NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / ஹரியானா முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார் மனோகர் லால் கட்டார் 
    அடுத்த செய்திக் கட்டுரை
    ஹரியானா முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார் மனோகர் லால் கட்டார் 

    ஹரியானா முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார் மனோகர் லால் கட்டார் 

    எழுதியவர் Sindhuja SM
    Mar 12, 2024
    12:06 pm

    செய்தி முன்னோட்டம்

    ஹரியானாவில் ஆளும் பாஜக-ஜனநாயக்க ஜனதா கட்சி(ஜேஜேபி) கூட்டணியில் விரிசல் ஏற்பட்டதைத் தொடர்ந்து, மனோகர் லால் கட்டார் இன்று தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார்.

    மக்களவை தேர்தல் நடைபெற இன்னும் சில வாரங்களே இருக்கும் நிலையில், ஹரியானா அரசியலில் இந்த பெரும் மாற்றம் நிகழ்ந்துளளது.

    எம்எல் கட்டார் தனது அமைச்சரவையையும் ராஜினாமா கடிதத்தையும் ஹரியானா ஆளுநரிடம் ஒப்படைத்தார் என்று ஹரியானா அரசின் செய்தித் தொடர்பாளர் கூறியுள்ளார்.

    மக்களவைத் தேர்தலுக்கான சீட் பகிர்வு உடன்பாட்டை எட்டத் தவறியதனால், பாஜக மற்றும் ஜேஜேபி இடையேயான உறவுகள் மோசமடைந்தன.

    அந்த மாநிலத்தின் தற்போதைய துணை முதல்வர் துஷ்யந்த் சவுதாலா தான் ஜேஜேபி கட்சிக்கு தலைமை தாங்கி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

    இந்தியா 

    அடுத்து ஆட்சி அமைக்க பேச்சு வார்த்தை தொடங்கியது

    தற்போது, 41 பாஜக எம்எல்ஏக்களும், அது போக சுயேட்சை எம்எல்ஏக்களும் தங்களுக்கு ஆதரவாக உள்ளனர் என்று பாஜக கூறியுள்ளது.

    ஹரியானா மாநில சட்டசபையில் 45 இடங்கள் இருந்தால் ஒரு கட்சி பெருமபான்மையுடன் ஆட்சி அமைக்க முடியும்.

    எனவே, மாநில பாஜக தலைவர் நைப் சிங் சைனி, எம்.எல் கட்டாருக்குப் பதிலாக முதல்வராக பதவியேற்பார் என்று பேசப்படுகிறது.

    பாஜக மற்றும் ஜேஜேபி ஆகிய இரு கட்சிகளின் உயர்மட்டத் தலைவர்களும் அந்தந்த கட்சி எம்எல்ஏக்களை தனித்தனியாகக் அழைத்து பேச்சுவார்த்தை நடத்த உள்ளனர்.

    மத்திய அமைச்சர் அர்ஜுன் முண்டா, திரிபுரா முன்னாள் முதல்வர் பிப்லப் குமார் தேப் உள்ளிட்ட மத்திய பாஜக தலைவர்கள் இந்த பேச்சுவார்த்தைகளை மேற்பார்வையிட உள்ளனர்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    ஹரியானா

    சமீபத்திய

    சசிகுமார்- சிம்ரனின் டூரிஸ்ட் பேமிலி OTT வெளியீட்டு விவரங்கள் இதோ! ஜியோஹாட்ஸ்டார்
    IPL 2025: ஒரு அணியின் வெற்றியால் ப்ளே ஆஃப்க்கு தகுதி பெற்ற 3 அணிகள் ஐபிஎல் 2025
    ஐபிஎல்லில் தனது 5வது சதத்தை கே.எல். ராகுல் அடித்தார்: முக்கிய புள்ளிவிவரங்கள் கே.எல்.ராகுல்
    ஹைதராபாத்தில் குண்டுவெடிப்பு சதியா? ஐ.எஸ்.ஐ.எஸ். தொடர்புடைய 2 சந்தேக நபர்கள் கைது  ஹைதராபாத்

    ஹரியானா

    திருவண்ணாமலையில் 4 ஏடிஎம் இயந்திரங்களில் கொள்ளை - தனிப்படைகள் அமைத்து காவல்துறை தேடல் திருவண்ணாமலை
    OYO நிறுவனரின் தந்தை 20வது மாடியில் இருந்து விழுந்து உயிரிழந்தார் இந்தியா
    கொலை வழக்கிற்கு சாட்ஜிபிடியின் உதவியை நாடிய நீதிமன்றம்! நடந்தது என்ன? சாட்ஜிபிடி
    லண்டன் கல்லூரியில் இந்தியாவுக்கு எதிரான பிரச்சாரம் நடந்ததாக இந்திய மாணவர் குற்றம் சாட்டு லண்டன்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025