NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / காதலியின் உடலை துண்டுதுண்டாக வெட்டி குக்கரில் அவித்த காதலன்: மும்பையின் கொடூர கொலை வழக்கு 
    அடுத்த செய்திக் கட்டுரை
    காதலியின் உடலை துண்டுதுண்டாக வெட்டி குக்கரில் அவித்த காதலன்: மும்பையின் கொடூர கொலை வழக்கு 
    மனோஜ், போரிவாலியில் ஒரு சிறிய கடை வைத்திருக்கிறார்

    காதலியின் உடலை துண்டுதுண்டாக வெட்டி குக்கரில் அவித்த காதலன்: மும்பையின் கொடூர கொலை வழக்கு 

    எழுதியவர் Sindhuja SM
    Jun 08, 2023
    01:45 pm

    செய்தி முன்னோட்டம்

    மும்பை மிரா ரோட்டில் உள்ள வாடகை குடியிருப்பில் 56 வயது நபர் ஒருவர் தனது காதலியை கொன்று அவரது உடலை 20 துண்டுகளாக வெட்டியதற்காக கைது செய்யப்பட்டுள்ளார்.

    குற்றம் சாட்டப்பட்ட நபர் பிரஷர் குக்கரில் தனது காதலியின் உடல் பாகங்களை வேகவைத்து, பின்னர் அவற்றை அப்புறப்படுத்த பிளாஸ்டிக் பைகளில் நிரப்பியதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

    குற்றம் சாட்டப்பட்ட மனோஜ் சஹானி, சரஸ்வதி வைத்யா(36) என்பவருடன், கடந்த மூன்று ஆண்டுகளாக, மிரா சாலையில் உள்ள கட்டிடத்தில் வசித்து வந்தார்.

    இந்நிலையில், அவர்கள் வசித்து வந்த வீட்டில் இருந்து ஏதோ துர்நாற்றம் வீசுவதாக அப்பகுதி மக்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

    details

    டெல்லி ஆப்தாப் பூனாவாலாவின் வழக்கை நினைவுபடுத்தும் சம்பவம் 

    சம்பவ இடத்திற்கு விரைந்த போலீஸார், பல துண்டுகளாக வெட்டப்பட்ட ஒரு பெண்ணின் சிதைந்த உடலைக் கண்டெடுத்தனர்.

    அவரது வீட்டில் கண்டெடுக்கப்பட்ட அழுகிய உடல் பாகங்கள் மூன்று-நான்கு நாட்களுக்கு முன்பு அங்கு கொலை நடந்திருக்கலாம் என்ற சந்தேகத்தை ஏற்படுத்தியது.

    சந்தேக நபரை கைது செய்த போலீசார், கொலைக்கான காரணத்தை அறிய விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இதே போல இன்னொரு சம்பவம் கடந்த ஆண்டு மே மாதம், டெல்லியிலும் நடந்தது.

    அப்போது, ஆப்தாப் பூனாவாலா என்ற நபர், தனது காதலியை கொலை செய்து, அவரது உடலை துண்டுதுண்டாக வெட்டி நகரத்தின் பல இடங்களில் வீசிவிட்டு சென்றார்.

    மேலும், அந்த உடல் பாகங்கள் மூன்று வாரங்களாக பிரிட்ஜில் பதப்படுத்தி வைக்கப்பட்டிருந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    இந்தியா
    கொலை
    மும்பை
    காவல்துறை

    சமீபத்திய

    தீவிரமான புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ள முன்னாள் அமெரிக்கா அதிபர் ஜோ பைடன் ஜோ பைடன்
    ஜூன் 3 ஆம் தேதி டாடா ஹாரியர் EV அறிமுகம்: என்ன எதிர்பார்க்கலாம்? டாடா மோட்டார்ஸ்
    மாம்பழம், பப்பாளி, வாழைப்பழம்- சாப்பிட மட்டுமல்ல, பளபளப்பான சருமத்திற்கான மாஸ்க்காகவும் பயன்படுத்தலாம் சரும பராமரிப்பு
    ஐபிஎல் 2025: ஜெய்ப்பூரில் பஞ்சாப் கிங்ஸ் அணி முதல் இன்னிங்ஸில் அதிகபட்ச ஸ்கோரை பதிவு செய்தது பஞ்சாப் கிங்ஸ்

    இந்தியா

    டெல்லியின் "மிஷன் மலாமல்" கொலை வழக்கு: உறவினர்கள் இருவர் கைது  டெல்லி
    இந்தியாவில் குறையும் ஸ்டார்ட்அப் முதலீடுகள்.. ஏன்? ஸ்டார்ட்அப்
    ஒடிசாவில் மீண்டும் ஒரு ரயில் தடம் புரண்டது  ஒடிசா
    இந்தியாவில் ஒரே நாளில் 174 கொரோனா பாதிப்பு: 2 பேர் பலி கொரோனா

    கொலை

    டெல்லி இளம்பெணின் கொலை வழக்கு: குற்றவாளிக்கு மரண தண்டனை விதிக்க கோரிக்கை  இந்தியா

    மும்பை

    செல்ல நாய்க்கு முன்னுரிமை கொடுத்து நடந்த அம்பானி வீட்டு விசேஷம் வைரல் செய்தி
    ஐஸ்வர்யா ராய் முதல் சச்சின் டெண்டுல்கர் வரை: அம்பானி வீட்டு விசேஷத்தில் பங்கு பெற்ற பிரபலங்களின் பட்டியல் ஐஸ்வர்யா ராய்
    விஸ்தாரா விமானத்தில் அரை நிர்வாணமாக தகராறு செய்த பயணி கைது இந்தியா
    மும்பையில் பொது இடத்தில் கணவன் மனைவி அடித்துக்கொள்ளும் வீடியோ: Couplegoals என்று வைரல் வைரல் செய்தி

    காவல்துறை

    கள்ளக்காதல் குறித்து கேள்விக்கேட்ட மனைவியை 9 துண்டுகளாக வெட்டிக்கொன்ற கணவர் - ஜார்கண்ட்டில் பயங்கரம்  இந்தியா
    குஜராத்தில் 5 ஆண்டுகளில் 41 ஆயிரம் பெண்கள் மாயம் - அதிர்ச்சி தகவல்  குஜராத்
    திகார் சிறையில் நடந்த கொலை: தமிழக போலீசார் 7 பேர் சஸ்பெண்ட் இந்தியா
    திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பாதுகாப்பினை மீறி பக்தர் எடுத்த வீடியோ பதிவு  திருப்பதி
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025