NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / ஜார்கண்ட் மாநிலத்தில் ரயில் தண்டவாளத்தை தகர்த்த மாவோயிஸ்டுகள்
    அடுத்த செய்திக் கட்டுரை
    ஜார்கண்ட் மாநிலத்தில் ரயில் தண்டவாளத்தை தகர்த்த மாவோயிஸ்டுகள்

    ஜார்கண்ட் மாநிலத்தில் ரயில் தண்டவாளத்தை தகர்த்த மாவோயிஸ்டுகள்

    எழுதியவர் Srinath r
    Dec 22, 2023
    01:40 pm

    செய்தி முன்னோட்டம்

    ஜார்க்கண்டின் மேற்கு சிங்பூம் மாவட்டத்தில், தடைசெய்யப்பட்ட சிபிஐ (மாவோயிஸ்ட்) உறுப்பினர்கள் ரயில் தண்டவாளத்தின் ஒரு பகுதியை குண்டு வைத்து தகர்த்ததால், ஹவுரா-மும்பை வழித்தடத்தில் பல மணி நேரம் ரயில் சேவைகள் பாதிக்கப்பட்டன.

    மாநிலத்தின் தலைநகர் ராஞ்சியில் இருந்து சுமார் 150 கி.மீ தொலைவிலுள்ள, மகாதேவ்சல் மற்றும் போசோய்டா ரயில் நிலையங்களுக்கிடையே, நேற்று நள்ளிரவில் இச்சம்பவம் நடைபெற்றதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

    மாவோயிஸ்டுகள் அப்பகுதியில் பதாகைகள் மற்றும் சுவரொட்டிகளை ஒட்டியதாக தெரிவித்த, மேற்கு சிங்பூம் காவல்துறை கண்காணிப்பாளர் அசுதோஷ் சேகர், அப்பகுதியில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளதாகவும் விவரித்தார்.

    2nd card

    வேலை நிறுத்தத்திற்கு அழைப்பு விடுத்த மாவோயிஸ்டுகள்

    ரயில் தண்டவாளத்தை சரி செய்யும் பணிகள் இன்று அதிகாலையில் தொடங்கப்பட்ட நிலையில், காலை 8:15 மணிக்கு ரயில் போக்குவரத்து தொடங்கப்பட்டதாக, தென்கிழக்கு ரயில்வேயின் சக்ரதர்பூர் கோட்ட உதவி வணிக மேலாளர் வினித் குமார் பிடிஐ இடம் தெரிவித்தார்.

    "மகாதேவ்சல் மற்றும் போசோய்டா ரயில் நிலையங்களுக்கு இடையே தண்டவாளம் தகர்க்கப்பட்டது குறித்து, நேற்று இரவு 11.47 தகவல் கிடைத்தது.

    அடையாளம் தெரியாத நபர்கள் குண்டு வைத்து தகர்த்ததால், இரண்டு முதல் மூன்று மீட்டர் நீளத்திற்கு தண்டவாளங்கள் பழுதடைந்தன" என குமார் கூறினார்.

    குறிப்பிடத்தக்க வகையில் சம்பவத்தில் ஈடுபட்ட அமைப்பு, டிசம்பர் 16 முதல் போராட்ட வாரத்தை அறிவித்திருந்த நிலையில், இன்று நாடு தழுவிய வேலை நிறுத்தத்திற்கு அழைப்பு விடுத்திருந்தது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    சிபிஐ
    மும்பை

    சமீபத்திய

    தவறுதலாக எல்லை தாண்டிச் சென்ற BSF வீரரை மீதும் இந்தியாவிடம் ஒப்படைத்தது பாகிஸ்தான் இந்திய ராணுவம்
    பதிலடி நடவடிக்கையாக, இந்திய தூதரை 'நம்பிக்கையில்லாதவர்' என்று பாகிஸ்தான் அறிவிப்பு; நாட்டை விட்டு வெளியேற 24 மணி நேரம் கெடு பாகிஸ்தான்
    மைக்ரோசாப்ட் அதன் இரண்டாவது பணிநீக்கச் சுற்றில் 6,000 ஊழியர்களை பணிநீக்கம் செய்துள்ளது மைக்ரோசாஃப்ட்
    உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாக பி.ஆர். கவாய் இன்று பதவியேற்கிறார் - பதவியேற்கும் முதல் பௌத்தர் உச்ச நீதிமன்றம்

    சிபிஐ

    ஒடிசா ரயில் விபத்து: விசாரணை விரைவில் சிபிஐக்கு மாறுகிறது இந்தியா
    செந்தில் பாலாஜி கைது எதிரொலி: CBI க்கு தமிழக அரசு வைத்த செக்  தமிழக அரசு
    மணிப்பூர் கலவரம் - வழக்கு விசாரணை சிபிஐ'க்கு மாற்றம்  கைது
    மணிப்பூர் வீடியோ வழக்கிற்கு FIR பதிவு செய்தது CBI மணிப்பூர்

    மும்பை

    ஜெய்ப்பூர்-மும்பை ரயிலில் ரயில்வே பாதுகாப்புப் படை கான்ஸ்டபிளால் 4 பேர் சுட்டுக் கொலை ரயில்கள்
    வைரல் வீடியோ: சேற்றில் NCC ட்ரில்; பிரம்பால் விளாசும் சீனியர் வைரல் செய்தி
    INDIA எதிர்க்கட்சி கூட்டணியின் மூன்றாவது கூட்டத்திற்கான தேதி அறிவிப்பு  எதிர்க்கட்சிகள்
    மும்பையில் இரண்டு நாட்களுக்கு வாகனங்களில் ஹாரன் அடிக்க தடை  இந்தியா
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025