NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / மணிப்பூர் கலவரம்: மத்திய அமைச்சரின் வீட்டிற்கு தீ வைத்த கும்பல்
    அடுத்த செய்திக் கட்டுரை
    மணிப்பூர் கலவரம்: மத்திய அமைச்சரின் வீட்டிற்கு தீ வைத்த கும்பல்
    கூட்டத்தைக் கலைக்க, கிழக்கு இம்பால் போலீஸார் கண்ணீர்ப்புகைக் குண்டுகளை வீசினர்.

    மணிப்பூர் கலவரம்: மத்திய அமைச்சரின் வீட்டிற்கு தீ வைத்த கும்பல்

    எழுதியவர் Sindhuja SM
    Jun 16, 2023
    09:42 am

    செய்தி முன்னோட்டம்

    மணிப்பூரின் இம்பாலில் இருக்கும் மத்திய வெளியுறவுத்துறை இணை அமைச்சர் ஆர்.கே.ரஞ்சன் சிங்கின் இல்லத்திற்கு ஒரு கும்பல் தீ வைத்தது.

    நேற்று இம்பாலில் உள்ள அமைச்சர் நேம்சா கிப்கெனின் வீடு தீக்கிரையாக்கப்பட்ட நிலையில், தற்போது இணை அமைச்சர் ஆர்.கே.ரஞ்சன் சிங்கின் வீட்டிற்கும் தீ வைக்கப்பட்டிருக்கிறது.

    இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய இணை அமைச்சர் ராஜ்குமார் ரஞ்சன் சிங், "நான் தற்போது அதிகாரப்பூர்வ வேலைக்காக கேரளா வந்துள்ளேன். அதிர்ஷ்டவசமாக, நேற்றிரவு எனது இம்பால் வீட்டில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. பெட்ரோல் குண்டுகளுடன் வந்த மர்ம நபர்கள் எனது வீட்டின் தரை தளத்தையும் முதல் தளத்தையும் சேதப்படுத்தினர்." என்று கூறியுள்ளார்.

    கிட்ஸ் 

    சம்பவத்தின் போது அமைச்சரும் அவரது குடும்பத்தினரும் வீட்டில் இல்லை

    நேற்று இரவு 11 மணியளவில், அமைச்சர் ரஞ்சன் சிங்கின் வீட்டிற்குள் அனுமதியின்றி நுழைந்த ஒரு கூட்டம் அவரது சொத்துக்களுக்கு தீ வைக்க முயன்றது.

    அமைச்சரின் வீட்டை காவல் காத்து கொண்டிருந்த காவலர்களின் எண்ணிக்கை குறைவாக இருந்ததால் அந்த கும்பல் நுழைவதை அவர்களால் தடுக்க முடியவில்லை.

    ஆர்.கே.ரஞ்சன் சிங்கின் இல்லம் அருகே கூடியிருந்த கூட்டத்தைக் கலைக்க, கிழக்கு இம்பால் போலீஸார் கண்ணீர்ப்புகைக் குண்டுகளை வீசினர்.

    சம்பவத்தின் போது அமைச்சரும் அவரது குடும்பத்தினரும் வீட்டில் இல்லை.

    "எனது சொந்த மாநிலத்தில் என்ன நடக்கிறது என்பதைப் பார்க்க மிகவும் வருத்தமாக இருக்கிறது. நான் இனியும் தொடர்ந்து அமைதிக்காக வேண்டுகோள் விடுப்பேன். இதுபோன்ற வன்முறையில் ஈடுபடுபவர்கள் முற்றிலும் மனிதாபிமானமற்றவர்கள்" என்று ஆர்.கே. சிங் மேலும் கூறியுள்ளார்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    இந்தியா
    மணிப்பூர்
    வெளியுறவுத்துறை
    கலவரம்

    சமீபத்திய

    பாகிஸ்தானுக்கு பின்னடைவு; சூராப் நகரத்தைக் கைப்பற்றியதாக பலுசிஸ்தான் விடுதலை ராணுவம் அறிவிப்பு பலுசிஸ்தான்
    ஜூன் 1, 2025 முதல் இந்த ஸ்மார்ட்போன்களில் எல்லாம் வாட்ஸ்அப் ஆப் செயல்படாது; எந்தெந்த போன் தெரியுமா? வாட்ஸ்அப்
    திமுக பொதுக்குழு கூட்டத்திற்கு முன்னதாக மதுரையில் முதல்வர் ஸ்டாலினுக்கு பேரணி மூலம் பிரமாண்ட வரவேற்பு மு.க.ஸ்டாலின்
    பாடுவதற்கு விதிக்கப்பட்ட தடைக்கு எதிரான சட்டப் போராட்டம் தொடரும் என பின்னணிப் பாடகி சின்மயி உறுதி சின்மயி

    இந்தியா

    கடைசி இந்தியப் பத்திரிகையாளரையும் வெளியேற்றுகிறது சீனா சீனா
    இந்தி மொழியினை திணிப்பதிலேயே மத்திய அரசு தீவிரம் காட்டிவருகிறது - முதல்வர் குற்றச்சாட்டு  மு.க ஸ்டாலின்
    பிரதமர் மோடியின் அரசு முறை பயணம் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது: அமெரிக்கா அமெரிக்கா
    CoWIN தளத்தில் தகவல் கசிவு ஏற்பட்டது எப்படி? மத்திய அரசு

    மணிப்பூர்

    மணிப்பூர் வன்முறை: நிலைமையை கட்டுக்குள் கொண்டுவர அமித்ஷா நடவடிக்கை  இந்தியா
    மணிப்பூர் வன்முறை: இறந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.10 லட்சம் இழப்பீடு இந்தியா
    மணிப்பூர் வன்முறையை விசாரிக்க குழு அமைக்கப்படும்: அமித்ஷா  இந்தியா
    மணிப்பூர் வன்முறை: 140 ஆயுதங்கள் மாநில நிர்வாகத்திடம் ஒப்படைக்கப்பட்டது  மத்திய அரசு

    வெளியுறவுத்துறை

    நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட துருக்கிக்கு உதவி செய்ய தயார்: பிரதமர் மோடி இந்தியா
    பெண்களுக்காக 50 மில்லியன் டாலர் நிதி வழங்குகிறார் ஹிலாரி கிளின்டன் இந்தியா
    துருக்கி நிலநடுக்கம்: ஒரு இந்தியரை காணவில்லை; 10 பேர் துருக்கியில் சிக்கி உள்ளனர் துருக்கி
    லிபியாவில் ஏஜென்டுகளால் அடிமைகளாக விற்கப்பட்டோம்: பஞ்சாப் இளைஞர்கள் இந்தியா

    கலவரம்

    2002 குஜராத் கலவரம்: 17 முஸ்லிம்களைக் கொன்றதாக குற்றம் சாட்டப்பட்ட 22 பேர் விடுதலை குஜராத்
    கிருஷ்ணகிரி எருதுவிடும் விழா கலவரம்-வாலிபரை பூட்ஸ் காலால் எட்டி உதைத்த எஸ்.பி. விளக்கம் காவல்துறை
    மணிப்பூர் வன்முறை: இதுவரை 62 பேர் பலி, 230 பேர் காயம்  இந்தியா
    கள்ளக்குறிச்சி மாணவி ஸ்ரீமதி மரணம் - சிபிசிஐடி குற்றப்பத்திரிக்கை தாக்கல்  தமிழ்நாடு
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025