NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil

    இந்தியா உலகம் வணிகம் விளையாட்டு தொழில்நுட்பம் பொழுதுபோக்கு ஆட்டோ வாழ்க்கை காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
     
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / குடும்ப தகராறில் மனைவியை கொன்று மாந்தோப்பில் புதைத்த கணவன் 
    குடும்ப தகராறில் மனைவியை கொன்று மாந்தோப்பில் புதைத்த கணவன் 
    இந்தியா

    குடும்ப தகராறில் மனைவியை கொன்று மாந்தோப்பில் புதைத்த கணவன் 

    எழுதியவர் Nivetha P
    April 28, 2023 | 06:02 pm 1 நிமிட வாசிப்பு
    குடும்ப தகராறில் மனைவியை கொன்று மாந்தோப்பில் புதைத்த கணவன் 
    குடும்ப தகராறில் மனைவியை கொன்று மாந்தோப்பில் புதைத்த கணவன்

    தமிழ்நாடு, திருவள்ளூர் மாவட்டம் மாதர்பாகத்தினை அடுத்த கரடிப்புத்தூர் என்னும் பகுதியில் கேசவன் என்பவர் மாந்தோப்பு ஒன்றினை குத்தகைக்கு எடுத்து நடத்திவருகிறார். இந்த தோப்பில் கடந்த மார்ச் மாதம் காவலாளியாக சேர்த்துள்ளார் தர்மய்யா(24). இவர் தமது மனைவி(22) மற்றும் 3 வயது மகனுடன் மாந்தோப்பில் தங்கி பணிபுரிந்து வந்துள்ளார். இவர் ஆந்திரா மாநில திருப்பதியில் புட்டிரெட்டி கண்டிகையை சேர்ந்த பழங்குடியினத்தினை சேர்ந்தவர். இந்நிலையில் கேசவன் கடந்த 23ம்தேதியன்று மாந்தோப்பிற்கு வந்தப்பொழுது கணவன் மனைவிக்குள் சண்டை நடந்து கொண்டுள்ளது. பின்னர் அவர் தண்ணீர் பாய்ச்சிவிட்டு திரும்புகையில் தர்மய்யாவிடம் கேட்டப்பொழுது தனது மனைவி அருகிலுள்ள மாந்தோப்பில் வேலைபார்க்கும் உறவினரை காண தன் மனைவி சென்றதாக கூறியுள்ளார். பின்னர் கேசவனிடம் தர்மய்யா இருசக்கரவாகனத்தினை வாங்கிகொண்டு தமது குழந்தையுடன் சென்றுள்ளார்.

    கொலை செய்த காவலாளி மீது 2 பிரிவுகளில் வழக்குப்பதிவு 

    ஆனால் அவர் மறுநாள் வேலைக்கு வராததால், குத்தகைதாரர் கேசவன் பக்கத்து மாந்தோப்பில் பணிபுரியும் தர்மய்யாவின் உறவினரை அழைத்துக்கொண்டு ஆந்திரா சென்று விசாரித்துள்ளார். அப்போது அங்கு தர்மய்யா தனது குழந்தையை மட்டுமே அழைத்துவந்ததாகவும், தற்போது அவர் எங்குச்சென்றார் என தெரியாது என்றும் கூறியுள்ளனர். தர்மய்யா குடித்துவிட்டு தனது மனைவியினை மாந்தோப்பில் புதைத்துவிட்டேன் என்று கூறியதாக கேசவனுக்கு தகவல் வந்துள்ளது. அதனைக்கேட்டு அதிர்ச்சியடைந்த அவர் மாந்தோப்பினை சுற்றிப்பார்த்துள்ளார். அப்போது சம்பந்தமில்லாமல் மண் குவியலின்மேல் ஈ-க்கள் மொய்த்துக்கொண்டிருந்துள்ளது. இதனையடுத்து அவரளித்த தகவலின்பேரில், பாதிரிவேடு போலீசார் அங்குவந்து குழியினைத்தோண்டி லட்சுமியின் சடலத்தினை மீட்டு ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு பிரேதப்பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வட்டாட்சியர் ப்ரீத்தி அளித்த புகாரின்பேரில் தர்மய்யா மீது ஐபிசி 302, 201பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

    இந்த காலவரிசையைப் பகிரவும்
    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    தமிழ்நாடு
    ஆந்திரா
    அரசு மருத்துவமனை

    தமிழ்நாடு

    தமிழகத்திற்கு கனமழை எச்சரிக்கை: வானிலை ஆய்வு மையம் புதுச்சேரி
    தமிழகத்தில் கோடை விடுமுறைக்கு பின்னர் பள்ளி திறப்பு குறித்த அறிவிப்பு  பள்ளி மாணவர்கள்
    முதுமலை யானைகள் முகாமில் மசினி யானை தாக்கி பாகன் உயிரிழப்பு  இந்தியா
    வேங்கைவயல் விவகாரம் - ஒரு நபர் விசாரணை ஆணையம் அமைத்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு  சிபிசிஐடி

    ஆந்திரா

    சென்னை வடக்கு கடற்கரை பகுதியில் கஞ்சா விற்பனை - 5 பெண்கள் கைது  சென்னை
    நடிகை சமந்தாவிற்கு கோவில் கட்டும் ஆந்திரா இளைஞர்! சமந்தா ரூத் பிரபு
    என்.டி.ஆர். நூற்றாண்டு விழா - சிறப்பு விருந்தினராக ரஜினிகாந்த் பங்கேற்பு!  ரஜினிகாந்த்
    ஆந்திராவின் நிர்வாக தலைநகராக மாறும் விசாகப்பட்டினம்! ஜெகன் மோகன் ரெட்டி  ஜெகன் மோகன் ரெட்டி

    அரசு மருத்துவமனை

    கோவை மாவட்டம் வால்பாறை அரசு பள்ளி மாணவர்கள் 24 பேருக்கு வாந்தி, மயக்கம்  கோவை
    சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபருக்கு எச்சரிக்கை  சென்னை
    சேலம் அரசு மருத்துவமனை ஆவின் பாலகத்தில் திடீர் சோதனை நடத்திய அதிகாரிகள்  சேலம்
    தூத்துக்குடியில் கிராம நிர்வாக அதிகாரி படுகொலை - 4 தனிப்படை அமைப்பு  தூத்துக்குடி
    அடுத்த செய்திக் கட்டுரை

    இந்தியா செய்திகளை விரும்புகிறீர்களா?

    புதுப்பித்த நிலையில் இருக்க குழுசேரவும்.

    India Thumbnail
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2023