NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / "ஜனநாயகத்தின் கொலை": சண்டிகர் மேயர் தேர்தல் சர்ச்சையை விசாரிக்க உச்ச நீதிமன்றம் முடிவு
    அடுத்த செய்திக் கட்டுரை
    "ஜனநாயகத்தின் கொலை": சண்டிகர் மேயர் தேர்தல் சர்ச்சையை விசாரிக்க உச்ச நீதிமன்றம் முடிவு

    "ஜனநாயகத்தின் கொலை": சண்டிகர் மேயர் தேர்தல் சர்ச்சையை விசாரிக்க உச்ச நீதிமன்றம் முடிவு

    எழுதியவர் Sindhuja SM
    Feb 05, 2024
    05:17 pm

    செய்தி முன்னோட்டம்

    சண்டிகர் மேயர் தேர்தலை நடத்திய தலைமை அதிகாரி அனில் மாசிஹ்-க்கின் செயலுக்கு உச்ச நீதிமன்றம் இன்று கடுமையான கண்டனம் தெரிவித்துள்ளது.

    "அவர்(அனில் மாசிஹ்) வாக்குச் சீட்டுகளை சிதைத்துள்ளார் என்பது வெளிப்படையாக தெரிகிறது" என்றும் உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

    மேலும், பிப்ரவரி 7ஆம் தேதி நடைபெற இருந்த சண்டிகர் குடிமை அமைப்பின் முதல் கூட்டத்தை காலவரையின்றி ஒத்திவைக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.

    சமீபத்தில் நடந்த சண்டிகர் மேயர் தேர்தலில் பாஜக வேட்பாளர் மனோஜ்குமார் சோங்கர் வெற்றி பெற்றார்.

    எதிர்க்கட்சி கூட்டணி வேட்பாளரின் 8 வாக்குகள் செல்லாது என அறிவிக்கப்பட்டதை அடுத்து, ஆம் ஆத்மி-காங்கிரஸ் கூட்டணி வேட்பாளர் குல்தீப் சிங் தோற்கடிக்கப்பட்டார்.

    8 வாக்குகள் செல்லாது என அறிவிக்கப்பட்டதற்கு எதிராக பஞ்சாப்-ஹரியானா உயர்நீதிமன்றத்தை ஆம் ஆத்மி அணுகியது.

    சண்டிகர்

    விசாரணை பிப்ரவரி 12ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு 

    ஓய்வுபெற்ற நீதிபதியின் மேற்பார்வையின் கீழ் புதிய தேர்தலை நடத்த வேண்டும் என்று கோரி பஞ்சாப் மற்றும் ஹரியானா உயர்நீதிமன்றத்தில் ஆம் ஆத்மி கவுன்சிலர் குல்தீப் குமார் மனு தாக்கல் செய்தார்.

    ஆனால், அவருக்கு இடைக்கால நிவாரணம் வழங்க பஞ்சாப்-ஹரியானா உயர்நீதிமன்றம் மறுத்துவிட்டது. அதன் பிறகு, அவர் இது குறித்து உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தார்.

    அதை இன்று விசாரித்த உச்ச நீதிமன்றம், "அவர்(தலைமை அதிகாரி) வாக்குச்சீட்டுகளை சிதைத்துள்ளார் என்பது வெளிப்படையாக தெரிகிறது. அவர் மீது வழக்குத் தொடர வேண்டும். அவர் ஏன் கேமராவைப் பார்க்கிறார்? இது ஜனநாயகத்தை கேலிக்கூத்தாக்குவது" என்று கூறியுள்ளது.

    மேலும், இந்த வழக்கை பிப்ரவரி 12ஆம் தேதிக்கு உச்ச நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    உச்ச நீதிமன்றம்
    சண்டிகர்

    சமீபத்திய

    பாகிஸ்தானுக்கு பின்னடைவு; சூராப் நகரத்தைக் கைப்பற்றியதாக பலுசிஸ்தான் விடுதலை ராணுவம் அறிவிப்பு பலுசிஸ்தான்
    ஜூன் 1, 2025 முதல் இந்த ஸ்மார்ட்போன்களில் எல்லாம் வாட்ஸ்அப் ஆப் செயல்படாது; எந்தெந்த போன் தெரியுமா? வாட்ஸ்அப்
    திமுக பொதுக்குழு கூட்டத்திற்கு முன்னதாக மதுரையில் முதல்வர் ஸ்டாலினுக்கு பேரணி மூலம் பிரமாண்ட வரவேற்பு மு.க.ஸ்டாலின்
    பாடுவதற்கு விதிக்கப்பட்ட தடைக்கு எதிரான சட்டப் போராட்டம் தொடரும் என பின்னணிப் பாடகி சின்மயி உறுதி சின்மயி

    உச்ச நீதிமன்றம்

    சட்டம் பேசுவோம்: அரசியலமைப்புச் சட்டம் ஆளுநர்களுக்கு என்ன அதிகாரத்தை வழங்குகிறது? தமிழகம்
    செந்தில் பாலாஜி ஜாமீன் மனுவை வாபஸ் பெற உச்சநீதிமன்றம் அனுமதி கைது
    'உதயநிதி ஸ்டாலின் பேசியதை நீதிமன்ற அவமதிப்பாக கருத முடியாது' - உச்சநீதிமன்றம்  அறநிலையத்துறை
    'கேரள ஆளுநர் 2 ஆண்டுகளாக என்ன செய்து கொண்டிருந்தார்?': உச்ச நீதிமன்றம்  கேரளா

    சண்டிகர்

    சண்டிகர் மேயர் தேர்தலில் 'இண்டியா' கூட்டணிக்கு எதிரான முதல் தேர்தல் போரில் பாஜக வெற்றி  பாஜக
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025