Page Loader
அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு நாளை அதிகாலை அறுவை சிகிச்சை
செந்தில் பாலாஜிக்கு நெஞ்சு வலி ஏற்பட்டதால், அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு நாளை அதிகாலை அறுவை சிகிச்சை

எழுதியவர் Sindhuja SM
Jun 20, 2023
10:23 am

செய்தி முன்னோட்டம்

அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு நாளை(ஜூன் 21) அதிகாலை அறுவை சிகிச்சை நடைபெறும் என்று அமைச்சர் மா.சுப்ரமணியன் தெரிவித்துள்ளார். திமுக அமைச்சர் செந்தில் பாலாஜியை சென்ற வாரம், அமலாக்கத்துறை பண மோசடி வழக்கில் கைது செய்தது. அவர் கைதாவதற்கு முன்தினம் சுமார் 18 மணிநேரம் செந்தில் பாலாஜியிடம் மட்டும் விசாரணை நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது. இதனையடுத்து, செந்தில் பாலாஜிக்கு நெஞ்சு வலி ஏற்பட்டதால், அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவரது ரத்த நாளங்களில் அடைப்பு இருப்பதாக கூறினர். மேலும், அவருக்கு உடனடியாக பைபாஸ் அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்று அவர்கள் பரிந்துரைத்தனர்

நக்ட்ஸ்க்

செந்தில் பாலாஜியை காவேரி மருத்துவமனைக்கு மாற்ற உயர் நீதிமன்றம் அனுமதி

இருதய பிரச்சனைகளுக்காக ஏற்கனவே செந்தில் பாலாஜி காவேரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்ததால், சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் இருந்து அவரை காவேரி மருத்துவமனைக்கு மாற்ற அனுமதி கோரப்பட்டது. ஆனால், அமலாக்கத்துறை அதற்கு முற்றிலுமாக மறுப்பு தெரிவித்துவிட்டது. இந்த பிரச்சனை குறித்து விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், மருத்துவர்களின் கூற்றை சந்தேகிக்க முடியாது என்று கூறி, செந்தில் பாலாஜியை காவேரி மருத்துவமனைக்கு மாற்ற அனுமதி வழங்கியது. இந்நிலையில், அமைச்சர் செந்தில் பாலாஜியின் அறுவை சிகிச்சை குறித்த தகவல் எதுவும் வெளியாகாத நிலையில், அந்த அறுவை சிகிச்சை நாளை நடைபெற இருப்பதாக தற்போது அமைச்சர் மா.சுப்ரமணியன் தெரிவித்துள்ளார்.