NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / வயநாட்டில் நிலச்சரிவு; 70 பேர் பலி, நூற்றுக்கணக்கானோர் சிக்கியிருக்கலாம் என அஞ்சப்படுகிறது
    அடுத்த செய்திக் கட்டுரை
    வயநாட்டில் நிலச்சரிவு; 70 பேர் பலி, நூற்றுக்கணக்கானோர் சிக்கியிருக்கலாம் என அஞ்சப்படுகிறது
    நிலச்சரிவில் சிக்கியவர்களை மீட்கும் பணி தீவிரம்

    வயநாட்டில் நிலச்சரிவு; 70 பேர் பலி, நூற்றுக்கணக்கானோர் சிக்கியிருக்கலாம் என அஞ்சப்படுகிறது

    எழுதியவர் Venkatalakshmi V
    Jul 30, 2024
    07:57 am

    செய்தி முன்னோட்டம்

    கேரளாவின் வயநாடு மாவட்டத்தில் உள்ள மலைப்பாங்கான பகுதிகளில் ஏற்பட்ட மாபெரும் நிலச்சரிவில் நூற்றுக்கணக்கான மக்கள் சிக்கியிருக்கலாம் என அஞ்சப்படுகிறது.

    இச்சம்பவம் வயநாடு மேப்பாடி அருகே நடந்தது.

    செய்திகளின்படி, இன்று அதிகாலை 2 மணியளவில் அப்பகுதியில் முதல் நிலச்சரிவு ஏற்பட்டது.

    பின்னர், 4.10 மணியளவில், மீண்டும் நிலச்சரிவு ஏற்பட்டது.

    நிலச்சரிவில் சிக்கியவர்களை மீட்க தீயணைப்புப் படை மற்றும் தேசிய பேரிடர் மீட்புப் படையின் (NDRF) குழுக்கள் பாதிக்கப்பட்ட பகுதிக்கு அனுப்பப்பட்டுள்ளன.

    மேலும் NDRF குழுவும் வயநாடு நோக்கி சென்று கொண்டிருப்பதாக PTI செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

    மேலும், விமானப்படையின் இரண்டு ஹெலிகாப்டர்கள், ஒரு எம்ஐ-17 மற்றும் ஒரு ஏஎல்எச் ஆகியவை கோவை சூலூரில் இருந்து மீட்புப் பணிகளுக்காக புறப்படும் என்று ஏஎன்ஐ தெரிவித்துள்ளது.

    ட்விட்டர் அஞ்சல்

    வயநாட்டில் மாபெரும் நிலச்சரிவு

    #BREAKING || கேரளாவில் நிலச்சரிவு - மீட்பு பணிக்காக சூலூர் விமானப்படை தளத்தில் இருந்து 2 ஹெலிகாப்டர்கள் விரைவு#Kerala #Rain #Landslide pic.twitter.com/IV5g1ad1y2

    — Thanthi TV (@ThanthiTV) July 30, 2024

    மழை

    தொடர் மழையால் மீட்பு பணிகள் பாதிக்கப்பட்டுள்ளது 

    தற்போது வரை, இந்த நிலச்சரிவில் 70 பேர் உயிரிழந்துள்ளதாகவும், மேப்பாடியில் உள்ள மருத்துவமனையில் பலர் சிகிச்சை பெற்று வருவதாக கூறப்படுகிறது.

    கேரள மாநில பேரிடர் மேலாண்மை ஆணையத்தின் (கே.எஸ்.டி.எம்.ஏ) பேஸ்புக் பதிவின்படி, கண்ணூர் பாதுகாப்புப் படையின் இரண்டு குழுக்கள் மீட்புப் பணிகளில் உதவ வயநாட்டிற்குச் செல்ல அறிவுறுத்தப்பட்டது.

    எனினும் அப்பகுதியில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் மீட்புப் பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன.

    இதுகுறித்து கேரள முதல்வர் பினராயி விஜயன் வெளியிட்டுள்ள அறிக்கையில், வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவுகளில் அனைத்து மீட்புப் பணிகளும் ஒருங்கிணைக்கப்படும் எனத்தெரிவித்தார்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    கேரளா
    நிலச்சரிவு

    சமீபத்திய

    அமேசானுக்குச் சொந்தமான Zoox, அமெரிக்காவில் அதன் ரோபோடாக்சிகளை திரும்ப பெறுகிறது; ஏன்? அமெரிக்கா
    உலகளாவில் wearables பிரிவில் Xiaomi முதலிடத்தில் உள்ளது, ஆப்பிளை விட முன்னிலை சியோமி
    எலுமிச்சை சாறு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் என்பது உண்மையா? ஆரோக்கியம்
    டிரம்பின் வரி அச்சுறுத்தல்கள் இருந்தபோதிலும், இந்தியாவில் தயாரிக்கப்பட்ட ஐபோன்கள் அமெரிக்காவில் மலிவாக இருக்கும் அமெரிக்கா

    கேரளா

    சபரிமலை கூட்ட நெரிசல் விவகாரம் - கேரள உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு  சபரிமலை
    சபரிமலை ஐயப்பன் கோயில் பக்தர்களுக்கு இலவச வைஃபை சேவை துவக்கம்  சபரிமலை
    சபரிமலை பக்தர்களுக்கு ஆன்லைன் முன்பதிவு செய்ய கட்டுப்பாடு விதிப்பு  சபரிமலை
    'வைக்கம் போராட்டம் நூற்றாண்டு மலர்' - தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார்  மு.க ஸ்டாலின்

    நிலச்சரிவு

    ஹிமாச்சல் நிலச்சரிவு: 15-கிமீ டிராபிக் ஜாமால் சுற்றுலா பயணிகள் அவதி  ஹிமாச்சல பிரதேசம்
    உத்தரகாண்டில் கனமழை, நிலச்சரிவு, வெள்ள அபாய எச்சரிக்கை  உத்தரகாண்ட்
    மகாராஷ்டிரா நிலச்சரிவு: 26 பேர் உயிரிழப்பு, 86 பேரை காணவில்லை  மகாராஷ்டிரா
    மகாராஷ்டிரா நிலச்சரிவு: 78 பேர் கண்டுபிடிக்கப்படாத நிலையில் மீட்புப் பணிகள் நிறுத்தம் மகாராஷ்டிரா
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025