NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / முன்னாள் அமைச்சர் செல்வகணபதியின் 2 ஆண்டு சிறை தண்டனையினை ரத்து செய்த உயர் நீதிமன்றம் 
    அடுத்த செய்திக் கட்டுரை
    முன்னாள் அமைச்சர் செல்வகணபதியின் 2 ஆண்டு சிறை தண்டனையினை ரத்து செய்த உயர் நீதிமன்றம் 
    முன்னாள் அமைச்சர் செல்வகணபதியின் 2 ஆண்டு சிறை தண்டனையினை ரத்து செய்த உயர்நீதிமன்றம்

    முன்னாள் அமைச்சர் செல்வகணபதியின் 2 ஆண்டு சிறை தண்டனையினை ரத்து செய்த உயர் நீதிமன்றம் 

    எழுதியவர் Nivetha P
    Nov 28, 2023
    06:18 pm

    செய்தி முன்னோட்டம்

    1991-1996 வரை தமிழகத்தில் அதிமுக ஆட்சி நடந்தது.

    அப்போது உள்ளாட்சி துறை அமைச்சராக செல்வகணபதி இருந்தார்.

    அப்போது தமிழ்நாடு முழுவதுமுள்ள சுடுகாடு அனைத்திற்கும் கூரை அமைக்கும் பணி நடைபெற்றது.

    இந்த திட்டத்தில் அரசுக்கு சுமார் ரூ.23 லட்சம் இழப்பீடு ஏற்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது.

    இதனையடுத்து இந்த விவகாரம் குறித்து சிபிஐ கடந்த 1997ம் ஆண்டு வழக்குப்பதிவு செய்தது.

    தொடர்ந்து கடந்த 2014ம் ஆண்டு இந்த வழக்கின் விசாரணை சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் நடத்தப்பட்டது.

    இந்த விசாரணையின் முடிவில் செல்வகணபதி, ஐஏஎஸ் அதிகாரிகளான சத்யமூர்த்தி, ஆச்சார்யலு உள்பட 5 பேருக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது.

    விடுதலை 

    சிறை தண்டனையினை எதிர்த்து நீதிமன்றத்தில் மனுதாக்கல் 

    இதனிடையே அவர்கள் மீதான கூட்டு சதி வழக்கில் இருந்து விடுதலை செய்து உத்தரவு பிறப்பித்தது.

    இந்நிலையில் கூட்டுச்சதி வழக்கில் இருந்து செல்வகணபதி உள்ளிட்டோர் விடுதலை செய்யப்பட்டதை எதிர்த்து சிபிஐ தரப்பு மேல்முறையீடு செய்தது.

    அதே போல் தங்களுக்கு விதிக்கப்பட்ட 2 ஆண்டுகள் சிறை தண்டனையை எதிர்த்து செல்வகணபதி உள்ளிட்டோர் 2014ம் ஆண்டு சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர்.

    அதன்படி, இது குறித்த வழக்கு இன்று(நவ.,28) சென்னை உயர் நீதிமன்றம் நீதிபதி ஜெயச்சந்திரன் முன்னிலையில் விசாரணைக்கு வந்துள்ளது.

    அப்போது அனைத்து தரப்பு வாதங்களை கேட்டறிந்த நீதிபதி செல்வகணபதி உள்ளிட்ட 5 பேருக்கும் விதிக்கப்பட்ட 2 ஆண்டு சிறை தண்டனையினை ரத்து செய்ததோடு, அவர்களை வழக்கில் இருந்து விடுதலை செய்வதாகவும் கூறி உத்தரவிட்டுள்ளார்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    சென்னை உயர் நீதிமன்றம்
    சிபிஐ
    அதிமுக
    தமிழ்நாடு

    சமீபத்திய

    பாகிஸ்தானுக்கு பின்னடைவு; சூராப் நகரத்தைக் கைப்பற்றியதாக பலுசிஸ்தான் விடுதலை ராணுவம் அறிவிப்பு பலுசிஸ்தான்
    ஜூன் 1, 2025 முதல் இந்த ஸ்மார்ட்போன்களில் எல்லாம் வாட்ஸ்அப் ஆப் செயல்படாது; எந்தெந்த போன் தெரியுமா? வாட்ஸ்அப்
    திமுக பொதுக்குழு கூட்டத்திற்கு முன்னதாக மதுரையில் முதல்வர் ஸ்டாலினுக்கு பேரணி மூலம் பிரமாண்ட வரவேற்பு மு.க.ஸ்டாலின்
    பாடுவதற்கு விதிக்கப்பட்ட தடைக்கு எதிரான சட்டப் போராட்டம் தொடரும் என பின்னணிப் பாடகி சின்மயி உறுதி சின்மயி

    சென்னை உயர் நீதிமன்றம்

    வேங்கைவயல் விவகாரம்: 4 வாரத்தில் அறிக்கை தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு உத்தரவு தமிழகம்
    அமைச்சர் செந்தில் பாலாஜி ஆட்கொணர்வு மனு: எதிர்பாராமல் நடைபெற்ற திடீர் ட்விஸ்ட் செந்தில் பாலாஜி
    செந்தில் பாலாஜியின் மனைவி தொடுத்த ஆட்கொணர்வு மனு - 3வது நீதிபதி நியமனம்  செந்தில் பாலாஜி
    நில அபகரிப்பு வழக்கில் கைதான அமைச்சர் பொன்முடி விடுதலை  தமிழ்நாடு

    சிபிஐ

    ஒடிசா ரயில் விபத்து: விசாரணை விரைவில் சிபிஐக்கு மாறுகிறது இந்தியா
    செந்தில் பாலாஜி கைது எதிரொலி: CBI க்கு தமிழக அரசு வைத்த செக்  தமிழக அரசு
    மணிப்பூர் கலவரம் - வழக்கு விசாரணை சிபிஐ'க்கு மாற்றம்  கைது
    மணிப்பூர் வீடியோ வழக்கிற்கு FIR பதிவு செய்தது CBI மணிப்பூர்

    அதிமுக

    சொத்துகுவிப்பு வழக்கிலிருந்து அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் விடுவிக்கப்பட்டார்  விருதுநகர்
    செந்தில் பாலாஜி பதவி நீட்டிப்பிற்கு எதிரான வழக்குகள் - சென்னை உயர்நீதிமன்றம் தள்ளிவைப்பு  கைது
    நாடாளுமன்ற தேர்தல் - திமுக தொண்டர்களுக்கு அழைப்பு விடுத்து முதல்வர் கடிதம்  நாடாளுமன்றம்
    கிருஷ்ணகிரி வெடி விபத்து - சிபிஐ விசாரணை கோரும் அதிமுக எம்.பி.தம்பிதுரை சிபிஐ

    தமிழ்நாடு

    திரையுலகம் சார்பில் கலைஞர்100- ரஜினிக்கு நேரில் அழைப்பு விடுத்த தயாரிப்பாளர்கள் சங்கம் கலைஞர் கருணாநிதி
    இந்திய கடற்பகுதியில் புதிய வகை சீலா மீன்கள் கண்டெடுப்பு கேரளா
    பொள்ளாச்சி டு பிலிப்பைன்ஸ்; 86 வயதில் ஆசிய போட்டியில் 4 தங்கம் வென்ற தமிழக வீரர் தடகள போட்டி
    'ஆளுநர் பதவி என்பதே அகற்றப்பட வேண்டிய பதவி': சிறப்பு சட்டசபை கூட்டத்தில் மு.க.ஸ்டாலின் பேச்சு திமுக
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025