NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / 'பழிவாங்கும் அரசியல்': செந்தில் பாலாஜி கைதுக்கு மத்திய அரசை சாடிய மல்லிகார்ஜுன கார்கே
    அடுத்த செய்திக் கட்டுரை
    'பழிவாங்கும் அரசியல்': செந்தில் பாலாஜி கைதுக்கு மத்திய அரசை சாடிய மல்லிகார்ஜுன கார்கே
    தமிழக மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜியை அமலாக்க இயக்குனரகம் கைது செய்தது.

    'பழிவாங்கும் அரசியல்': செந்தில் பாலாஜி கைதுக்கு மத்திய அரசை சாடிய மல்லிகார்ஜுன கார்கே

    எழுதியவர் Sindhuja SM
    Jun 14, 2023
    11:34 am

    செய்தி முன்னோட்டம்

    தமிழக அமைச்சர் செந்தில் பாலாஜியை அமலாக்க இயக்குனரகம் கைது செய்தது, பாஜக அரசின் பழி வாங்கும் செயல் என்று காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே விமர்த்தித்துள்ளார்.

    இன்று காலை, பணமோசடி வழக்கு தொடர்பாக தமிழக மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜியை அமலாக்க இயக்குனரகம் கைது செய்தது.

    இது குறித்து ஒரு அறிக்கையை வெளியிட்டிருக்கும் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, "எதிர்க்கட்சிகளுக்கு எதிரான அரசியல் துன்புறுத்தல் இது" என்று கண்டனம் தெரிவித்துள்ளார்.

    மேலும், "இது மோடி அரசாங்கத்தின் அரசியல் துன்புறுத்தல் மற்றும் பழிவாங்கல் நடவடிக்கை ஆகும். அது தவிர வேறு எதுவும் இல்லை. எதிர்கட்சியில் இருக்கும் நாங்கள் யாரும் இதுபோன்ற வெட்கக்கேடான நடவடிக்கைகளால் பயப்பட மாட்டோம்." என்று மல்லிகார்ஜுன கார்கே கூறியுள்ளார்.

    ஹபிஸ்ப்

    செந்தில் பாலாஜியை நேரில் சந்திக்க தமிழக முதல்வர் மருத்துவமனைக்கு சென்றிருக்கிறார் 

    தமிழ்நாடு மின்சாரத்துறை செந்தில் பாலாஜி சம்மந்தப்பட்ட 40 இடங்களில் கடந்த மாதம் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர்.

    செந்தில் பாலாஜியின் இல்லம், சென்னை தலைமை செயலகத்தில் உள்ள அவரது அறை, அவரது சகோரர் வீடு உட்பட பல இடங்களில் நேற்று அமலாக்கத் துறை சோதனை நடத்தியது.

    இதனையடுத்து, இன்று அதிகாலை அவர் கைது செய்யப்பட்டார்.

    இந்த அமலாக்கத் துறை விசாரணையின் போது செந்தில் பாலாஜிக்கு கடுமையான நெஞ்சு வலி ஏற்பட்டதால், அவர் சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

    அங்கு அவருக்கு அவசர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இந்நிலையில், அமைச்சர் செந்தில் பாலாஜியை நேரில் சந்திப்பதற்காக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் மருத்துவமனைக்கு சென்றிருக்கிறார் என்ற செய்திகள் வெளியாகி உள்ளன.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    இந்தியா
    காங்கிரஸ்

    சமீபத்திய

    ரூ.1,000 கோடி டாஸ்மாக் பணமோசடி வழக்கில் தமிழகத்தில் 10 இடங்களில் அமலாக்கத்துறை சோதனை டாஸ்மாக்
    உங்கள் ஏரியாவில் நாளை (மே 17) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள் மின்தடை
    தலை முடியை விரித்து போட்டு ஆடினால் தான் மரியாதையாம்! ஐக்கிய அரபு எமிரேட்ஸில் டிரம்பை வரவேற்க பெண்கள் Al-Ayyala நடனம்! ஐக்கிய அரபு எமிரேட்ஸ்
    ஆபரேஷன் சிந்தூருக்குப் பிறகு மத்திய பாதுகாப்பு பட்ஜெட் அதிகரிப்பு: ரூ.50,000 கோடி ஒதுக்கியதாக தகவல் மத்திய அரசு

    இந்தியா

    ஒடிசா ரயில் விபத்து: உடல்கள் வைக்கப்பட்டிருந்த பள்ளி இடிக்கப்பட்டது ஒடிசா
    கேரளாவில் இருந்து புறப்பட்டது முதல் பெண்கள் ஹஜ் விமானம்  கேரளா
    பிப்பர்ஜாய் புயல், பருவமழை: அடுத்த 5 நாட்களுக்கான மழை எச்சரிக்கை தமிழ்நாடு
    வரலாற்று நிகழ்வு: பிரதமர் இந்திரா காந்தியின் படுகொலை- பகுதி 1 வரலாற்று நிகழ்வு

    காங்கிரஸ்

    பெங்களூரில் பேருந்தில் பயணம் செய்து வாக்கு சேகரித்த ராகுல் காந்தி  ராகுல் காந்தி
    சோனியா காந்தி பிரிவினைக்கு அழைப்பு விடுப்பதாக குற்றச்சாட்டு: தேர்தல் ஆணையத்தை நாடிய பாஜக இந்தியா
    எந்த கட்சி கர்நாடகாவில் ஆட்சியினை பிடிக்கும்?-ஜோதிடருக்கு பரிசுத்தொகை அறிவித்த மருத்துவர்  கர்நாடகா
    இன்று கர்நாடக தேர்தல் வாக்கெடுப்பு: எந்த கட்சி ஆட்சியைப் பிடிக்கும்  இந்தியா
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025