
செந்தில் பாலாஜி ஜாமீன் மனு மீதான விசாரணையை முதன்மை அமர்வு நீதிமன்றம் விசாரிக்கும்
செய்தி முன்னோட்டம்
கைது செய்யப்பட்ட அமைச்சர் செந்தில் பாலாஜியின் ஜாமீன் மீதான விசாரணை இழுபறியில் இருந்த நிலையில், தற்போது சென்னை உயர் நீதிமன்றம் தற்போது முற்றுப்புள்ளி வைத்துள்ளது.
அமைச்சர் செந்தில் பாலாஜியின் ஜாமீன் மீதான வழக்கை சிறப்பு நீதிமன்றத்திற்கு மாற்றியது தவறு என சென்னை உயர் நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது.
தொடர்ந்து, ஜாமீன் மனுவை, முதன்மை அமர்வு நீதிமன்றம் விசாரிக்க வேண்டும் எனவும், அவர் சம்மந்தப்பட்ட அனைத்து கோப்புகளையும் அமர்வு நீதிமன்றத்திடம் ஒப்படைக்க வேண்டும் எனவும் உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இந்த வழக்கில் இதுவரை நடந்ததாவது:
சட்டவிரோத பணப்பரிமாற்றத்தில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்பட்ட அமைச்சர் செந்தில் பாலாஜியின் நீதிமன்றக் காவல் செப்டம்பர் 15வரை நீட்டிக்கப்பட்டது.
card 2
இழுபறியில் இருக்கும் செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனு விசாரணை
இதனை தொடர்ந்து, ஜாமீன் வழங்கக் கோரி சிறப்பு நீதிமன்றத்தில் செந்தில்பாலாஜி தாக்கல் செய்த மனுவை விசாரிக்க மறுத்த நீதிபதிகள், ஜாமீனுக்கு முதன்மை அமர்வு நீதிமன்றத்தை அணுகுமாறு அறிவுறுத்தினர்.
அதைத் தொடர்ந்து, முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் செந்தில் பாலாஜி தரப்பு தாக்கல் செய்த மனு புதன்கிழமை (ஆகஸ்ட் 30) விசாரணைக்கு வந்தது.
மனுவை விசாரித்த நீதிபதி அல்லி, ஜாமீன் மனு மீது உத்தரவிடும் அதிகாரம் தனக்கு இல்லை என்றும் சிறப்பு நீதிமன்றத்தை அணுகுமாறும் கூறினார்.
இதையடுத்து சிறப்பு நீதிமன்றத்தில் மீண்டும் முறையிட்ட நிலையில், உயர்நீதிமன்ற உத்தரவு இல்லாமல் தனக்கு விசாரிக்க அதிகாரம் இல்லை என்றும், எனவே உயர்நீதிமன்றத்தை அணுகுமாறும் தெரிவித்திருந்தது.
அதன் தொடர்ச்சியாகவே தற்போது உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.