NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / ரஷ்யா-உக்ரைன் மோதலில் இந்தியாவின் நிலைப்பாட்டுக்கு முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் பாராட்டு
    அடுத்த செய்திக் கட்டுரை
    ரஷ்யா-உக்ரைன் மோதலில் இந்தியாவின் நிலைப்பாட்டுக்கு முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் பாராட்டு
    ரஷ்யா-உக்ரைன் மோதலில் இந்தியாவின் நிலைப்பாட்டுக்கு முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் பாராட்டு

    ரஷ்யா-உக்ரைன் மோதலில் இந்தியாவின் நிலைப்பாட்டுக்கு முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் பாராட்டு

    எழுதியவர் Sekar Chinnappan
    Sep 08, 2023
    04:52 pm

    செய்தி முன்னோட்டம்

    முன்னாள் பிரதமரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான மன்மோகன் சிங், ரஷ்யா-உக்ரைன் மோதலில் மத்திய அரசின் நிலைப்பாட்டைப் பாராட்டியுள்ளார்.

    இந்த விவகாரம் உலக நாடுகளிடையே ராஜதந்திர ரீதியாக மிகவும் சிக்கலை ஏற்படுத்தி இருந்தாலும், இந்தியாவின் இறையாண்மை மற்றும் பொருளாதார நலனை முதன்மைப்படுத்தி மத்திய அரசு சரியாக செயல்பட்டதாக தெரிவித்துள்ளார்.

    இது தொடர்பாக அவர் அளித்த பேட்டியில், இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட சக்திகள் மோதலில் சிக்கும்போது மற்ற நாடுகள் எந்த பக்கம் செல்வது என்பதில் பெரும் அழுத்தத்திற்கு உள்ளாகின்றன என்றார்.

    மேலும், வெளியுறவுக் கொள்கைகள் முன்பை விட இன்று மிக முக்கியமானதாகிவிட்ட நேரத்தில், ஜி20 உச்சிமாநாட்டில் இந்தியாவின் தலைமைப் பதவியைக் காண்பதில் மகிழ்ச்சி அடைவதாக தெரிவித்துள்ளார்.

    manmohan speaks about indo-china relationship

    சீன உறவு குறித்து பேசிய முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்

    ஜி20 உச்சி மாநாட்டை புறக்கணிக்கும் சீன அதிபர் ஜி ஜின்பிங்கின் முடிவு குறித்து பேசிய மன்மோகன் சிங், ஜி20 மாநாட்டில் கலந்து கொள்ளாமல் இருக்க சீன அதிபர் ஜி ஜின்பிங் முடிவு செய்திருப்பது துரதிர்ஷ்டவசமானது என்று கூறினார்.

    அதே நேரம், இந்தியாவின் பிராந்திய மற்றும் இறையாண்மை ஒருமைப்பாட்டைப் பாதுகாக்கவும், சீனாவுடனான இருதரப்பு பதட்டத்தைத் தணிக்கவும் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் பிரதமர் எடுப்பார் என்று நம்புவதாகவும் கூறினார்.

    சுதந்திரத்தின் 75 ஆண்டுகளைக் கொண்டாடும் வேளையில், நாட்டிற்கு முன்னால் உள்ள சவால்கள் குறித்து பேசிய அவர், இந்தியாவின் எதிர்காலத்தைப் பற்றி கவலைப்படுவதை விட நம்பிக்கையுடன் இருப்பதாகக் கூறினார்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    இந்தியா
    மத்திய அரசு
    ஜி20 மாநாடு

    சமீபத்திய

    இப்போது, பாஸ்போர்ட் விண்ணப்பத்தில் உங்கள் வாழ்க்கை துணை பெயர் சேர்ப்பது/ நீக்குவது எளிதாகிறது பாஸ்போர்ட்
    இன்று முதல், எஃகு, அலுமினியம் மீதான இறக்குமதி வரிகளை 50% ஆக உயர்த்தும் அமெரிக்கா அமெரிக்கா
    இ சாலா கப் நம்தே! முதல்முறையாக IPL கோப்பையை வென்றது RCB ஐபிஎல் 2025
    லோகேஷ் கனகராஜின் LCUவில் இணையும் நிவின் பாலி லோகேஷ் கனகராஜ்

    இந்தியா

    இன்றைய தங்கம் வெள்ளி விலை நிலவரம்: செப்டம்பர் 4 தங்கம் வெள்ளி விலை
    ஜி20 உச்சி மாநாட்டில் காட்சிப்படுத்தப்பட இருக்கும் 29 நாடுகளின் பாரம்பரியச் சின்னங்கள் ஜி20 மாநாடு
    INDvsNEP: டாஸை வென்று பந்து வீச்சைத் தேர்வு செய்திருக்கும் இந்தியா ஆசிய கோப்பை
    இந்தியாவில் மேலும் 46 பேருக்கு கொரோனா பாதிப்பு கொரோனா

    மத்திய அரசு

    சிறு குற்றங்களுக்கு தண்டனையாக சமூக சேவை; நாடாளுமன்றத்தில் மசோதா தாக்கல் நாடாளுமன்றம்
    சட்டமாகியது டெல்லி அவசர சட்ட மசோதா: ஒப்புதல் அளித்தார் குடியரசு தலைவர் டெல்லி
    நைஜரில் வசிக்கும் இந்தியர்களை உடனடியாக வெளியேற மத்திய அரசு அறிவுறுத்தல் ஆப்பிரிக்கா
    கச்சா எண்ணெய் மீதான விண்டுஃபால் வரியை மீண்டும் உயர்த்தியது மத்திய அரசு வருமான வரி விதிகள்

    ஜி20 மாநாடு

    தலைமை செயலாளர் தலைமையில் ஜி20 மாநாடு முன்னேற்பாடுகள் குறித்த ஒருங்கிணைப்பு கூட்டம்  சென்னை
    ஜி20 மாநாட்டில் பங்கேற்க தமிழக முதல்வர் ஸ்டாலினுக்கு அழைப்பு தமிழக அரசு
    இந்தியாவில் ஜி 20 மாநாடு - வரும் 26ம் தேதி புதிய கட்டிடம் திறப்பு  டெல்லி
    ஜி20 மாநாடு நடைபெற இருக்கும் கட்டிடத்தை இன்று திறந்து வைக்கிறார் பிரதமர் மோடி  டெல்லி
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025