NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / நீட் தேர்வு - ஆகஸ்ட் 20ம் தேதி தமிழ்நாடு முழுவதும் திமுக உண்ணாவிரத போராட்டம் 
    அடுத்த செய்திக் கட்டுரை
    நீட் தேர்வு - ஆகஸ்ட் 20ம் தேதி தமிழ்நாடு முழுவதும் திமுக உண்ணாவிரத போராட்டம் 
    நீட் தேர்வு - ஆகஸ்ட் 20ம் தேதி தமிழ்நாடு முழுவதும் திமுக உண்ணாவிரத போராட்டம்

    நீட் தேர்வு - ஆகஸ்ட் 20ம் தேதி தமிழ்நாடு முழுவதும் திமுக உண்ணாவிரத போராட்டம் 

    எழுதியவர் Nivetha P
    Aug 16, 2023
    02:40 pm

    செய்தி முன்னோட்டம்

    தமிழ்நாடு சட்டப்பேரவையில் நீட் தேர்வுக்கு எதிராக நிறைவேற்றப்பட்ட மசோதா தற்போது குடியரசுத்தலைவரின் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

    நீட் தேர்வினை ரத்து செய்யக்கோரி தமிழ்நாடு முதல்வரும் தொடர்ந்து மத்திய அரசினை வலியுறுத்தி வருகிறார்.

    ஆனால், தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி நீட் தேர்வு விலக்குக்கு எதிராக தனது கருத்துக்களை பல்வேறு இடங்களில் பதிவு செய்து வருகிறார்.

    கடந்த வாரம் ஆளுநர் மாளிகையில் நடந்த நிகழ்ச்சி ஒன்றிலும் அவர் நீட்தேர்வு குறித்து பேசியது பெரும் விமர்சனத்திற்குட்பட்டது.

    இதனிடையே சென்னை குரோம்பேட்டை பகுதியினை சேர்ந்த ஜெகதீஸ்வரன் என்னும் மாணவர் நீட் தேர்வில் தோல்வியடைந்து மருத்துவப்படிப்பில் சேரமுடியாததால் தற்கொலை செய்துக்கொண்டார்.

    அடுத்த 2 நாட்களில் அவரது தந்தையும் தற்கொலை செய்துக்கொண்ட நிலையில், இச்சம்பவம் பெரும் சோகத்தினை தமிழகம் முழுவதும் ஏற்படுத்தியுள்ளது.

    போராட்டம் 

    மத்திய அரசு மற்றும் பொறுப்பற்ற ஆளுநரை கண்டித்து போராட்டம் 

    இதனை தொடர்ந்து நீட் தேர்வு ரத்து செய்யப்பட வேண்டும் என கோரி வரும் ஆகஸ்ட் 20ம் தேதி தமிழகம் முழுவதும் திமுக கட்சியின் இளைஞர் அணி, மருத்துவ அணி மற்றும் மாணவர் அணி இணைந்து உண்ணாவிரதப்போராட்டம் நடத்தப்போவதாக அறிவித்துள்ளனர்.

    மருத்துவ கனவுகளை கொண்ட மாணவர்கள் மட்டுமின்றி அவர்களது பெற்றோர்களையும் மரணக்குழியில் தள்ளும் நீட் தேர்வினை ரத்து செய்யாத ஆளும் பாஜக.,அரசு மற்றும் பொறுப்பற்ற ஆளுநரை கண்டித்து, கழக தலைவரும் - தமிழ்நாடு முதல்வருமான மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தல்படியே இந்த உண்ணாவிரத போராட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது என்று திமுக இளைஞரணி செயலாளரான அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், மாணவர் அணி செயலாளர் எம்.பி.எழிலரசன் மற்றும் மருத்துவ அணி செயலாளர் டாக்டர்.எழிலன் நாகநாதன் ஆகியோர் கூட்டாக வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    நீட் தேர்வு
    ஆர்.என்.ரவி
    மு.க ஸ்டாலின்
    தமிழ்நாடு

    சமீபத்திய

    ஆபரேஷன் சிந்தூருக்குப் பிறகு மத்திய பாதுகாப்பு பட்ஜெட் அதிகரிப்பு: ரூ.50,000 கோடி ஒதுக்கியதாக தகவல் மத்திய அரசு
    இந்தியா-பாகிஸ்தான் இடையேயான போர் நிறுத்தம் மே 18 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது இந்தியா
    தமிழ்நாட்டில் SSLC பொதுத்தேர்வு முடிவுகள் வெளியீடு: தேர்ச்சி விகிதம் 93.80% தமிழ்நாடு
    'Thug Life' படப்பிடிப்பு தளத்தில் கமலிடம் 'தக் லைஃப் மொமெண்ட்' காட்டிய சிம்பு; அவரே பகிர்ந்த சுவாரசிய தகவல் கமல்ஹாசன்

    நீட் தேர்வு

    நீட் நுழைவுத் தேர்வுக்கு தேதிகள் அறிவிப்பு! இந்தியா
    பிபிசி ஆவணப்படம் மற்றும் அதானி பிரச்சனைகளைப் பற்றி பட்ஜெட் கூட்டதொடரில் பேச இருக்கும் திமுக எம்பிகள் பட்ஜெட் 2023
    நீட் தேர்வு விலக்கு குறித்து இன்னும் 2 தினங்களில் விளக்கம் - மா.சுப்ரமணியம் சென்னை
    அதிமுக ஆட்சிக்கால நீட் தொடர்பான 'ரிட்' மனு வாபஸ் - தமிழக அரசு அதிமுக

    ஆர்.என்.ரவி

    சிதம்பரம் நடராஜர் கோயிலில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி குடும்பத்துடன் சாமி தரிசனம் சிதம்பரம் கோவில்
    ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த முதல்வர் ஸ்டாலின் ஸ்டாலின்
    தூத்துக்குடி ஸ்டெர்லைட் போராட்டம் குறித்து ஆளுநரின் சர்ச்சை பேச்சு - கனிமொழி ஆவேசம் தமிழ்நாடு
    திமுக கூட்டணி கட்சிகள் ஏப்ரல் 12ம் தேதி ஆளுநர் மாளிகை முன் போராட்டம் ஆளுநர் மாளிகை

    மு.க ஸ்டாலின்

    மகளிர் உரிமை தொகை திட்டம் - வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு  சென்னை
    தமிழகத்தில் மேலும் 300 நியாயவிலை கடைகளில் தக்காளி விற்பனை  தமிழ்நாடு
    ஹிமாச்சலில் கனமழையால் கடும் பாதிப்பு - தமிழகம் துணை நிற்கும் என மு.க.ஸ்டாலின் ட்வீட்  ஹிமாச்சல பிரதேசம்
    கவர்னர் குறித்து ஸ்டாலின் எழுதிய புகார் கடிதம் - உள்துறை அமைச்சகத்திற்கு அனுப்பிய ஜனாதிபதி  ஆர்.என்.ரவி

    தமிழ்நாடு

    பட்டாசு ஆலை விபத்துக்கு சிலிண்டர் விபத்தே காரணம் - அமைச்சர் சக்கரபாணி  பிரதமர்
    அடுத்த 2 நாட்களுக்கு தமிழகத்தில் இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்பு  புதுச்சேரி
    கோழி பண்ணையில் ஏற்பட்ட தீ விபத்து - 5 ஆயிரம் கோழி குஞ்சுகள் உயிரிழந்த பரிதாபம் ஈரோடு
    கிருஷ்ணகிரி வெடி விபத்து - ஆய்வு மேற்கொண்ட மத்திய அரசு அதிகாரிகள் பிரதமர் மோடி
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025