NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / என் வீட்டில் சோதனை நடைபெறவில்லை: அமைச்சர் செந்தில் பாலாஜி  
    அடுத்த செய்திக் கட்டுரை
    என் வீட்டில் சோதனை நடைபெறவில்லை: அமைச்சர் செந்தில் பாலாஜி  
    அமைச்சர் செந்தில் பாலாஜி, கடந்த ஆட்சி காலத்தில் அதிமுக கட்சியில் இருந்தார்.

    என் வீட்டில் சோதனை நடைபெறவில்லை: அமைச்சர் செந்தில் பாலாஜி  

    எழுதியவர் Sindhuja SM
    May 26, 2023
    12:25 pm

    செய்தி முன்னோட்டம்

    தமிழ்நாடு மின்சாரத்துறை செந்தில் பாலாஜி சம்மந்தப்பட்ட 40 இடங்களில் இன்று(மே 26) அதிகாலை முதல் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருவதாக செய்திகள் வெளியாகி இருந்தன.

    இது குறித்து பேசிய அமைச்சர் செந்தில் பாலாஜி, "சென்னை மற்றும் கரூரில் உள்ள எனது வீடுகளில் வருமான வரித்துறை சோதனை நடைபெறவில்லை. என் தம்பி மற்றும் தம்பிக்கு தெரிந்தவர்களின் வீடுகளில் சோதனை நடைபெற்று வருகிறது." என்று கூறியுள்ளார்.

    செந்தில் பாலாஜியின் தம்பி அசோக் வீட்டிலும், அவரது ஆதரவாளர்கள் வீட்டிலும் இன்று காலை முதல் சோதனை நடைபெற்று வருகிறது.

    அமைச்சர் செந்தில் பாலாஜியின் நண்பர் ஒருவரது வீட்டில் சோதனை செய்ய வருமான வரித்துறையினர் இன்று காலை அங்கு சென்றனர்.

    details

    செந்தில் பாலாஜிக்கு எதிரான உச்ச நீதிமன்ற வழக்கு 

    அப்போது, அவரது வீடு பூட்டி இருந்ததை அடுத்து, வருமான வரித்துறையினர் சுவரேறி குதித்து வீட்டுக்குள் சென்றதாக கூறப்படுகிறது.

    அமைச்சர் செந்தில் பாலாஜி, கடந்த ஆட்சி காலத்தில் அதிமுக கட்சியில் இருந்தார்.

    அப்போது, வேலை வாங்கி தருவதாக கூறி பலரிடம் பணம் பெற்றதாக அவர் மீது உச்ச நீதிமன்றத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

    இந்நிலையில், இன்று அதிகாலை முதல், கரூர், ரமேஸ்வரப்பட்டியில் இருக்கும் செந்தில் பாலாஜியின் பெற்றோர் வீடு, மற்றும் கரூர், ராமகிருஷ்ணாபுரத்தில் உள்ள அவரது சகோதரர் வீடு மற்றும் சென்னையில் உள்ள அவர் சம்மந்தப்பட்ட இடங்கள் என 40 இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    தமிழ்நாடு
    திமுக

    சமீபத்திய

    வடகிழக்கு இந்தியாவில் பெய்துவரும் கனமழையால் 25 பேர் பலி; மீட்பு மற்றும் நிவாரண பணிகள் தீவிரம் கனமழை
    உங்கள் ஏரியாவில் நாளை (ஜூன் 2) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள்  மின்தடை
    திமுக பொதுக்குழு கூட்டத்தில் 27 தீர்மானங்கள் நிறைவேற்றம்; கட்சியில் இரண்டு புதிய அணிகள் உருவாக்கம் திமுக
    வணிக எல்பிஜி சிலிண்டர் விலை ரூ.24 குறைப்பு; பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் அறிவிப்பு எரிவாயு சிலிண்டர்

    தமிழ்நாடு

    10ம் வகுப்பு பொதுத்தேர்வில் தேர்ச்சி பெற்று சாதனை படைத்த சிறைவாசிகள் மாநில அரசு
    தமிழகத்தில் 3 மாவட்டங்களில் ரூ.92.50 கோடி மதிப்பில் 3 மினி டைடல் பூங்கா  மு.க ஸ்டாலின்
    டாஸ்மாக் கடைகளில் ரூ.2000 நோட்டுகளுக்கு தடை இல்லை - செந்தில் பாலாஜி விளக்கம் இந்தியா
    தமிழகத்தின் 12 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு  வானிலை அறிக்கை

    திமுக

    துணி துவைத்ததற்காக ராணுவ வீரர் ஒருவரை அடித்து கொன்ற திமுக கவுன்சிலர் தமிழ்நாடு
    ராணுவ வீரரை அடித்து கொன்ற திமுக கவுன்சிலர்: இழப்பீடு கோரும் முன்னாள் வீரர்கள் தமிழ்நாடு
    ராணுவ வீரர் கொலை - திமுக'வை கண்டித்து பா.ஜ.க. சார்பில் உண்ணாவிரத போராட்டம் அறிவிப்பு பாஜக அண்ணாமலை
    முதலமைச்சர் ஸ்டாலின் பிறந்தநாள்: மாபெரும் எதிர்கட்சிகள் கூட்டமாக மாறுமா தமிழ்நாடு
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025