NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / மணிப்பூர்: மூன்று நாட்களுக்குப் பிறகு ஐந்து மாவட்டங்களில் நிபந்தனையுடன் நீக்கப்பட்ட இணையத்தடை
    அடுத்த செய்திக் கட்டுரை
    மணிப்பூர்: மூன்று நாட்களுக்குப் பிறகு ஐந்து மாவட்டங்களில் நிபந்தனையுடன் நீக்கப்பட்ட இணையத்தடை
    மூன்று நாட்களுக்குப் பிறகு ஐந்து மாவட்டங்களில் நிபந்தனையுடன் நீக்கப்பட்ட இணையத்தடை

    மணிப்பூர்: மூன்று நாட்களுக்குப் பிறகு ஐந்து மாவட்டங்களில் நிபந்தனையுடன் நீக்கப்பட்ட இணையத்தடை

    எழுதியவர் Venkatalakshmi V
    Sep 13, 2024
    05:07 pm

    செய்தி முன்னோட்டம்

    மணிப்பூர் அரசு ஐந்து பள்ளத்தாக்கு மாவட்டங்களில் பிராட்பேண்ட் இணைய சேவைகளுக்கான தடையை நிபந்தனை அடிப்படையில் நீக்கியது.

    இருப்பினும், மொபைல் இணைய சேவைகளின் இடைநிறுத்தம் அப்படியே இருக்கும் என்று அதிகாரிகள் வெள்ளிக்கிழமை தெரிவித்தனர்.

    தீவிரவாதிகளின் தாக்குதல்களை கையாள தவறியதால், மாநிலத்தின் டிஜிபி மற்றும் பாதுகாப்பு ஆலோசகர் ஆகியோரை பதவி நீக்கம் செய்யக்கோரி மாணவர்கள் போராட்டம் நடத்தியதை தொடர்ந்து செப்டம்பர் 10ம் தேதி 5 நாட்கள் இணையம் மற்றும் மொபைல் சேவைகளுக்கு இடைக்கால தடை விதிக்கப்பட்டது.

    அறிக்கை

    ஹாட்ஸ்பாட் பயன்படுத்த தடை

    மணிப்பூரில் கமிஷனர் (உள்துறை) என். அசோக் குமார் வெளியிட்டுள்ள அறிவிப்பில்,"விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளை நிறைவேற்றுவதற்கு உட்பட்டு, தாராளமயமாக்கப்பட்ட முறையில், பிராட்பேண்ட் சேவை (ஐஎல்எல் மற்றும் எஃப்டிடிஹெச்) இடைகால தடையை நீக்குவது குறித்து மாநில அரசு பரிசீலித்து முடிவை எடுத்துள்ளது."

    "நிலையான ஐபி மூலம் இணைப்பு இருக்கும் மற்றும் சம்பந்தப்பட்ட சந்தாதாரர் தற்போதைக்கு அனுமதிக்கப்பட்டதைத் தவிர வேறு எந்த இணைப்பையும் ஏற்க மாட்டார்."

    கூடுதலாக, "எந்த ரூட்டரிலிருந்தும் வைஃபை/ஹாட்ஸ்பாட்கள் அனுமதிக்கப்படாது" என்றும், உள்ளூர் அளவில் சமூக ஊடகங்கள் மற்றும் VPNகளைத் தடுப்பது சந்தாதாரரால் செயல்படுத்தப்படும் என்றும் அது கூறியது.

    தடை

    மொபைல் பயன்பாட்டிற்கு தடை

    எவ்வாறாயினும், சமூக ஊடகங்கள் மூலம் தவறான தகவல் மற்றும் வதந்திகள் பரவுவது பற்றிய கவலைகள் காரணமாக, போராட்டக்காரர்கள் மற்றும் ஆர்ப்பாட்டக்காரர்களை அணிதிரட்டலாம் என்பதாலும், இதனால் உயிரிழப்பு மற்றும் பொது மற்றும் தனியார் சொத்துக்களுக்கு சேதம் ஏற்படக்கூடும் என்பதாலும், மொபைல் இணையத் தரவை இடைநிறுத்துவதைத் தொடர மாநில அரசு முடிவு செய்தது.

    மணிப்பூர் போராட்டத்தின் விளைவாக மாணவர்களுக்கும், பாதுகாப்பு படையினருடன் மோதல் ஏற்பட்டது.

    இதில் மாணவர்கள் மற்றும் போலீசார் உட்பட 80 க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

    இதற்கிடையில், பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டபோது, ​​​​சுராசந்த்பூர் மாவட்டத்தில் அடர்ந்த வனப்பகுதியான ஷேஜாங் பகுதியில் 7.5 அடி நாட்டில் தயாரிக்கப்பட்ட ராக்கெட்டை பாதுகாப்புப் படையினர் மீட்டதாக மணிப்பூர் போலீசார் தெரிவித்தனர்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    மணிப்பூர்

    சமீபத்திய

    உங்கள் ஏரியாவில் நாளை (மே 17) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள் மின்தடை
    தலை முடியை விரித்து போட்டு ஆடினால் தான் மரியாதையாம்! ஐக்கிய அரபு எமிரேட்ஸில் டிரம்பை வரவேற்க பெண்கள் Al-Ayyala நடனம்! ஐக்கிய அரபு எமிரேட்ஸ்
    ஆபரேஷன் சிந்தூருக்குப் பிறகு மத்திய பாதுகாப்பு பட்ஜெட் அதிகரிப்பு: ரூ.50,000 கோடி ஒதுக்கியதாக தகவல் மத்திய அரசு
    இந்தியா-பாகிஸ்தான் இடையேயான போர் நிறுத்தம் மே 18 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது இந்தியா

    மணிப்பூர்

    'மணிப்பூர் வன்முறையை அரசியலாக்குவது வெட்கக்கேடானது; எதிர்க்கட்சிகள் விவாதத்திற்கு தயாராக இல்லை': அமித்ஷா அமித்ஷா
    நம்பிக்கையில்லா தீர்மானம் மீது பிரதமர் மோடி இன்று விவாதம் பிரதமர் மோடி
    மணிப்பூரில் வெளிச்சத்திற்கு வந்த மற்றொரு கூட்டு பாலியல் பலாத்கார சம்பவம்  இந்தியா
    மோடி அரசிற்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் தோற்கடிக்கப்பட்டது மோடி
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025