NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / உத்தரகாண்டில் பயணிகள் பேருந்து பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து; 37 பேர் பலி
    அடுத்த செய்திக் கட்டுரை
    உத்தரகாண்டில் பயணிகள் பேருந்து பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து; 37 பேர் பலி
    பயணிகள் பேருந்து பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து

    உத்தரகாண்டில் பயணிகள் பேருந்து பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து; 37 பேர் பலி

    எழுதியவர் Venkatalakshmi V
    Nov 04, 2024
    12:08 pm

    செய்தி முன்னோட்டம்

    உத்தரகாண்டின் அல்மோரா எல்லையில், ராம்நகரில் குபி அருகே 46 பயணிகளை ஏற்றி சென்ற பேருந்து பள்ளத்தில் கவிழ்ந்ததில் 37 பேர் உயிரிழந்தனர்.

    மீட்பு பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகின்றன. சம்பவ இடத்திற்கு விரைந்த மீட்பு படையினர், உயிரிழந்த 15 பேரின் உடல்களை நீண்ட போராட்டத்திற்குப் பிறகு மீட்டு, பிரேத பரிசோதனைக்கு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    மேலும், பலர் பலத்த காயமுற்றுள்ளனர் மற்றும் அவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    பஸ் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்ததே விபத்திற்கான காரணமாக கண்டறியப்பட்டுள்ளது. இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இந்த விபத்தின் வீடியோ காட்சிகள் சமூக ஊடகங்களில் பரவலாக பகிரப்படுகிறது. இது காண்போரை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.

    ட்விட்டர் அஞ்சல்

    Twitter Post

    Many feared dead after bus falls into gorge in #Uttarakhand

    The accident occurred near Kupi in Ramnagar at Pauri-Almora border when a Garwal Motors Users' 42-seater bus fell into a gorge.

    Details here 🔗https://t.co/VzejE1WJtF pic.twitter.com/SoCAs6CIiy

    — The Times Of India (@timesofindia) November 4, 2024

    நிவாரணம்

    விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் அறிவித்த முதல்வர் 

    உத்தரகாண்ட் முதல்வர் புஷ்கர் சிங் தாமி, பவுரி மற்றும் அல்மோரா மாவட்டங்களில் உதவி பிராந்திய போக்குவரத்து (ARTO) அதிகாரிகளை சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டுள்ளார்.

    உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ₹4 லட்சமும், காயமடைந்தவர்களுக்கு தலா ₹1 லட்சமும் நிதியுதவி வழங்க முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.

    "அல்மோரா மாவட்டத்தின் மார்ச்சுலாவில் நடந்த துரதிர்ஷ்டவசமான பேருந்து விபத்தில் பயணிகளின் உயிரிழப்புகள் பற்றிய மிகவும் வருத்தமான செய்தி கிடைத்தது. நிவாரணம் மற்றும் மீட்பு நடவடிக்கைகளை விரைவாக மேற்கொள்ள மாவட்ட நிர்வாகத்திற்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது," என்று அவர் X இல் கூறினார்.

    மேலும், சம்பவம் குறித்து மாஜிஸ்திரேட் விசாரணை நடத்த குமாவோன் மண்டல் ஆணையருக்கு தாமி உத்தரவிட்டுள்ளார்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    உத்தரகாண்ட்
    விபத்து

    சமீபத்திய

    பாகிஸ்தானுடன் கிரிக்கெட் கிடையாது; ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியிலிருந்து விலக பிசிசிஐ முடிவு பிசிசிஐ
    மே 8 அன்று பொற்கோவிலுக்கு குறிவைத்த பாகிஸ்தானின் தாக்குதலை முறியடித்த இந்தியாவின் வான் பாதுகாப்பு அமைப்பு பொற்கோயில்
    மோசமான பணியிட சூழல்; பெங்களூர் பொறியாளர் மரணத்தின் பின்னணியில் பகீர் குற்றச்சாட்டு பெங்களூர்
    மூன்று வெவ்வேறு ஐபிஎல் அணிகளை பிளேஆஃப்க்கு அழைத்துச் சென்று ஷ்ரேயாஸ் ஐயர் சாதனை ஐபிஎல் 2025

    உத்தரகாண்ட்

    உத்தரகாண்ட் சுரங்கபாதையில் சிக்கியுள்ள 41 பேரை மீட்க இன்னும் 4-5 நாட்கள் ஆகும் என்று தகவல் மத்திய அரசு
    உத்தரகாண்ட் சுரங்கப்பாதையில் சிக்கி இருக்கும் 41 பேரை மீட்க 5 அடக்கு திட்டம் அறிமுகம்  விபத்து
    உத்தரகாண்ட் சுரங்கப்பாதையில் சிக்கிய தொழிலாளர்களின் முதல் வீடியோ காட்சிகள் வெளியானது விபத்து
    ஒரு வாரத்திற்கு மேலாக, சுரங்கத்திற்குள் சிக்கியுள்ள தொழிலாளர்கள் எப்படி சமாளிக்கிறார்கள்? விபத்து

    விபத்து

    புனே போர்ஷே விபத்து: காரை ஓட்டிய சிறுவனின் தாத்தா கைது மகாராஷ்டிரா
    கேரளா: கூகுள் மேப்ஸைப் பார்த்து கொண்டே ஓடையில் காரை இறக்கிய சுற்றுலா பயணிகள் மீட்பு  கேரளா
    புனே போர்ஷே விபத்து: காரை ஓட்டிய சிறுவனின் ரத்த மாதிரியில் முறைகேடு செய்ததாக 2 மருத்துவர்கள் கைது மகாராஷ்டிரா
    புனே விபத்து: ரத்த மாதிரிகளை மாற்ற டாக்டருக்கு ரூ.3 லட்சம் லஞ்சம் காவல்துறை
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025