NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / மகளிர் உரிமை தொகைக்கு கூடுதல் பெண்கள் தகுதி: முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவிப்பு
    அடுத்த செய்திக் கட்டுரை
    மகளிர் உரிமை தொகைக்கு கூடுதல் பெண்கள் தகுதி: முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவிப்பு
    வீடியோ பதிவில் இந்த தகவலை முதல்வர் தெரிவித்துள்ளார்

    மகளிர் உரிமை தொகைக்கு கூடுதல் பெண்கள் தகுதி: முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவிப்பு

    எழுதியவர் Venkatalakshmi V
    Jul 05, 2024
    11:27 am

    செய்தி முன்னோட்டம்

    தமிழக அரசின் சார்பில், தமிழ்நாட்டில் ரேஷன் கார்டு வைத்திருக்கும் தகுதியுள்ள 1 கோடியே 16 லட்சம் மகளிருக்கு மாதந்தோறும் ஆயிரம் ரூபாய் உரிமைத் தொகை தரப்பட்டுவருகிறது.

    இந்த எண்ணிக்கை தற்போது உயர்ந்து, கூடுதலாக 1 லட்சத்து 48 ஆயிரம் பெண்கள் தகுதியுடைவர்களாக கண்டறியப்பட்டு, அவர்களுக்கும் விரைவில் மகளிர் உரிமைத் தொகை தரப் போகிறோம் என முதல்வர் மு.க. ஸ்டாலின் கூறியுள்ளார்.

    வரும் ஜூலை 10-ஆம் நாள் நடைபெறவுள்ள விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தலில், திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் நிறுத்தப்பட்டுள்ள வேட்பாளர் அன்னியூர் சிவாவை ஆதரித்து ஒரு வீடியோ பதிவை வெளியிட்டார் முதல்வர் ஸ்டாலின்.

    அதன் வீடியோ பதிவில் இந்த தகவலை அவர் தெரிவித்துள்ளார்.

    ட்விட்டர் அஞ்சல்

    மு.க.ஸ்டாலின் வீடியோ பதிவு

    சாதனைகளால் தமிழ்நாட்டை முன்னேற்றப் பாதையில் அழைத்துச் செல்லும் @arivalayam-த்தின் வேட்பாளராக விக்கிரவாண்டி தொகுதியில் போட்டியிடும் திரு. அன்னியூர் சிவா அவர்களுக்கு உதயசூரியன் சின்னத்தில் வாக்களித்து வெற்றிபெறச் செய்யுங்கள்!#VikravandiByElection #Vote4DMK pic.twitter.com/Oil1HPF5eH

    — M.K.Stalin (@mkstalin) July 5, 2024

    உதவித்தொகை

    மகளிர் உதவித்தொகை

    அந்த வீடியோ பதிவில், "நம்முடைய திராவிட மாடல் ஆட்சியில், கடந்த மூன்றாண்டு காலத்தில் செய்து தரப்பட்டிருக்கும் நலத்திட்டங்களை விவரித்து சொல்ல வேண்டும் என்றால் நேரம் போதாது! 1 கோடியே 16 லட்சம் மகளிர் மாதந்தோறும் ஆயிரம் ரூபாய் உரிமைத் தொகை பெறுகிறார்கள்".

    "இந்த மாதத்தில் இருந்து புதிதாக 1 லட்சத்து 48 ஆயிரம் பெண்களுக்கு மகளிர் உரிமைத் தொகை தரப் போகிறோம்! மகளிருக்குக் கட்டணமில்லா பேருந்து வசதி செய்து தரப்பட்டிருக்கிறது.

    "'நான் முதல்வன்' திட்டத்தின் மூலமாக, இளைஞர்கள் அனைத்து வேலைகளையும் பெற தகுதி உள்ளவர்களாக உயர்த்தப்பட்டு வருகிறார்கள்".

    "'புதுமைப்பெண் திட்டம்' மூலமாக, அரசுப் பள்ளியில் படித்து கல்லூரிக் கல்விக்கு வரும் மாணவியருக்கு மாதந்தோறும் ஆயிரம் ரூபாய் தரப்படுகிறது" என தெரிவித்தார்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    தமிழக அரசு
    தமிழ்நாடு
    மு.க ஸ்டாலின்

    சமீபத்திய

    ஐபிஎல் 2025க்கு பிறகு எம்எஸ் தோனி விளையாடுவது சந்தேகம்; முன்னாள் எஸ்ஆர்எச் பயிற்சியாளர் கருத்து எம்எஸ் தோனி
    சிந்து நதிநீர் ஒப்பந்தத்தில் பாகிஸ்தானுக்கு அடுத்த அடி; ரன்பீர் கால்வாயின் நீளத்தை இரட்டிப்பாக்க இந்தியா பரிசீலனை சிந்து நதி நீர் ஒப்பந்தம்
    இறந்து பிறந்த குழந்தையை மருத்துவமனை ஃப்ரீசரில் விட்டுச் சென்ற பெண்ணுக்கு சிறை தண்டனை; எங்கே தெரியுமா? தைவான்
    இங்கிலாந்து சுற்றுப்பயணத்திற்கான இந்திய ஏ கிரிக்கெட் அணி அறிவிப்பு; கேப்டனாக அபிமன்யு ஈஸ்வரன் தேர்வு இந்திய கிரிக்கெட் அணி

    தமிழக அரசு

     22ஆம் தேதி வரை சட்டப்பேரவை கூட்டத்தொடர் நடைபெறும்: அலுவல் கூட்டத்தொடரில் முடிவு சட்டமன்றம்
    அரசு ஊழியர்கள் ஸ்ட்ரைக்: மாவட்ட கலெக்டர்களுக்கு பறந்த உத்தரவு தமிழகம்
    அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கு முழு உடல் பரிசோதனை: தமிழக அரசு உத்தரவு அரசு பள்ளி
    தமிழக பட்ஜெட்: சிலப்பதிகாரம், மணிமேகலை நூல்களை மொழிபெயர்க்க நிதி ஒதுக்கீடு தமிழகம்

    தமிழ்நாடு

    தேர்தல் 2024: திமுக சார்பில் களமிறங்கும் 11 புதுமுகங்கள் தேர்தல்
    தமிழ்நாட்டில் போட்டியிடும் பாஜகவின் 2வது கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியானது பாஜக
    தமிழ்நாடு பாஜக தொண்டர்களுடன் இன்று மாலை 5 மணிக்கு 'நமோ செயலி' மூலம் உரையாடுகிறார் பிரதமர் மோடி  பாஜக
    பேறுகால சிக்கல்கள் குறைந்தாலும், அதிகரிக்கும் சிசேரியன் பிரசவங்கள்: IIT மெட்ராஸ் ஆய்வில் தகவல் கர்ப்பம்

    மு.க ஸ்டாலின்

    திமுக முன்னாள் எம்எல்ஏ கு.க.செல்வம் காலமானார்: முதலமைச்சர் நேரில் சென்று அஞ்சலி  சென்னை
    கிளாம்பாக்கத்தில் புதிய ரயில் நிலையம் அமைக்க திட்டம் - ரூ.20 கோடி நிதி ஒதுக்கீடு சென்னை
    சென்னையில் அமையும் அடிடாஸ் நிறுவனத்தின் ஆராய்ச்சி கூடம்  சென்னை
    கோவையின் புது அடையாளம்-தமிழ் எழுத்துக்களால் உருவாக்கப்பட்டுள்ள பிரம்மாண்ட திருவள்ளுவர் சிலை கோவை
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025