Page Loader
இந்திய பொருட்களை வாங்குங்கள்; மன் கி பாத் உரையில் பிரதமர் மோடி வலியுறுத்தல்
பிரதமர் மோடி

இந்திய பொருட்களை வாங்குங்கள்; மன் கி பாத் உரையில் பிரதமர் மோடி வலியுறுத்தல்

எழுதியவர் Sekar Chinnappan
Sep 29, 2024
01:38 pm

செய்தி முன்னோட்டம்

பிரதமர் நரேந்திர மோடி ஞாயிற்றுக்கிழமை (செப்டம்பர் 29) தனது வானொலி நிகழ்ச்சியான மன் கி பாத்தில் உரையாற்றினார். இது மன் கி பாத் நிகழ்ச்சியின் 114வது அத்தியாயமாகும். இதன் மூலம் பிரதமர் மோடியின் பிரபலமான மன் கி பாத் நிகழ்ச்சி 10 ஆண்டுகள் நிறைவடைந்தது. மோடி தனது உரையில் நீர் பாதுகாப்பில் பெண் விவசாயிகளின் பங்களிப்புக்காக பாராட்டினார். ஒவ்வொரு மாதமும் இந்த திட்டத்திற்காக கடிதங்கள் மற்றும் ஆலோசனைகளை அனுப்பும் எண்ணற்ற மக்களுக்கு பிரதமர் தனது நன்றியை தெரிவித்தார். கடந்த சில வாரங்களாக நாட்டின் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது என்று கூறிய பிரதமர் மோடி, இந்த மழைக்காலம் நீர் பாதுகாப்பு எவ்வளவு முக்கியம் என்பதை நமக்கு நினைவூட்டுகிறது என்றார்.

கிரியேட் இன் இந்தியா

படைப்பாற்றலை வளர்க்கும் கிரியேட் இன் இந்தியா

திறமை மற்றும் படைப்பாற்றலை வளர்ப்பதற்காக தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகத்தின் தனித்துவமான முயற்சியான 'கிரியேட் இன் இந்தியா' திட்டத்தையும் பிரதமர் பாராட்டினார். மரக்கன்றுகளை நடுமாறு அழைப்பு விடுத்த பிரதமர் மோடி, "சில மொழிகள் சிலரால் மட்டுமே பயன்படுத்தப்படுகின்றன. அப்படிப்பட்ட ஒரு மொழி நமது சாந்தலி மொழியாகும். டிஜிட்டல் கண்டுபிடிப்புகளின் உதவியுடன் சாந்தலிக்கு புதிய அடையாளத்தை வழங்குவதற்கான பிரச்சாரம் தொடங்கப்பட்டுள்ளது." என்று மேலும் கூறினார். பழங்கால தொல்பொருட்களை அமெரிக்கா திருப்பி அனுப்பியதை நினைவு கூர்ந்த பிரதமர் மோடி, நமது விலைமதிப்பற்ற பாரம்பரியத்தைப் பற்றி நாம் பெருமைப்பட வேண்டும் என்றார். தனது நிகழ்ச்சியை முடிக்கும்போது, ​​வரவிருக்கும் பண்டிகைகளுக்கு அனைவருக்கும் வாழ்த்து தெரிவித்த பிரதமர் மோடி, விழாக்களின்போது மேட் இன் இந்தியா பொருட்களை வாங்குமாறு வலியுறுத்தினார்.