NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / குணால் கம்ராவின் முன்ஜாமீனை ஏப்ரல் 17 வரை நீட்டித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு
    அடுத்த செய்திக் கட்டுரை
    குணால் கம்ராவின் முன்ஜாமீனை ஏப்ரல் 17 வரை நீட்டித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு
    குணால் கம்ராவின் முன்ஜாமீன் ஏப்ரல் 17 வரை நீட்டிப்பு

    குணால் கம்ராவின் முன்ஜாமீனை ஏப்ரல் 17 வரை நீட்டித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு

    எழுதியவர் Sekar Chinnappan
    Apr 07, 2025
    07:26 pm

    செய்தி முன்னோட்டம்

    மும்பையில் பதிவு செய்யப்பட்ட பல எஃப்ஐஆர்கள் தொடர்பாக கைது செய்யப்படுவதிலிருந்து தொடர்ந்து பாதுகாப்பை வழங்கும் வகையில், ஸ்டாண்ட்-அப் காமெடியன் குணால் கம்ராவுக்கு ஏப்ரல் 17 ஆம் தேதி வரை இடைக்கால முன்ஜாமீனை சென்னை உயர் நீதிமன்றம் திங்கட்கிழமை (ஏப்ரல் 7) நீட்டித்துள்ளது.

    முன்னதாக, பிப்ரவரி 2025 அன்று மகாராஷ்டிராவில் நடந்த நகைச்சுவை சிறப்பு நிகழ்ச்சியான நயா பாரத் நிகழ்ச்சியில் கம்ரா அம்மாநில துணை முதல்வர் ஏக்நாத் ஷிண்டே குறித்து சர்ச்சைக்குரிய வகையில் கருத்து கூறியதாக கூறப்படும் சம்பவத்தைத் தொடர்ந்து அவர் மீது பல்வேறு வழக்குகள் பதியப்பட்டன.

    இதையடுத்து குணால் கம்ரா தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் முன்ஜாமீன் மனு தாக்கல் செய்யப்பட்டது.

    சென்னை

    சென்னையில் முன்ஜாமீன் மனு ஏன்?

    குணால் கம்ரா 2021 முதல் தமிழ்நாட்டின் விழுப்புரத்தில் வசிக்கிறார் என்றும், சட்ட உதவிக்காக மும்பைக்குச் சென்றால் உடனடியாக கைது செய்யப்படுவார் என்ற கவலைகள் இருப்பதாகவும் கூறி, சென்னை உயர் நீதிமன்றத்தில் போக்குவரத்து முன்ஜாமீன் கோரியிருந்தார்.

    மார்ச் 28 அன்று ஏப்ரல் 7 வரை இடைக்கால நிவாரணம் வழங்கிய நீதிபதி சுந்தர் மோகன், குணால் கம்ரா மகாராஷ்டிராவில் உள்ள பொருத்தமான நீதிமன்றத்தை அணுகுமாறு அறிவுறுத்தினார்.

    இந்நிலையில் வழக்கு திங்கட்கிழமை மீண்டும் விசாரணைக்கு வந்த நிலையில், ஆரம்ப புகாருக்குப் பிறகு மேலும் மூன்று எஃப்ஐஆர்கள் பதிவு செய்யப்பட்டதாக கம்ராவின் வழக்கறிஞர் நீதிமன்றத்தில் தெரிவித்தார்.

    இதையடுத்து அவரது முன்ஜாமீன் ஏப்ரல் 17 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    சென்னை உயர் நீதிமன்றம்
    மகாராஷ்டிரா
    காவல்துறை
    காவல்துறை

    சமீபத்திய

    அமேசானுக்குச் சொந்தமான Zoox, அமெரிக்காவில் அதன் ரோபோடாக்சிகளை திரும்ப பெறுகிறது; ஏன்? அமெரிக்கா
    உலகளாவில் wearables பிரிவில் Xiaomi முதலிடத்தில் உள்ளது, ஆப்பிளை விட முன்னிலை சியோமி
    எலுமிச்சை சாறு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் என்பது உண்மையா? ஆரோக்கியம்
    டிரம்பின் வரி அச்சுறுத்தல்கள் இருந்தபோதிலும், இந்தியாவில் தயாரிக்கப்பட்ட ஐபோன்கள் அமெரிக்காவில் மலிவாக இருக்கும் அமெரிக்கா

    சென்னை உயர் நீதிமன்றம்

    ஸ்டெர்லைட் ஆலையை திறக்க கோரிய வேதாந்த நிறுவனத்தின் மனுவை தள்ளுபடி செய்தது உச்ச நீதிமன்றம் ஸ்டெர்லைட் ஆலை
    பணிப்பெண் சித்ரவதை வழக்கு: திமுக எம்எல்ஏ மகன், மருமகளுக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கியது உயர்நீதிமன்றம் திமுக
    சனாதன தர்மம் சர்ச்சை: உதயநிதி, சேகர் பாபுவை பதவி நீக்கம் செய்ய தேவையில்லையென உயர் நீதிமன்றம் கருத்து சனாதன தர்மம்
    முன்னாள் அமைச்சர் பொன்முடி வழக்கில் உச்ச நீதிமன்றம் அதிரடி; மீண்டும் MLA ஆகிறார் பொன்முடி? பொன்முடி

    மகாராஷ்டிரா

    மகாராஷ்டிராவில் மணிப்பூர் போன்ற சூழல் சாத்தியம்...: சரத் பவார்  இந்தியா
    மகாராஷ்டிராவில் செல்ஃபி எடுக்கப் போய் பள்ளத்தில் விழுந்த இளம் பெண் போராடி மீட்பு வைரல் செய்தி
    மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு ரூ.5,000 கோடி கடன் வழங்கினார் பிரதமர் மோடி பிரதமர் மோடி
    'தலையை குனிந்து மன்னிப்பு கேட்கிறேன்': சிவாஜி சிலை உடைந்தற்கு மோடியின் ரியாக்ஷன்  பிரதமர் மோடி

    காவல்துறை

    மேற்கு வங்காளத்தில் ஒரு பெண்ணை சரமாரியாக அடித்த அரசியல்வாதி: அடித்தவரை விட்டுவிட்டு வீடியோ பதிவு செய்தவர் மீது பாதிக்கப்பட்ட பெண் புகார்  மேற்கு வங்காளம்
    ஆர்ம்ஸ்ட்ராங் கொலை எதிரொலி, அதிரடியாக மாற்றப்பட்ட சென்னை காவல் ஆணையர் காவல்துறை
    உத்தரபிரதேசத்தில் வேகமாக வந்த பேருந்து, பால் டேங்கர் மீது மோதியதில் 18 பேர் உயிரிழப்பு விபத்து
    முன்னாள் அதிமுக அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கருக்கு வரும் 31ஆம் தேதி வரை நீதிமன்ற காவல் அதிமுக

    காவல்துறை

    துப்பாக்கி கொண்டு மிரட்டியதற்காக, தலைமறைவாக இருந்த பயிற்சி ஐஏஎஸ் பூஜா கேத்கரின் தாய் கைது கைது
    கட்சியால் வேறுபட்டிருந்தாலும், பழிவாங்கும் எண்ணத்தோடு ஒன்றுபட்ட எதிரிகள்? ஆர்ம்ஸ்ட்ராங் கொலை வழக்கில்  திருப்பம் கொலை
    டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலின் காவல் ஆகஸ்ட் 8 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது  அரவிந்த் கெஜ்ரிவால்
    14 வயது சகோதரியை விபச்சாரம் செய்ய வற்புறுத்திய சென்னை பெண் கைது சென்னை
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025