NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / மகளை மர்ம கும்பல் கடத்தியதாக புகாரளித்த தாய் - அம்பலமான உண்மை 
    அடுத்த செய்திக் கட்டுரை
    மகளை மர்ம கும்பல் கடத்தியதாக புகாரளித்த தாய் - அம்பலமான உண்மை 
    மகளை மர்ம கும்பல் கடத்தியதாக புகாரளித்த தாய் - அம்பலமான உண்மை

    மகளை மர்ம கும்பல் கடத்தியதாக புகாரளித்த தாய் - அம்பலமான உண்மை 

    எழுதியவர் Nivetha P
    Nov 17, 2023
    08:19 pm

    செய்தி முன்னோட்டம்

    தனது மகளை ஒரு மர்ம கும்பல் கடத்தி சென்றதாக சுனிதா என்பவர் காவல்துறையில் புகாரளித்ததன் பேரில் நடத்தப்பட்ட விசாரணையில் பல உண்மைகள் வெளிவந்துள்ளது.

    கன்னியாகுமாரி மாவட்டம் நாகர்கோவில் மாநகராட்சிக்குட்பட்ட குளச்சல் என்னும் பகுதியில் வசித்து வருகிறார்கள் சுனிதா மற்றும் அவரது மகள் அமர்சியா.

    அமர்சியா பி.காம் 2ம் ஆண்டு பயின்று வருகிறார்.

    விசாரணை 

    கடத்தல் பிரிவின் கீழ் வழக்குப்பதிவு 

    இதனிடையே கடந்த புதன்கிழமை தனது மகள் அமர்சியாவை ஒரு மர்ம கும்பல் வீடு புகுந்து கடத்தி சென்றதாக சுனிதா குளச்சல் காவல் நிலையம் சென்று புகார் அளித்துள்ளார்.

    அந்த புகாரின் அடிப்படையில் கடத்தல் பிரிவில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு காவல்துறை தனது விசாரணையினை துவங்கியது.

    அதன்படி முதற்கட்டமாக அமர்சியாவின் தாயார் சுனிதாவிடம் போலீசார் முதலில் விசாரணை நடத்தியுள்ளனர்.

    விசாரணை 

    யார் மீதாவது சந்தேகம் உள்ளதா? என தாயாரை விசாரித்த காவல்துறை 

    விசாரணையின் போது, யார் மீதாவது சந்தேகம் உள்ளதா? என்று கேட்கப்பட்டதற்கு, தனது மகள் ஒருவரை காதல் செய்வதாகவும், அந்த நபர் தான் தனது மகளை கடத்தியிருப்பார் என சந்தேகம் உள்ளதாகவும் கூறியுள்ளார்.

    அதன்படி மேற்கொண்ட விசாரணையில் அமர்சியாவின் காதலன் டேனியல் ஆகாஷ் அதே பகுதியில் வசித்து வருபவர் என்று தெரியவந்துள்ளது.

    டேனியல் ஆகாஷ் வீட்டிற்கு சென்று பார்த்தபொழுது அமர்சியா அங்கிருந்துள்ளார்.

    இருவரையும் போலீசார் காவல்நிலையம் அழைத்து சென்று விசாரணை செய்துள்ளனர்.

    காவல் 

    கல் உப்பை பரப்பி முட்டி போட வைத்து கொடுமை 

    அப்போது அமர்சியா கூறுகையில், 'நான் ஆகாஷை காதிலிக்கிறேன். அதில் எனது தாயாருக்கு விருப்பம் இல்லை. அதனால் என்னை வீட்டில் ஓர் அறையில் அடைத்து வைத்து அடித்தார்' என்றும்,

    'கல் உப்பை பரப்பி அதில் என்னை முட்டி போட வைத்தும், நடக்க வைத்தும் கொடுமைப்படுத்தினார்.

    இதுகுறித்து நான் ஆகாஷிடம் கூறினேன், பின்னர் அவர் வீட்டிற்கே சென்று விட்டேன்' என்றும் கூறியுள்ளார்.

    அறிவுரை 

    திருமணம் செய்துகொள்ளுமாறு அறிவுரை வழங்கிய காவல்துறை 

    இதுகுறித்து தனது வீட்டிற்கு தகவல் தெரிவித்ததாகவும் அவர் கூறியுள்ளார்.

    அமர்சியா மேஜர் என்பதால் காவல்துறையினர் அவர் விருப்பப்படி அவரை அவரது காதலனுடன் செல்ல அனுமதித்ததோடு, விரைவில் திருமணம் செய்துக்கொள்ளுமாறு அறிவுரையும் வழங்கியுள்ளனர்.

    இன்னமும் காதலுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் பெற்றோர் அவர்களது பிள்ளைகளை கொடுமை படுத்துவதை நிறுத்தவில்லை என்பது இந்த செய்தி மூலம் அறிந்துகொள்ள முடிகிறது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    காவல்துறை
    காவல்துறை
    கன்னியாகுமரி
    கடத்தல்

    சமீபத்திய

    சசிகுமார்- சிம்ரனின் டூரிஸ்ட் பேமிலி OTT வெளியீட்டு விவரங்கள் இதோ! ஜியோஹாட்ஸ்டார்
    IPL 2025: ஒரு அணியின் வெற்றியால் ப்ளே ஆஃப்க்கு தகுதி பெற்ற 3 அணிகள் ஐபிஎல் 2025
    ஐபிஎல்லில் தனது 5வது சதத்தை கே.எல். ராகுல் அடித்தார்: முக்கிய புள்ளிவிவரங்கள் கே.எல்.ராகுல்
    ஹைதராபாத்தில் குண்டுவெடிப்பு சதியா? ஐ.எஸ்.ஐ.எஸ். தொடர்புடைய 2 சந்தேக நபர்கள் கைது  ஹைதராபாத்

    காவல்துறை

    'அதி புத்திசாலி': கேரள குண்டுவெடிப்புக்கு காரணமாக இருந்த டொமினிக் மார்ட்டினின் பின்னணி  கேரளா
    காங்கிரஸில் இணைகிறார் முன்னாள் டிஜிபி ரவி டெல்லி
    நடிகை கௌதமி அளித்த புகார் - அழகப்பன் உட்பட 6 பேரை பிடிக்க 3 தனிப்படைகள்  தமிழ் சினிமா
    ஜார்கண்ட் மருத்துவக்கல்லூரியில் தமிழக மருத்துவர் பாதி எரிந்த நிலையில் சடலமாக மீட்பு  மருத்துவக் கல்லூரி

    காவல்துறை

    மாணவி பாலியல் சீண்டலுக்கு உள்ளாக்கப்பட்டதற்கு எதிராக IIT-BHU வில் போராட்டம் உத்தரப்பிரதேசம்
    தூத்துக்குடி புதுமண தம்பதி கொலை வழக்கு - பெண்ணின் தந்தை அதிரடி கைது  திருமணம்
    முகேஷ் அம்பானிக்கு கொலை மிரட்டல் விடுத்த வாலிபர் கைது கைது
    திமுக வழக்கறிஞர் சரமாரியாக வெட்டி கொலை: காரணம் என்ன ? - க்ரைம் ஸ்டோரி க்ரைம் ஸ்டோரி

    கன்னியாகுமரி

    உடல்நலக் குறைவால் மருத்துவமனையில் அனுமதிப்பட்டார் நாஞ்சில் சம்பத் மு.க.ஸ்டாலின்
    விவேகானந்தர் பாறை-திருவள்ளுவர் சிலை இடையே கண்ணாடி பாலம் தமிழ்நாடு
    தமிழகத்தில் உரிய உரிமம் இல்லாமல் இறைச்சி கடை நடத்தக்கூடாது-உயர்நீதிமன்ற மதுரை கிளை தமிழ்நாடு
    குமரியில் மகா சிவராத்திரியன்று நடக்கும் சிவாலய ஓட்டம் - 12 சிவாலயங்கள் மாவட்ட செய்திகள்

    கடத்தல்

    கடந்த மூன்று ஆண்டுகளில் தமிழ்நாட்டில் தங்க கடத்தல் அதிகரிப்பு - IRS அதிகாரி அதிர்ச்சி தகவல் தமிழ்நாடு
    மலேசியாவில் இருந்து சென்னைக்கு கடத்தி வந்த அரிய வகை குரங்குகள் - திருப்பியனுப்ப அதிகாரிகள் நடவடிக்கை மலேசியா
    கேரள மாநிலம், கொச்சி விமான நிலையத்தில் ரூ.49.5 லட்சம் மதிப்புள்ள தங்கம் பறிமுதல் கேரளா
    குஜராத்தில் 5 ஆண்டுகளில் 41 ஆயிரம் பெண்கள் மாயம் - அதிர்ச்சி தகவல்  குஜராத்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025