NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / மத்திய பிரதேசம்: பாதிக்கப்பட்ட பழங்குடியின நபரை நேரில் அழைத்து மன்னிப்பு கோரிய முதலமைச்சர் ஷிவ்ராஜ் சிங் சவுகான்
    அடுத்த செய்திக் கட்டுரை
    மத்திய பிரதேசம்: பாதிக்கப்பட்ட பழங்குடியின நபரை நேரில் அழைத்து மன்னிப்பு கோரிய முதலமைச்சர் ஷிவ்ராஜ் சிங் சவுகான்
    பாதிக்கப்பட்ட பழங்குடியின நபரை நேரில் அழைத்து மன்னிப்பு கோரிய முதலமைச்சர் ஷிவ்ராஜ் சிங் சவுகான்

    மத்திய பிரதேசம்: பாதிக்கப்பட்ட பழங்குடியின நபரை நேரில் அழைத்து மன்னிப்பு கோரிய முதலமைச்சர் ஷிவ்ராஜ் சிங் சவுகான்

    எழுதியவர் Venkatalakshmi V
    Jul 06, 2023
    11:04 am

    செய்தி முன்னோட்டம்

    இரு தினங்களுக்கு முன்னர், மத்திய பிரதேசம் சித்தி மாவட்டத்தில், பழங்குடியினத் தொழிலாளி ஒருவர் மீது, பிரவேஷ் சுக்லா என்பவர் சிறுநீர் கழிக்கும் வீடியோ வைரலானது.

    நாடு முழுவதும் இந்த செயலுக்கு கண்டனம் தெரிவித்ததை அடுத்து, பிரவேஷ் ஷுக்லா தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார்.

    தொடர்ந்து, சுக்லா தங்கி இருந்த வீட்டை, முறையில்லாமல் கட்டப்பட்டுள்ளது எனக்கூறி, நேற்று (ஜூலை 5 .,) இடித்து தள்ளிவிட்டனர், அரசாங்க அதிகாரிகள்.

    சுக்லாவுக்கு எதிராக இந்திய தண்டனைச் சட்டம்(IPC), மற்றும் எஸ்சி/எஸ்டி சட்டத்தின் பிரிவுகள் 294(ஆபாசமான செயல்கள்) மற்றும் 504(அமைதியை மீறும் வகையில் வேண்டுமென்றே அவமதிப்பது) ஆகியவற்றின் கீழ் FIR பதிவு செய்யப்பட்டுள்ளது.

    card 2

    பாதிக்கப்பட்டவரை நேரில் சந்தித்த முதல்வர் ஷிவ்ராஜ்

    இந்த சம்பவம் குறித்து, மத்தியபிரதேச முதலமைச்சர் ஷிவ்ராஜ் சிங் சவுஹானிடம் வினவப்பட்டது.

    அவரும், குற்றம் சாட்டப்பட்டவருக்கு "கடுமையான தண்டனையை" அரசாங்கம் வாங்கி தரும் என்று தெரிவித்தார்.

    இதனிடையே, இன்று காலை((ஜூலை 6 .,), பாதிக்கப்பட்ட பழங்குடியின நபர், தஷ்மத் ராவத்தை நேரில் அழைத்து சந்தித்துள்ளார்.

    அப்போது, ராவத்தின் கால்களை கழுவி சுத்தம் செய்து, பாவமன்னிப்பு கூறியதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன.

    மேலும், நடந்த சம்பவத்தை கண்டு தான் அதிர்ச்சியுற்றதாகவும், அதற்கு தான் மன்னிப்பு கேட்டு கொள்வதாக முதலமைச்சர் கூறியதாக தெரிகிறது.

    ட்விட்டர் அஞ்சல்

    மன்னிப்பு கோரிய முதலமைச்சர் ஷிவ்ராஜ்

    Madhya Pradesh Chief Minister Shivraj Singh Chouhan meets Dashmat Rawat and washes his feet at CM House in Bhopal. In a viral video from Sidhi, accused Pravesh Shukla was seen urinating on Rawat.

    Shukla was arrested on 5th July and his illegal construction was demolished by the… pic.twitter.com/YluT3Pj2Gl

    — ANI (@ANI) July 6, 2023
    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    மத்திய பிரதேசம்

    சமீபத்திய

    பாகிஸ்தானுக்கு பின்னடைவு; சூராப் நகரத்தைக் கைப்பற்றியதாக பலுசிஸ்தான் விடுதலை ராணுவம் அறிவிப்பு பலுசிஸ்தான்
    ஜூன் 1, 2025 முதல் இந்த ஸ்மார்ட்போன்களில் எல்லாம் வாட்ஸ்அப் ஆப் செயல்படாது; எந்தெந்த போன் தெரியுமா? வாட்ஸ்அப்
    திமுக பொதுக்குழு கூட்டத்திற்கு முன்னதாக மதுரையில் முதல்வர் ஸ்டாலினுக்கு பேரணி மூலம் பிரமாண்ட வரவேற்பு மு.க.ஸ்டாலின்
    பாடுவதற்கு விதிக்கப்பட்ட தடைக்கு எதிரான சட்டப் போராட்டம் தொடரும் என பின்னணிப் பாடகி சின்மயி உறுதி சின்மயி

    மத்திய பிரதேசம்

    மத்திய பிரதேசத்தை தொடர்ந்து ராஜஸ்தானிலும் இந்திய விமானப்படை விமானம் விபத்து விமானப்படை
    சூடான இரும்பு கம்பியை வைத்து 51 முறை குத்தியதால் மூன்று மாத குழந்தை பலி இந்தியா
    வைரல் வீடியோ: காவல்துறை அதிகாரியை சரமாரியாக தாக்கிய 'பாஜக MLAவின் ஆட்கள்' பாஜக
    வைரல் செய்தி: மத்திய பிரதேச மாநிலத்தில் கிளிக்கும், மைனாவிற்கும் நடந்த வினோத திருமணம் வைரல் செய்தி
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025