NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / மாடர்ன் தியேட்டர்ஸ் விவகாரம் குறித்து அமைச்சர் எ.வ.வேலு விளக்கம் 
    அடுத்த செய்திக் கட்டுரை
    மாடர்ன் தியேட்டர்ஸ் விவகாரம் குறித்து அமைச்சர் எ.வ.வேலு விளக்கம் 
    மாடர்ன் தியேட்டர்ஸ் விவகாரம் குறித்து அமைச்சர் எ.வ.வேலு விளக்கம்

    மாடர்ன் தியேட்டர்ஸ் விவகாரம் குறித்து அமைச்சர் எ.வ.வேலு விளக்கம் 

    எழுதியவர் Nivetha P
    Dec 15, 2023
    08:04 pm

    செய்தி முன்னோட்டம்

    சேலம் மாடர்ன் தியேட்டர்ஸ் நுழைவுவாயிலில் மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி சிலை நிறுவ தமிழக அரசு திட்டமிட்டுள்ளதாக செய்திகள் பரவி வருகிறது.

    இந்த விவகாரம் குறித்து நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் எ.வ.வேலு விளக்கமளித்துள்ளார்.

    அவர் கூறியுள்ளதாவது, மாடர்ன் தியேட்டர்ஸ் நுழைவுவாயிலில் சிலை அமைக்க அந்த இடத்தினை கேட்டு தமிழக அரசு நிர்பந்திப்பதாக செய்திகள் பரவுகிறது.

    ஆனால் அந்நிறுவனம் செயல்பட்டு வந்த 8.9ஏக்கர் நிலம் தற்போது காலிமனைகளாகவும், வணிகம் செய்யும் பகுதிகளாகவும் மாற்றப்பட்டு பயன்படுத்தப்பட்டு வருகிறது.

    இப்பகுதியின் நுழைவாயில் சேலம்-ஏற்காடு நெடுஞ்சாலையில் கன்னங்குறிச்சி என்னும் கிராமத்தின் சர்வே எண்.8ல் அமைந்துள்ளது.

    இப்பகுதியில் சாலையினை விரிவாக்கம் செய்யவுள்ளதால் தமிழக நெடுஞ்சாலைத்துறை நிலங்களின் எல்லைகளை நிர்ணயம் செய்ய அலுவலர்கள் கொண்டு கடந்த 2ம்.,தேதி அளவீடு செய்தது என்று கூறியுள்ளார்.

    சாலை 

    இடத்தை கேட்டு நிர்பந்திப்பதாக வெளியாகும் செய்திகள் அனைத்தும் தவறானவை - அமைச்சர் 

    மேலும் அவர், அவ்வாறு அளவீடு செய்ததில் மாடர்ன் தியேட்டர்ஸ் நுழைவாயில் முழுமையாக நெடுஞ்சாலைத்துறை நிலத்தில் அமைந்திருப்பது தெரியவந்துள்ளது.

    எனவே அரசின் நிலவரைபடத்தில் இருப்பதுப்போல் வரையறை செய்ய, நெடுஞ்சாலையின் எல்லைப்பகுதியில் உள்ள எந்த சொத்துக்களுக்கும் பாதிப்பில்லாமல் எல்லை கற்கள் நடப்பட்டது என்று கூறியுள்ளார்.

    தொடர்ந்து, மாடர்ன் தியேட்டர்ஸ் நுழைவாயில் வளைவுப்பகுதி முழுவதும் நெடுஞ்சாலைத்துறை நிலத்தில் அமைந்திருப்பதால், பழமையான இந்நுழைவாயிலை பாதுகாப்பதோடு, பராமரிக்க வேண்டும் என்பதே அரசின் நோக்கம் என்றும்,

    அதனடிப்படையில் இப்பகுதியில் வேறு எவ்வித கட்டுமான பணிகளை மேற்கொள்ளவோ, சிலைகளை நிறுவவோ அரசிடம் திட்டம் ஏதுமில்லை என்றும் விளக்கமளித்துள்ளார்.

    இதனிடையே, அரசு தரப்பில் நெடுஞ்சாலைத்துறை இடத்தினை தவிர்த்து வேறு இடத்தை கேட்டு நிர்பந்திப்பதாக வெளியாகும் செய்திகள் அனைத்தும் தவறானவை என்பதை தெளிவுபடுத்துவதாகவும் அவர் கூறியுள்ளார்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    சேலம்
    தமிழக அரசு
    நெடுஞ்சாலைத்துறை
    கருணாநிதி

    சமீபத்திய

    ஆசியாவில் புதிய COVID-19 அலை பரவுகிறது? ஹாங்காங்கிலும் சிங்கப்பூரிலும் அதிகரிக்கும் பாதிப்புகள் கோவிட் 19
    சைபர் கிரைம்களில் இருந்து பயனர்களை பாதுகாக்க ஏஐ மூலம் இயங்கும் புதிய வசதியை அறிமுகம் செய்தது ஏர்டெல் ஏர்டெல்
    போர் நிறுத்தத்திற்கு இடையே பாகிஸ்தான் மீது ராஜதந்திர தாக்குதலை தீவிரப்படுத்தும் இந்தியா இந்தியா
    இந்தியா கூட்டணி வேஸ்ட்; 2029லும் பாஜகவே ஆட்சி அமைக்கும் சூழல் இருப்பதாக ப.சிதம்பரம் பேச்சு சிதம்பரம்

    சேலம்

    சேலத்தில் சக மாணவியை கர்ப்பமாக்கிய 10ம் வகுப்பு மாணவன் - அதிர்ச்சியடைந்த பெற்றோர் பள்ளி மாணவர்கள்
    பஞ்சாப் ராணுவ நிலைய துப்பாக்கி சூடு: இறந்தவர்களில் இருவர் தமிழகத்தை சேர்ந்தவர்கள்  இந்தியா
    சேலம் காவிரி ஆற்றி 4 மாணவர்கள் மூழ்கி பலி! சோக சம்பவம்  தமிழ்நாடு
    சேலம் அரசு மருத்துவமனை ஆவின் பாலகத்தில் திடீர் சோதனை நடத்திய அதிகாரிகள்  அரசு மருத்துவமனை

    தமிழக அரசு

    கலைஞர் மகளிர் உரிமை தொகை திட்டம் - தகுதியானோருக்கு குறுஞ்செய்தி அனுப்பப்படும் மு.க ஸ்டாலின்
    கொசு உற்பத்தி அதிகரிப்பு, தமிழக சுகாதார செயலர் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு உயர்நீதிமன்றம்
    வெங்காய விலையை கட்டுப்படுத்த தமிழக அரசு நடவடிக்கை: பண்ணை பசுமை கடைகளில் கிலோ ரூ.30க்கு விற்பனை  தமிழகம்
    தமிழக அரசின் ஆன்லைன் சூதாட்ட தடை சட்டம் செல்லும்: சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு ஆன்லைன் விளையாட்டு

    நெடுஞ்சாலைத்துறை

    அமைச்சர் எ.வ.வேலு தொடர்புடைய இடங்களில் 2வது நாளாக தொடரும் ரெய்டு தமிழ்நாடு
    சென்னையில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் U-வடிவ மேம்பாலம் திறப்பு தமிழ்நாடு

    கருணாநிதி

    சென்னையில் கருணாநிதிக்கு பேனா நினைவு சின்னம் - கருத்து கேட்புக்கூட்டத்தில் சீமான் எச்சரிக்கை மெரினா கடற்கரை
    தமிழக அரசு - அனைத்து ஒப்புதல்கள் பெற்ற பிறகே பேனா சின்னம் அமைக்கப்படும் என பதில் மனுத்தாக்கல் தமிழக அரசு
    பேனா நினைவு சின்னம் அமைப்பது குறித்து பசுமை தீர்ப்பாயத்தில் பொதுப்பணித்துறை மனு தாக்கல் தமிழ்நாடு
    சென்னை மெரினாவில் பேனா நினைவு சின்னத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து உச்சநீதிமன்றத்தில் பொதுநல மனு சென்னை
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025