அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரனை விடுவித்தது செல்லாது: சென்னை உயர்நீதிமன்றம்
செய்தி முன்னோட்டம்
சொத்துக்குவிப்பு வழக்குகளில் இருந்து அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் விடுவிக்கப்பட்டது செல்லாது என சென்னை உயர்நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு வழங்கியுள்ளது.
கடந்த 2006-2011 வரையிலான திமுக ஆட்சிக் காலத்தில் பள்ளிக் கல்வித்துறை அமைச்சராக தங்கம் தென்னரசுவும், பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சராக கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமசந்திரனும் பதவி வகித்தனர்.
இந்த காலக் கட்டத்தில், இருவரும் வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக வழக்கு தொடுக்கப்பட்டது. இந்த வழக்கில் அமைச்சர்களுக்கு எதிராக போதிய ஆதாரம் இல்லையென அவர்கள் ஸ்ரீவில்லிபுத்தூர் நீதிமன்றம் விடுவித்து உத்தரவிட்டது.
இதனை எதிர்த்து, லஞ்ச ஒழிப்புத்துறை சார்பில் மேல்முறையீடு செய்யப்பட வில்லை. எனினும் இந்த வழக்கை, சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் தாமாக முன்வந்து சீராய்வு மனுக்களை விசாரணைக்கு எடுத்தார்.
மறுசீராய்வு மனு
நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் விலக வேண்டும் என கோரிக்கை
நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் இந்த வழக்கிலிருந்தது விலக வேண்டும் எனவும், மறுசீராய்வு மனுக்களை வேறு நீதிபதிகள் விசாரிக்க வேண்டும் எனவும் ஏற்கனவே திமுகவின் ஆர்.எஸ்.பாரதி வைத்த கோரிக்கை நிராகரிக்கப்பட்டது.
இந்த வழக்குகளின் இறுதி விசாரணை முடிவடைந்து, இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது.
அதன்படி, சொத்துக்குவிப்பு வழக்குகளில் அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் ஆகியோரை விடுவித்த உத்தரவை ரத்து செய்துள்ளது.
மேலும், இந்த வழக்குகளை மீண்டும் விசாரிக்க ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
மேலும் வழக்கில் குற்றச்சாட்டை பதிவு செய்து சாட்சி விசாரணையை தொடங்க ஸ்ரீவில்லிபுத்தூர் சிறப்பு நீதிமன்றத்திற்கு உத்தரவிட்டுள்ளது.
தினசரி விசாரணை நடத்தபட வேண்டுமெனவும், செப்டம்பர் 11ம் தேதி இருவரும் நேரில் ஆஜராக வேண்டும் என தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.