NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / திருமணம் ஆகாதவர்களுக்கு மாதந்தோறும் ஊக்கத்தொகை - ஹரியானா மாநிலம் 
    அடுத்த செய்திக் கட்டுரை
    திருமணம் ஆகாதவர்களுக்கு மாதந்தோறும் ஊக்கத்தொகை - ஹரியானா மாநிலம் 
    திருமணம் ஆகாதவர்களுக்கு மாதந்தோறும் ஊக்கத்தொகை வழங்கப்படும் என அறிவித்த ஹரியானா முதலமைச்சர்

    திருமணம் ஆகாதவர்களுக்கு மாதந்தோறும் ஊக்கத்தொகை - ஹரியானா மாநிலம் 

    எழுதியவர் Nivetha P
    Jul 06, 2023
    06:31 pm

    செய்தி முன்னோட்டம்

    இந்தியாவில் உள்ள ஹரியானா மாநிலத்தின் முதல்வர் அம்மாநிலத்தில் உள்ள திருமணம் ஆகாதவர்களுக்கு மாதந்தோறும் ஊக்கத்தொகை வழங்கப்படும் என்று ஓர் அதிரடி அறிவிப்பினை அறிவித்துள்ளார்.

    ஹரியானா கர்னல் மாவட்டத்தில் மக்கள் குறைத்தீர் கூட்டமானது அண்மையில் நடந்தது.

    இந்த கூட்டத்தில் அம்மாநில முதல் அமைச்சர் மனோகர் லால் கட்டார் அவர்கள் பங்கேற்று மக்களின் குறைகளை கேட்டறிந்தார்.

    அப்போது திருமணம் ஆகாத 60 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் தனக்கு ஊக்கத்தொகை கொடுக்காதது குறித்து புகார் தெரிவித்துள்ளார்.

    அதற்கு பதில் கூறிய முதல்வர் மனோகர் லால் கட்டார், ஹரியானாவில் இனி திருமணம் ஆகாத நபர்களுக்கும் விரைவில் ஊக்கத்தொகை வழங்குவதாக ஓர் அறிக்கையினை அறிவித்துள்ளார்.

    ஊக்கத்தொகை 

    திருமணம் ஆகாத நபர்களுக்கு இனி மாதந்தோறும் ரூ.2,750 ஊக்கத்தொகை

    அம்மாநில முதல்வரின் இந்த அறிவிப்பின் படி, 45 வயதுமுதல் 60 வயது வரையுள்ள திருமணமாகாத நபர்களுக்கு ஹரியானா அரசு விரைவில் ஊக்கத்தொகையினை வழங்க திட்டமிட்டு, அதற்கான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

    இப்புதிய திட்டத்தின் மூலம், கிட்டத்தட்ட 2 லட்சம் பேர் பயனடைவார்கள் என்று கூறப்படுகிறது.

    தொடர்ந்து அம்மாநில முதல்வர் இந்த திட்டம் குறித்து மாநில அரசு அடுத்த ஒரு மாத கால அவகாசத்திற்குள் முடிவெடுக்கும் என்றும் தெரிவித்துள்ளார்.

    இதன்படி, திருமணம் ஆகாத நபர்கள் இனி மாதந்தோறும் ரூ.2,750 ஊக்கத்தொகையாக பெறுவார்கள் என்றும் தெரிகிறது.

    ஏற்கனவே, அந்த மாநிலத்தில் பெண் குழந்தைகள் மட்டும் உள்ள குடும்பத்தில் தாய், தந்தை ஆகியோரில் யாரேனும் ஒருவர் உயிரிழந்தாலும் ஊக்கத்தொகை வழங்கும் திட்டம் அமலில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    முதல் அமைச்சர்
    ஹரியானா
    மாநில அரசு

    சமீபத்திய

    தடாலடியாக உயர்ந்த தங்கம் விலை; இன்றைய நிலவரம் என்ன? தங்கம் வெள்ளி விலை
    பள்ளி மாணவர்களுக்கு குட் நியூஸ்; கோடை விடுமுறைக்குப் பின் பள்ளிகள் திறப்பு தாமதமாக வாய்ப்புள்ளதாக தகவல் பள்ளிகள்
    ரூ.1,000 கோடி டாஸ்மாக் பணமோசடி வழக்கில் தமிழகத்தில் 10 இடங்களில் அமலாக்கத்துறை சோதனை டாஸ்மாக்
    உங்கள் ஏரியாவில் நாளை (மே 17) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள் மின்தடை

    முதல் அமைச்சர்

    'சலூன்' ரயில் பெட்டியில் தென்காசி சென்றார் முதல்வர் ஸ்டாலின்
    குஜராத் முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார் குஜராத்
    இமாச்சல் முதல்வர் பதவியேற்பு: ட்விட்டரில் குவியும் வாழ்த்து! இந்தியா
    தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் திருச்சி பயணம் - ரூ.3000 கோடி மதிப்பிலான நலத்திட்டங்களை துவக்கி வைக்கிறார் தமிழ்நாடு

    ஹரியானா

    திருவண்ணாமலையில் 4 ஏடிஎம் இயந்திரங்களில் கொள்ளை - தனிப்படைகள் அமைத்து காவல்துறை தேடல் திருவண்ணாமலை
    OYO நிறுவனரின் தந்தை 20வது மாடியில் இருந்து விழுந்து உயிரிழந்தார் இந்தியா
    கொலை வழக்கிற்கு சாட்ஜிபிடியின் உதவியை நாடிய நீதிமன்றம்! நடந்தது என்ன? சாட்ஜிபிடி
    லண்டன் கல்லூரியில் இந்தியாவுக்கு எதிரான பிரச்சாரம் நடந்ததாக இந்திய மாணவர் குற்றம் சாட்டு லண்டன்

    மாநில அரசு

    தமிழகத்தில் 20 மாதங்களில் 444 கோயில்களுக்கு கும்பாபிஷேகம் - அறநிலையத்துறை அமைச்சர் தமிழ்நாடு
    முதலமைச்சருக்கு ஷூவை பரிசாக வழங்கி சவால் விட்ட பெண் ஆந்திரா
    சென்னையில் பேனா நினைவு சின்னம்-மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க பசுமை தீர்ப்பாயம் உத்தரவு மத்திய அரசு
    வேலையில்லா பட்டதாரிகளுக்கு மாதம் ரூ.2500 - சத்தீஸ்கர் மாநில அரசு அறிவிப்பு இந்தியா
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025