NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / ராகுல் காந்தியின் நெருங்கிய நண்பராக இருந்த மிலிந்த் தியோரா காங்கிரஸிலிருந்து விலகல்
    அடுத்த செய்திக் கட்டுரை
    ராகுல் காந்தியின் நெருங்கிய நண்பராக இருந்த மிலிந்த் தியோரா காங்கிரஸிலிருந்து விலகல்
    ராகுல் காந்தியின் நெருங்கிய நண்பராக இருந்த மிலிந்த் தியோரா காங்கிரஸிலிருந்து விலகல்

    ராகுல் காந்தியின் நெருங்கிய நண்பராக இருந்த மிலிந்த் தியோரா காங்கிரஸிலிருந்து விலகல்

    எழுதியவர் Venkatalakshmi V
    Jan 14, 2024
    03:03 pm

    செய்தி முன்னோட்டம்

    காங்கிரஸ் மூத்த தலைவரும், ராகுல் காந்தியின் நெருங்கிய நண்பராக கருதப்பட்டவருமான மிலிந்த் தியோரா அக்கட்சியில் இருந்து விலகுவதாக இன்று,(ஜனவரி 14) அறிவித்துள்ளார்.

    மேலும் அவர், காங்கிரஸ் கட்சியுடனான தனது குடும்பத்தின் 55 ஆண்டு கால உறவுக்கு முற்றுப்புள்ளி வைப்பதாகவும் தனது எக்ஸ் தளத்தில் தெரிவித்துள்ளார்.

    காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, பாரத் ஜோடோ நியாய யாத்திரையை மணிப்பூரில் இருந்து இன்று தொடங்க உள்ள நிலையில் மிலிந்த்-ன் இந்த ராஜினாமா அறிவிப்பு வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

    மஹாராஷ்டிரா முதல்வர் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவ சேனாவில் மிலிந்த் தியோரா இணையப்போகிறார் என்றும் செய்திகள் வெளியாகியுள்ளது.

    எனினும் இதை குறித்து செய்தியாளர்கள் நேற்று கேட்டபோது, அதனை வதந்தி என நிராகரித்த மிலிந்த் தியோரா இன்று அதை நிஜமாக்கவுள்ளார்.

    card 2

    பாஜகவின் சதி என காங்கிரஸ் கருத்து 

    மிலிந்த் தியோரா ராஜினாமா செய்ய வேண்டும் என்பதும், அதை எப்போது செய்ய வேண்டும் என்பது கூட பாஜகவும், பிரதமர் நரேந்திர மோடி செய்த சதி என காங்கிரஸ் கட்சியின் தகவல் தொடர்பு பொதுச்செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் விமர்சித்துள்ளார்.

    இது தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள அவர், "தியோரா எந்த தருணத்தில் கட்சியில் இருந்து வெளியேற வேண்டும் என்ற முடிவை லோக் கல்யாண் மார்க்-கில் இருப்பவர்(அதாவது பிரதமர் மோடி) முடிவு செய்துள்ளார். எந்த தருணத்தில் தியோரா கட்சியில் இருந்து வெளியேறினால் அது தலைப்புச் செய்தியாகும் என்பதை நன்கு அறிந்தவர் அவர்" என்று தெரிவித்துள்ளார்.

    எதிர்க்கட்சிகளின் கூட்டணியான இந்தியா ப்ளாக், கூட்டணி கட்சிகளுடன் தொகுதி பங்கீடு குறித்து நேற்று ஆலோசனை செய்தது குறிப்பிடத்தக்கது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    காங்கிரஸ்
    ராகுல் காந்தி

    சமீபத்திய

    பாகிஸ்தானுடன் தொடர்புடைய உளவு வழக்கு தொடர்பாக எட்டு மாநிலங்களில் 15 இடங்களில் என்ஐஏ சோதனை என்ஐஏ
    தாய்லாந்தின் ஓபல் சுச்சாட்டா சுவாங்ஸ்ரி 2025 ஆம் ஆண்டின் உலக அழகியாக தேர்வு மிஸ் வேர்ல்ட்
    11 ஆண்டுகளுக்குப் பிறகு அண்ணன் அழகிரி வீட்டிற்குச் சென்ற முதல்வர் மு.க.ஸ்டாலின்; செங்கோல் வழங்கி வரவேற்பு மு.க.ஸ்டாலின்
    பாகிஸ்தானுக்கு பின்னடைவு; சூராப் நகரத்தைக் கைப்பற்றியதாக பலுசிஸ்தான் விடுதலை ராணுவம் அறிவிப்பு பலுசிஸ்தான்

    காங்கிரஸ்

    இந்தியா கூட்டணி கட்சிகளின் நாடாளுமன்ற தலைவர்கள் கூட்டம் நாளை கூடுகிறது மல்லிகார்ஜுன் கார்கே
    தெலுங்கானா டிஜிபியை இடைநீக்கம் செய்து இந்திய தேர்தல் ஆணையம் உத்தரவு தெலுங்கானா
    பதவியை ராஜினாமா செய்தார் ராஜஸ்தான் முதல்வர்  அசோக் கெலாட் ராஜஸ்தான்
    மத்திய பிரதேசம், சத்தீஸ்கர் மற்றும் ராஜஸ்தானில் ஆட்சி அமைக்கும் பாஜக, தெலுங்கானாவில் வென்றது காங்கிரஸ் தேர்தல் முடிவு

    ராகுல் காந்தி

    'மணிப்பூர் வன்முறையை அரசியலாக்குவது வெட்கக்கேடானது; எதிர்க்கட்சிகள் விவாதத்திற்கு தயாராக இல்லை': அமித்ஷா மணிப்பூர்
    நம்பிக்கையில்லாத் தீர்மானத்திற்கு எதிராக மக்களவையில் நிர்மலா சீதாராமன் பேச்சு மத்திய அரசு
    நாளை உதகைக்கு வருகை தருகிறார் ராகுல் காந்தி கேரளா
    நீலகிரியில் பழங்குடியின மக்களுடன் நடனமாடிய ராகுல் காந்தி நீலகிரி
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025