NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / பான்-ஆதார் இணைப்புக்கான காலக்கெடு முடிந்தது, இனி என்ன?
    அடுத்த செய்திக் கட்டுரை
    பான்-ஆதார் இணைப்புக்கான காலக்கெடு முடிந்தது, இனி என்ன?
    பான்-ஆதார் இணைப்புக்கான காலக்கெடு முடிந்தது

    பான்-ஆதார் இணைப்புக்கான காலக்கெடு முடிந்தது, இனி என்ன?

    எழுதியவர் Prasanna Venkatesh
    Jul 03, 2023
    10:23 am

    செய்தி முன்னோட்டம்

    பானுடன் ஆதாரை இணைக்க வேண்டும் என கடந்த சில ஆண்டுகளாகவே அறிவிப்பை வெளியிட்டு வருகிறது மத்திய அரசு. பல்வேறு அறிவிப்புகளைத் தொடர்ந்து பலரும் பான் மற்றும் ஆதாரை இணைப்பதில் மெத்தனம் காட்டியதையடுத்து, கால அவகாசமும் தொடர்ந்து நீட்டிக்கப்பட்டுக் கொண்டே வந்தது.

    இறுதியாக, கடந்த ஜூன் 30-ம் தேதி வரை ரூ.1,000 அபராதத்துடன் பானுடன் ஆதாரை இணைத்துக் கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டிருந்தது.

    எப்போதும், குறிப்பிட்ட காலக்கெடு முடிவுக்கு வருவதற்கு முன்பு புதிய காலக்கெடுவை மத்திய அரசு அறிவிக்கும். ஆனால், இந்த முறை அப்படி புதிய காலக்கெடு எதுவும் அறிவிக்கப்படவில்லை.

    மேலும், கடந்த 30-ம் தேதிக்குள் பான்-ஆதாரை இணைக்காதவர்களின் பான் கார்டு செயலிழந்து விடும் என முன்னர் வெளியிட்டிருந்த அறிவிப்பிலேயே மத்திய அரசு குறிப்பிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

    இந்தியா

    பானுடன் ஆதாரை இணைக்கவில்லை என்றால் என்ன நடக்கும்? 

    பானுடன் ஆதாரை இணைக்காதவர்களின் பான் அட்டையானது மத்திய அரசு அறிவித்தது போல் செயலிழந்து விடும். செயலிழந்த பான் கார்டு என்பது பான் கார்டு இல்லாததற்கு சமம்.

    பான் அட்டை இல்லாமல் ஒருவரால் வருமான வரித்தாக்கல் செய்ய முடியாது. நம்முடைய பான் அட்டையைக் கொடுத்து நாம் சமர்ப்பித்து, நிலுவையில் இருக்கும் செயல்பாடுகள் எதுவும் முடிக்கப்படாது. மேலும், பான் அட்டை இல்லை என்றால், கூடுதலான வரியை நாம் செலுத்த வேண்டியிருக்கும்.

    ஜூன் 30-க்குப் பிறகு தற்போதும் பானுடன் ஆதாரை இணைக்க முடியும். நாம் ஆதாரை இணைப்பதற்கான படிவத்தை சமர்ப்பித்ததில் இருந்து 30 நாட்களுக்குள் நம்முடைய பான் அட்டை செயல்பாட்டிற்கு வந்து விடும். ஆனால், இப்போது பானுடன் ஆதாரை இணைப்பதற்கு ரூ.1000 அபராதத் தொகை செலுத்த வேண்டியிருக்கும்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    பான் கார்டு
    இந்தியா
    மத்திய அரசு

    சமீபத்திய

    உங்கள் ஏரியாவில் நாளை (மே 21) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள் மின்தடை
    அமெரிக்காவே செய்யும் போது, உங்களுக்கு என்ன?- தீவிரவாதிகளை பாக்., ஒப்படைக்க வேண்டும் என இந்திய தூதர் வலியுறுத்தல் இந்தியா
    ஐபிஎல் வரலாற்றில் அதிவேகமாக 150 விக்கெட்டுகள்; எஸ்ஆர்எச் வீரர் ஹர்ஷல் படேல் சாதனை ஐபிஎல்
    ஆகஸ்ட் 29 அன்று நடிகர் விஷால்- நடிகை சாய் தன்ஷிகா திருமணம்; யோகி டா படவிழாவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு விஷால்

    பான் கார்டு

    யூனியன் பட்ஜெட்; பான் கார்ட்டை இனி பொது அடையாள அட்டையாக பயன்படுத்தலாம்! இந்தியா
    ஆதார்-பான் கார்டு இணைப்புக்கு மார்ச் 31 கெடு! இணைப்பது எப்படி? ஆதார் புதுப்பிப்பு
    ஆதார் கார்டுடன் இணைக்கப்படாத பான் கார்டுகள் அனைத்தும் செயலிழந்துவிடும் - மத்திய அரசு மத்திய அரசு
    பான் எண்ணுடன் ஆதார் இணைக்காவிட்டால் என்ன நடக்கும்? எச்சரிக்கை அரசு திட்டங்கள்

    இந்தியா

    இன்றைய தங்கம் வெள்ளி விலை நிலவரம்: ஜூன் 27 தங்கம் வெள்ளி விலை
    மூலதன முதலீட்டு நிதியில் தமிழகத்திற்கு ரூ.4,079 கோடி ஒதுக்கீடு - மத்திய அரசு  மத்திய அரசு
    நடுவானில் விமானத்தின் தரையில் மலம் கழித்த பயணி கைது ஏர் இந்தியா
    பிரதமர் மோடியிடம் கேள்வி கேட்ட பத்திரிகையாளருக்கு நெருக்கடி: வெள்ளை மாளிகை கண்டனம் பிரதமர் மோடி

    மத்திய அரசு

    பிரிஜ் பூஷனை கைது செய்ய போதுமான ஆதாரம் இல்லை: டெல்லி காவல்துறை  இந்தியா
    மல்யுத்த வீரர்கள் விசாரணை முடிவடையும் வரை காத்திருக்க வேண்டும்:  மத்திய அமைச்சர்  இந்தியா
    'மோடி அரசு எனது மொபைலை ஒட்டு கேட்கிறது': ராகுல் காந்தி குற்றச்சாட்டு  ராகுல் காந்தி
    வணிக பயன்பாட்டிற்கான சமையல் எரிவாயு சிலிண்டர் விலை அதிரடி குறைவு இந்தியா
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025