NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / அமைச்சர் செந்தில் பாலாஜி ஆட்கொணர்வு மனு: எதிர்பாராமல் நடைபெற்ற திடீர் ட்விஸ்ட்
    அடுத்த செய்திக் கட்டுரை
    அமைச்சர் செந்தில் பாலாஜி ஆட்கொணர்வு மனு: எதிர்பாராமல் நடைபெற்ற திடீர் ட்விஸ்ட்
    செந்தில் பாலாஜி ஆட்கொணர்வு மனுவில் மாறுபட்ட தீர்ப்பை வழங்கியது அமர்வு நீதிமன்றம்

    அமைச்சர் செந்தில் பாலாஜி ஆட்கொணர்வு மனு: எதிர்பாராமல் நடைபெற்ற திடீர் ட்விஸ்ட்

    எழுதியவர் Venkatalakshmi V
    Jul 04, 2023
    11:49 am

    செய்தி முன்னோட்டம்

    சென்ற மாதம், அமைச்சர் செந்தில் பாலாஜி, சட்டவிரோத பணப்பரிமாற்றம் செய்ததாக, அமலாக்கத்துறையினரால் கைது செய்யப்பட்டார்.

    அன்றைய தினம், அவர் நெஞ்சு வலி காரணமாக ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

    அதே சமயத்தில், செந்தில் பாலாஜியை, அமலாக்கத்துறை அதிகாரிகள் சட்ட விரோத காவலில் வைத்ததாக கூறி செந்தில் பாலாஜியின் மனைவி மேகலா, சென்னை ஐகோர்ட்டில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்தார்.

    அந்த மனுவின் மீதான விசாரணையை அப்போதைக்கு ஒத்திவைத்து சென்னை உயர் நீதிமன்றம். தொடர்ந்து நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டார் செந்தில் பாலாஜி.

    இதனிடையே, அவரின் உடல்நிலையை கருத்தில் கொண்டு, அரசு மருத்துவமனையிலிருந்து, தனியார் மருத்துவமனைக்கு மாற்றவும் ஒப்புதல் அளித்தது நீதிமன்றம்.

    card 2

    மாறுபட்ட தீர்ப்பை வாசித்த அமர்வு நீதிபதிகள் 

    தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் செந்தில் பாலாஜிக்கு இதய அறுவை சிகிச்சை செய்யப்பட்டு, தற்போது மருத்துவமனையில், நீதிமன்ற காவலில் உள்ளார்.

    தற்போது, செந்தில் பாலாஜியின் மனைவி தொடுத்திருந்த ஆட்கொணர்வு மனு மீதான விசாரணை நடைபெற்று, இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது.

    அமர்வு நீதிபதிகள் வழங்கிய தீர்ப்பில், இருவருக்கும் மாற்று கருத்து இருப்பதாக கூறி, மாறுபட்ட தீர்ப்பு வழங்கப்பட்டது.

    அமர்வு நீதிபதி, நிஷா பானு, செந்தில் பாலாஜியின் கைது சட்ட விரோதம் என்றும், அதனால் விடுவிக்கலாம் எனவும் குறிப்பிட்டார்.

    மற்றொரு நீதிபதியான பரத சக்கரவர்த்தி, காவேரி மருத்துவமனையில் செந்தில் பாலாஜிக்கு சிகிச்சையை தொடரலாம் என்றும், ஆட்கொணர்வு மனு விசாரணைக்கு உகந்ததல்ல என்றும், அதனால் அந்த மனுவை தள்ளுபடி செய்வதாகவும் தெரிவித்தார்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    செந்தில் பாலாஜி
    சென்னை உயர் நீதிமன்றம்

    சமீபத்திய

    ஐபிஎல் வரலாற்றில் அதிவேகமாக 150 விக்கெட்டுகள்; எஸ்ஆர்எச் வீரர் ஹர்ஷல் படேல் சாதனை ஐபிஎல்
    ஆகஸ்ட் 29 அன்று நடிகர் விஷால்- நடிகை சாய் தன்ஷிகா திருமணம்; யோகி டா படவிழாவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு விஷால்
    தேச நலனுக்காக செலிபி நிறுவனத்தின் உரிமம் ரத்து; டெல்லி உயர்நீதிமன்றத்தில் மத்திய அரசு வாதம் உயர்நீதிமன்றம்
    திடீர் உடல் எடை அதிகரிப்புக்கு பொதுவான காரணங்கள்; நாம் தெரிந்துகொள்ள வேண்டியது என்ன? எடை அதிகரிப்பு

    செந்தில் பாலாஜி

    'பழிவாங்கும் அரசியல்': செந்தில் பாலாஜி கைதுக்கு மத்திய அரசை சாடிய மல்லிகார்ஜுன கார்கே இந்தியா
    கைதுசெய்யப்பட்ட அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு இருதயத்தில் 3 அடைப்புகள் இருப்பதாக மருத்துவர்கள் தகவல் ரெய்டு
    காவிரி மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார் அமைச்சர் செந்தில் பாலாஜி  தமிழ்நாடு
    அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு ஜூன் 28 வரை நீதிமன்ற காவல்: நீதிபதி உத்தரவு  தமிழ்நாடு

    சென்னை உயர் நீதிமன்றம்

    தமிழகத்தில் ஆன்லைன் ரம்மி விளையாட்டால் நேர்ந்த 2 தற்கொலைகள் - சென்னை உயர்நீதிமன்றம் தமிழ்நாடு
    அதிமுக பொது செயலாளர் தேர்தல் - தடை கேட்டு உயர்நீதிமன்றத்தில் அவசர வழக்கு அதிமுக
    அதிமுக பொதுச்செயலாளர் தேர்தலுக்கு தடை கோரிய வழக்கு - நாளை மறுநாள் விசாரணை ஓ.பன்னீர் செல்வம்
    அதிமுக பொதுக்குழு தீர்மானங்கள் குறித்த வழக்கின் தீர்ப்பு ஈபிஎஸ்'க்கு சாதகமாக அமையும் என பேச்சு எடப்பாடி கே பழனிசாமி
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025