்றம் வியாழக்கிழமை நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

    இது OMR தாள்களில் மதிப்பெண்களின் "சீரற்ற" கணக்கீட்டு தொடர்பாக நீதி கோரும் ஒரு கற்றல் செயலியின் மனுவின் விசாரணையின் ஒரு பகுதியாக வந்துள்ளது.

    விசாரணை நடைபெறும் ஜூலை 8ஆம் தேதிக்குள் பதிலளிக்க என்டிஏவுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

    மனு விவரம்

    OMR தாள் விநியோகம் குறித்த கவலைகள்

    NEET-UG 2024 தேர்வாளர்களுக்கு OMR தாள்களை விநியோகிப்பதில் உள்ள சிக்கல்களையும் மனுவில் எடுத்துக்காட்டி, பல மாணவர்கள் அவற்றைப் பெறவில்லை என்று குற்றம் சாட்டினார்.

    இந்த குறைகளை நிவர்த்தி செய்வதற்கான காலக்கெடுவை வழங்குமாறு NTAவிடம் நீதிமன்றம் கோரியுள்ளது.

    1,500க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு கருணை மதிப்பெண்கள் வழங்கப்பட்டதாகவும், இது ஒட்டுமொத்த தரவரிசை மற்றும் தேர்வின் நேர்மையை கணிசமாக பாதித்துள்ளதாகவும் மனுவில் கூறப்பட்டுள்ளது.

    விசாரணை

    தேர்வு முறைகேடுகள் குறித்து விசாரணை நடந்து வருகிறது

    இந்தக் குற்றச்சாட்டுகளுக்குப் பதிலளிக்கும் விதமாக, உச்ச நீதிமன்றமும், மத்திய புலனாய்வுத் துறையும் (சிபிஐ) சாத்தியமானவினாத்தாள் கசிவுகள் மற்றும் தேர்வு முறைகேடுகள் குறித்து விசாரணை நடத்தி வருகின்றன.

    சிபிஐயின் விசாரணை பல மாநிலங்களில் பரவியுள்ளது மற்றும் ஏற்கனவே இந்த வழக்கு தொடர்பான பல கைதுகளுக்கு வழிவகுத்தது.

    விசாரணையின் போது, ​​நீதிபதிகள் மிஸ்ரா மற்றும் பாட்டி ஆகியோர் பயிற்சி மையங்களின் ஈடுபாட்டைக் கேள்வி எழுப்பி, "தங்களுக்கு எந்தப் பங்கும் இல்லை" என்று கூறினர்.

    இந்த சூழலில் இன்று நாடாளுமன்றத்தில் உரையாற்றிய ஜனாதிபதி திரௌபதி முர்மு சமீபத்தில், "அரசு ஆட்சேர்ப்பு மற்றும் தேர்வுகளில் புனிதமும் வெளிப்படைத்தன்மையும் அவசியம்" என்று கூறியது குறிப்பிடத்தக்கது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    நீட் தேர்வு
    உச்ச நீதிமன்றம்

    சமீபத்திய

    'Thug Life' படப்பிடிப்பு தளத்தில் கமலிடம் 'தக் லைஃப் மொமெண்ட்' காட்டிய சிம்பு; அவரே பகிர்ந்த சுவாரசிய தகவல் கமல்ஹாசன்
    மாணவர்கள் கவனத்திற்கு, SSLC மற்றும் பிளஸ் 1 பொதுத்தேர்வு முடிவுகள் இன்று வெளியீடு பொதுத்தேர்வு
    முதன்முறையாக, தாலிபான் வெளியுறவுத்துறை அமைச்சரிடம் பேசிய இந்தியா வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் எஸ்.ஜெய்சங்கர்
    ஜப்பானின் சகுராஜிமா எரிமலை வெடித்து, 3 கிலோமீட்டர் உயரத்திற்கு சாம்பல் புகை; காணொளி ஜப்பான்

    நீட் தேர்வு

    நீட் தேர்வு விலக்கு குறித்து இன்னும் 2 தினங்களில் விளக்கம் - மா.சுப்ரமணியம் சென்னை
    அதிமுக ஆட்சிக்கால நீட் தொடர்பான 'ரிட்' மனு வாபஸ் - தமிழக அரசு அதிமுக
    அரியலூர் மருத்துவ கல்லூரியில் திறக்கப்பட்ட அரங்கத்திற்கு மாணவி அனிதா பெயர் - முதல்வர் அறிவிப்பு தமிழ்நாடு
    நாடு முழுவதும் நீட் தேர்வு மே 07 இல் நடக்கிறது! முன் ஏற்பாடுகள் தீவிரம்  இந்தியா

    உச்ச நீதிமன்றம்

    தேர்தல் பத்திரங்கள் தொடர்பான பிரமாணப் பத்திரத்தை உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்தது எஸ்பிஐ எஸ்பிஐ
    திருக்கோவிலூர் தொகுதி காலி என்ற அறிவிப்பு ரத்து; மீண்டும் அமைச்சராகிறார் பொன்முடி தமிழகம்
    தேர்தல் பத்திர விவரங்கள் இணையதளத்தில் பதிவேற்றம்; ரூ.1,368 கோடிக்கு பத்திரங்கள் வாங்கிய கோவை தொழிலதிபர் தேர்தல் பத்திரங்கள்
    தேர்தல் பத்திர எண்களை வெளியிடாத எஸ்பிஐக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ் தேர்தல் பத்திரங்கள்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025