NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / யூடியூபா் டிடிஎஃப் வாசனுக்கு நிபந்தனை ஜாமீன்
    அடுத்த செய்திக் கட்டுரை
    யூடியூபா் டிடிஎஃப் வாசனுக்கு நிபந்தனை ஜாமீன்
    இதே குற்றத்திற்காக வாசனின் ஓட்டுனர் உரிமம் 10 ஆண்டுகளுக்கு ரத்து செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

    யூடியூபா் டிடிஎஃப் வாசனுக்கு நிபந்தனை ஜாமீன்

    எழுதியவர் Srinath r
    Nov 01, 2023
    12:09 pm

    செய்தி முன்னோட்டம்

    பைக்கில் சாகசத்தில் ஈடுபட்ட போது விபத்து ஏற்படுத்திய வழக்கில் கைதான யூடியூபா் டிடிஎஃப் வாசனுக்கு, நிபந்தனை ஜாமீன் வழங்கிய சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

    கடந்த செப்டம்பர் 17ஆம் தேதி சென்னை பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில், இருசக்கர வாகனத்தில் அதிவேகமாக சென்ற டிடிஎஃப் வாசன், வீலிங் செய்ய முற்படும்போது தனக்குத்தானே விபத்தை ஏற்படுத்தி காயமடைந்தார்.

    விபத்தை ஏற்படுத்தியதற்காக பாலுரெட்டிசத்திரம் காவல்துறையினர் மோட்டார் வாகன சட்டப்படி இரு பிரிவுகளிலும், இந்திய தண்டனைச் சட்டத்தின் படி 3 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்திருந்தனர்.

    இதனை அடுத்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டு வாசன், புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.

    புழல் சிறையில் அடைக்கப்பட்டது முதல் காஞ்சிபுரம் நீதிமன்றத்தில், வாசன் தரப்பினர் தொடர்ந்து ஜாமீன் கேட்டு மனு செய்து வந்தனர்.

    2nd card

    மூன்று வாரத்திற்கு சம்பந்தப்பட்ட காவல் நிலையத்தில் கையெழுத்திட வேண்டும்

    காஞ்சிபுரம் நீதிமன்றம் டிடிஎஃப் வாசனுக்கு ஜாமீன் வழங்க மறுத்து மனுவை தள்ளுபடி செய்தது. இதனால் சென்னை உயர்நீதிமன்றத்தில் ஜாமீன் கேட்டு வாசன் மனு தாக்கல் செய்திருந்தார்.

    அந்த மனு மீது, நீதிபதி சிவி கார்த்திகேயன் மிகவும் காட்டமான கருத்தையும் பதிவு செய்து ஜாமீன் மனுவை நிராகரித்தார்.

    இதனை அடுத்து டிடிஎஃப் வாசன் மீண்டும் ஜாமீன் கேட்டு உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். அந்த மனுவில் கையில் அடிபட்டு இருப்பதால் மருத்துவம் பார்ப்பதற்காக ஜாமீன் கோரி இருந்தார்.

    இந்நிலையில் 50 நாட்களுக்கு மேலாக சிறையில் இருக்கும் வாசனுக்கு,

    மூன்று வாரத்திற்கு சம்பந்தப்பட்ட காவல் நிலையத்தில் கையெழுத்திட வேண்டும் என்ற நிபந்தனையுடன் ஜாமீன் வழங்கி, சென்னை உயர்நீதிமன்றம் தற்போது உத்தரவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

    ட்விட்டர் அஞ்சல்

    50 நாட்களுக்குப் பின் டிடிஎஃப்க்கு ஜாமீன்

    #BREAKING | TTF வாசனுக்கு நிபந்தனை ஜாமின் வழங்கியது சென்னை உயர் நீதிமன்றம்

    — Sun News (@sunnewstamil) November 1, 2023
    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    யூடியூபர்
    சென்னை
    பெங்களூர்
    சென்னை உயர் நீதிமன்றம்

    சமீபத்திய

    ரூ.20 கோடி மதிப்புள்ள வைரம் மாயம்: போலி வைரம் நீதிமன்றத்தில் எப்படி வந்தது? போலீசார் தீவிர விசாரணை நீதிமன்ற காவல்
    பாகிஸ்தானுடன் கிரிக்கெட் கிடையாது; ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியிலிருந்து விலக பிசிசிஐ முடிவு பிசிசிஐ
    மே 8 அன்று பொற்கோவிலுக்கு குறிவைத்த பாகிஸ்தானின் தாக்குதலை முறியடித்த இந்தியாவின் வான் பாதுகாப்பு அமைப்பு பொற்கோயில்
    மோசமான பணியிட சூழல்; பெங்களூர் பொறியாளர் மரணத்தின் பின்னணியில் பகீர் குற்றச்சாட்டு பெங்களூர்

    யூடியூபர்

    கார் மோதி பெண் உயிரிழந்த சம்பவம் - பிரபல யூடியூபர் இர்பான் சொகுசு கார் பறிமுதல் கார்
    'காவாலா' பாடலுக்கு நடனமாடும் இந்தியாவுக்கான ஜப்பான் தூதர்  ஜெயிலர்
    எஸ்கேப் ஆன TTF வாசன்; போலீஸ் வலைவீச்சு யூடியூப்
    யூட்யூப் பிரபலம் டிடிஎப் வாசனுக்கு அக்டோபர் 3ஆம் தேதி வரை நீதிமன்ற காவல்  தமிழ்நாடு

    சென்னை

    சென்னையிலுள்ள பிரபல நகைக்கடையில் மத்திய வருவாய் புலனாய்வுத்துறை சோதனை புலனாய்வு
    திருமணமான பெண்களுக்கு நடத்தப்பட்ட அழகி போட்டியில் பட்டம் வென்ற சென்னை பெண்மணி  பிலிப்பைன்ஸ்
    தொடரும் ஓலா, ஊபர் போராட்டம்; பாதுகாப்பு கோரும் ராப்பிடோ ஓட்டுனர்கள் ஓலா
    சென்னையில் போலி டிக்கெட் பரிசோதகர் கைது கைது

    பெங்களூர்

    கேரளா முன்னாள் முதலமைச்சர் உம்மன் சாண்டி உடல்நலக்குறைவால் காலமானார் கேரளா
    உம்மன் சாண்டி மறைவு: மு.க.ஸ்டாலின், சோனியா காந்தி, ராகுல் காந்தி நேரில் அஞ்சலி கேரளா
    26 எதிர்க்கட்சிகளின் கூட்டணிக்கு 'I-N-D-I-A' என்று பெயரிடப்பட்டது  எதிர்க்கட்சிகள்
    பெங்களூரில் மாபெரும் தீவிரவாத தாக்குதல் நடத்த முயன்ற 5 பயங்கரவாதிகள் கைது  காவல்துறை

    சென்னை உயர் நீதிமன்றம்

    கர்ப்பிணிகளுக்கான அல்ட்ரா சவுண்ட் பரிசோதனை குறித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு ஆயுர்வேதம்
    கோகுல்ராஜ் ஆணவக்கொலை வழக்கு - 10 பேரின் ஆயுள் தண்டனையினை உறுதி செய்தது சென்னை உயர்நீதிமன்றம்  சேலம்
    செந்தில் பாலாஜியின் மனைவி வழக்கு: நீதிபதி விலகியதால் புதிய அமர்வு அறிவிப்பு தமிழகம்
    அமைச்சர் செந்தில் பாலாஜி: நீதிமன்ற காவலை ரத்து செய்யக்கோரிய மனு தள்ளுபடி செந்தில் பாலாஜி
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025