NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / வன்முறையினை தூண்டினால் கடும் நடவடிக்கை - அமைச்சர் தங்கம் தென்னரசு எச்சரிக்கை 
    அடுத்த செய்திக் கட்டுரை
    வன்முறையினை தூண்டினால் கடும் நடவடிக்கை - அமைச்சர் தங்கம் தென்னரசு எச்சரிக்கை 
    வன்முறையினை தூண்டினால் கடும் நடவடிக்கை - அமைச்சர் தங்கம் தென்னரசு எச்சரிக்கை

    வன்முறையினை தூண்டினால் கடும் நடவடிக்கை - அமைச்சர் தங்கம் தென்னரசு எச்சரிக்கை 

    எழுதியவர் Nivetha P
    Jul 29, 2023
    01:39 pm

    செய்தி முன்னோட்டம்

    நெய்வேலி-என்.எல்.சி. நிறுவனத்தின் 2ம் சுரங்கப்பாதை அமைக்க விளைநிலங்களை கையகப்படுத்தும் பணி நடந்துவருகிறது.

    இதனை கண்டித்து பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் நேற்று(ஜூலை.,28)என்.எல்.சி. நிறுவனத்தினை முற்றுகையிட்டு நடத்திய போராட்டம் கலவரமாக மாறியநிலையில், கலவரத்தில் ஈடுபட்ட பாமக'வினர் 28 பேர்மீது வழக்குப்பதிவு செய்த காவல்துறை அவர்களை கைது செய்துள்ளது.

    இந்நிலையில் நேற்று மதுரையில் செய்தியாளர்களை சந்தித்த தமிழக நிதியமைச்சர் தங்கம் தென்னரசு இதுகுறித்து கூறுகையில், என்.எல்.சி. நிறுவனத்தின் சுரங்கப்பாதை விரிவாக்கப்பணியினை மேற்கொள்ள பரவனாறு மாற்றுப்பாதை அமைப்பது மிகவும் அவசியம்.

    அதனை செய்தால் தான் அடுத்தகட்ட பணிகளை மேற்கொள்ளமுடியும்.

    இதற்காக தான் 6 கிராமங்களில் அந்நிறுவனம் நிலத்தினை கையகப்படுத்துகிறது.

    இதற்காக முன்னதாகவே 304ஹெக்டர் நிலம் கையகப்படுத்தப்பட்டுள்ள நிலையில், 273-ஹெக்டர் ஏக்கர் நிலம் ஒப்படைக்கப்பட்டு விட்டது என்று கூறியுள்ளார்.

    தங்கம் தென்னரசு 

    தமிழகத்தில் இதுபோன்ற வன்முறைகளை தமிழக அரசு என்றும் அனுமதிக்காது - அமைச்சர் 

    இதனைத்தொடர்ந்து அவர், வெறும் 30-ஹெக்டர் ஏக்கர் நிலம் தான் இன்னும் நிறுவனத்திடம் ஒப்படைக்கப்படவில்லை.

    2006-2013ம் ஆண்டுக்காலக்கட்டத்தில் கையகப்படுத்திய நிலங்களுக்கு ஏக்கருக்கு ரூ.6லட்சம் இழப்பீடுத்தொகை வழங்கப்படுவதோடு, ரூ.10லட்சம் கருணைத்தொகையும் வழங்கப்படுகிறது.

    இவ்வாறு இழப்பீடுகளை பெற்றுக்கொண்டும் சிலர் நிலத்தை ஒப்படைக்காமல் உள்ளனர் என்று கூறியுள்ளார்.

    மேலும், என்.எல்.சி.நிறுவனத்தினை எதிர்த்து பாமக அறவழிப்போராட்டம் நடத்தப்போவதாக கூறியிருந்தனர். ஆனால் அது கலவரமாக மாறியது கண்டனத்திற்குரியது என்றும் தெரிவித்துள்ளார்.

    விவசாயிகள் மற்றும் நில உரிமையாளர்கள் மத்தியில் நடக்கும் இப்பிரச்சனை சில அரசியல்வாதிகளின் தூண்டுதலால் வன்முறையாக மாறுகிறது என்று கூறிய அவர், தமிழகத்தில் இதுபோன்ற வன்முறைகளை தமிழக அரசு என்றும் அனுமதிக்காது என்று கூறியுள்ளார்.

    அதேபோல்,பொது அமைதிக்கு குந்தகம் விளைவிப்போர் யாராக இருந்தாலும் கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று எச்சரிக்கையும் விடுத்துள்ளார்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    பாமக
    அன்புமணி ராமதாஸ்
    நெய்வேலி
    நிதியமைச்சர்

    சமீபத்திய

    70 வயது முதியவரின் வயிற்றில் இருந்து 8,000க்கும் மேற்பட்ட பித்தப்பைக் கற்கள் அகற்றம் மருத்துவம்
    தேசிய கல்விக்கொள்கையை ஏற்க மறுத்ததால் தமிழக அரசுக்கு நிதி கட்; சென்னை உயர்நீதிமன்றத்தில் மத்திய அரசு தகவல் சென்னை உயர் நீதிமன்றம்
    ஆர்சிபி அணியின் கேப்டன் ஆனார் ஜிதேஷ் சர்மா; ரஜத் படிதார் இம்பாக்ட் வீரராக வைக்கப்பட்டது ஏன்? ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்
    அதிகரிக்கும் கொரோனா பரவல்; பூஸ்டர் தடுப்பூசி செலுத்த எய்ம்ஸ் மருத்துவர் வலியுறுத்தல் கொரோனா தடுப்பூசிகள்

    பாமக

    தமிழக முதல்வரை திடீரென சந்தித்தார் பா.ம.க. நிறுவனர் அன்புமணி ராமதாஸ் மு.க.ஸ்டாலின்
    கடலூரில் முழு அடைப்பு போராட்டத்திற்கு பாமக அழைப்பு கடலூர்
    கடலூரில் என்.எல்.சி. நிறுவனத்தை எதிர்த்து பாமக முழு அடைப்பு போராட்டம் - 7,000 போலீசார் குவிப்பு கடலூர்
    திருபுவனம் ராமலிங்கம் கொலை வழக்கு - தமிழகத்தில் 24 இடங்களில் என்ஐஏ சோதனை  என்ஐஏ

    அன்புமணி ராமதாஸ்

    பஸ் கண்ணாடி உடைப்பு, 400 பேர் கைது, போக்குவரத்து நிறுத்தம்: கலவரபூமியாக மாறிய நெய்வேலி கைது

    நெய்வேலி

    பயிர்களை அழித்த என்.எல்.சி., சரமாரி கேள்விகளை எழுப்பிய சென்னை உயர்நீதிமன்றம்  விவசாயிகள்
    NLC கலவரம்: 28 பாமக-வினருக்கு 15 நாட்கள் காவல் கடலூர்

    நிதியமைச்சர்

    கோல்ட்மேன் சாச்ஸ் நிறுவனத்தில் 4000 ஊழியர்கள் பணி நீக்கம் - காரணம்? உலக செய்திகள்
    மத்திய பட்ஜெட் 2023: ஜனவரி 31 ஆம் தேதி தொடங்குகிறது நிர்மலா சீதாராமன்
    பட்ஜெட் கூட்டதொடரில் பேசிய ஜனாதிபதி திரௌபதி முர்முவின் முக்கிய வாக்கியங்கள் பட்ஜெட் 2023
    யூனியன் பட்ஜெட் 2023: பட்ஜெட் உரையில் கூறப்பட்ட சிக்கில் செல் அனீமியா என்றால் என்ன? பட்ஜெட் 2023
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025