NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / ஐஏஎஸ் ஆவதற்கு முன்பே அதிகார துஷ்பிரயோகம் : அதிகார தலைக்கனத்தில் ஆடிய பெண் பணியிட மாற்றம் 
    அடுத்த செய்திக் கட்டுரை
    ஐஏஎஸ் ஆவதற்கு முன்பே அதிகார துஷ்பிரயோகம் : அதிகார தலைக்கனத்தில் ஆடிய பெண் பணியிட மாற்றம் 

    ஐஏஎஸ் ஆவதற்கு முன்பே அதிகார துஷ்பிரயோகம் : அதிகார தலைக்கனத்தில் ஆடிய பெண் பணியிட மாற்றம் 

    எழுதியவர் Sindhuja SM
    Jul 10, 2024
    05:49 pm

    செய்தி முன்னோட்டம்

    மகாராஷ்டிர மாநிலம் புனேயில் பணியமர்த்தப்பட்ட பயிற்சி ஐஏஎஸ் அதிகாரி, அதிகார துஷ்பிரயோகத்தால் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

    2023-ம் ஆண்டு ஐஏஎஸ் அதிகாரியான பூஜா கேத்கர், மத்திய மகாராஷ்டிராவின் வாஷிம் மாவட்டத்திற்கு பணி மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

    அதிகாரப்பூர்வ கடிதத்தின்படி, அவர் ஜூலை 30, 2025 வரை "சூப்பர்நியூமரி உதவி கலெக்டராக" பணியாற்றுவார்.

    தனக்கு ஒரு தனி அறை, கார், குடியிருப்பு மற்றும் ஒரு பியூன் வழங்க வேண்டும் என்று பதவியில் சேர்வதற்கு முன்பே பூஜா கேத்கர் பலமுறை கேட்டதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

    பூஜாவின் கோரிக்கையை கேட்ட அதிகாரிகள், பயிற்சி காலங்களில் இதுபோன்ற வசதிகள் வழங்கப்படுவதில்லை என்று கூறினர்.

    மகாராஷ்டிரா 

    வேலையில் சேர்வதற்கு முன்பே சைரன் காரில் சுற்றிய  பூஜா 

    மேலும், அவருக்கு பொருத்தமான தங்குமிடம் வழங்கப்படும் என்றும் அவரிடம் தெரிவித்தனர். ஆனால், பூஜா அதை ஏற்கவில்லை.

    இதற்கிடையில், பூஜா தனது தனிப்பட்ட ஆடி காரை சிவப்பு-நீல சைரன் லைட் மற்றும் விஐபி நம்பர் பிளேட்டுடன் பயன்படுத்தி இருக்கிறார். அரசாங்க விதிகளின்படி, இவைகள் பயிற்சியில் இருக்கும் அதிகாரிகளுக்கு வழங்கப்படுவதில்லை.

    அவர் தனது தனிப்பட்ட காரில் 'மகாராஷ்டிரா அரசு' என்ற போர்டையும் வைத்திருந்ததாக கூறப்படுகிறது.

    இதனையடுத்து, இதனையடுத்து, புனே ஆட்சியர் சுஹாஸ் திவ்சே, கேத்கரின் நடவடிக்கைகள் குறித்த விவரங்களை பொது நிர்வாகத் துறைக்கு (ஜிஏடி) புகார் அளித்தார்.

    புனே கலெக்டர் அலுவலகத்தில் உள்ள ஒரு மூத்த அதிகாரியின் பெயர் பலகையை அகற்றியதாகவும் பூஜா மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    மகாராஷ்டிரா
    இந்தியா

    சமீபத்திய

    முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசனின் பேத்தி கார் விபத்தில் உயிரிழப்பு விபத்து
    மீண்டும் பங்களாதேஷில் ஆட்சி கவிழும் அபாயம்; ராஜினாமா செய்வதாக இடைக்கால தலைவர் யூனுஸ் மிரட்டல்  பங்களாதேஷ்
    ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தில் சர்வதேச மாணவர்களை சேர்க்க செக் வைத்த டிரம்ப்: இந்திய மாணவர்களின் நிலை என்னவாகும்? பல்கலைக்கழகம்
    வங்கக்கடலில் மே 27ஆம் தேதி காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும் வாய்ப்பு: தமிழகத்தில் மழை பெய்யக்கூடும் வங்க கடல்

    மகாராஷ்டிரா

    தீவிரமடையும் மராத்தா இடஒதுக்கீடு போராட்டங்கள்: மும்பை-பெங்களூரு போக்குவரத்து பாதிப்பு, ரயில்கள் நிறுத்தம்  மும்பை
    பெங்களூரில் கண்டறியப்பட்ட ஜிகா வைரஸ்- ஆய்வுக்கு உட்படுத்தப்பட்ட காய்ச்சல் மாதிரிகள் பெங்களூர்
    கல்லூரிகளில் ராகிங் தடுப்பு குழு கட்டாயம் அமைக்க உத்தரவு  தமிழ்நாடு
    மகாராஷ்டிரா அரசு பள்ளிகளில் மாணவர்களுக்கு மதிய உணவில் முட்டை பிரியாணி வழங்க திட்டம் தமிழ்நாடு

    இந்தியா

    121 பேரின் உயிரிழப்புக்கு காரணமான பிரபல சாமியாரின் நிகழ்ச்சி: யாரிந்த போலே பாபா?  உத்தரப்பிரதேசம்
    நாடு முழுவதும் உள்ள பல மாநிலங்களுக்கு கனமழை எச்சரிக்கை  டெல்லி
    மத்திய பிரதேசம்: ஆசிரமத்தில் இருந்த 5 குழந்தைகள் மர்ம நோயால் உயிரிழப்பு  மத்திய பிரதேசம்
    41 ஆண்டுகளுக்கு பிறகு வியன்னாவுக்குச் செல்லும் முதல் இந்தியப் பிரதமர் ஆனார் மோடி உலகம்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025