NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / தேர்தல் பத்திரங்கள்: 'லாட்டரி கிங்' சாண்டியாகோ மார்ட்டினின் நிறுவனத்திடம் இருந்து அதிக தொகை பெற்றவர் யார்?
    அடுத்த செய்திக் கட்டுரை
    தேர்தல் பத்திரங்கள்: 'லாட்டரி கிங்' சாண்டியாகோ மார்ட்டினின் நிறுவனத்திடம் இருந்து அதிக தொகை பெற்றவர் யார்?
    அந்த நிறுவனத்திடம் இருந்து பாரதிய ஜனதாவும் ₹100 கோடி பெற்றுள்ளது

    தேர்தல் பத்திரங்கள்: 'லாட்டரி கிங்' சாண்டியாகோ மார்ட்டினின் நிறுவனத்திடம் இருந்து அதிக தொகை பெற்றவர் யார்?

    எழுதியவர் Venkatalakshmi V
    Mar 22, 2024
    08:09 am

    செய்தி முன்னோட்டம்

    மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாமுல் காங்கிரஸ், சாண்டியாகோ மார்ட்டின் ஃபியூச்சர் கேமிங்கில் இருந்து ₹540 கோடியை தேர்தல் பத்திரங்கள் மூலம் பெற்று, சாண்டியாகோ மார்டினுக்கு சொந்தமான நிறுவனத்தின் மிகப்பெரிய பயனாளியாக மாறியுள்ளது.

    அந்த நிறுவனத்திடம் இருந்து பாரதிய ஜனதாவும் ₹100 கோடி பெற்றுள்ளது.

    திமுக, ஒய்எஸ்ஆர் காங்கிரஸ், பாஜக மற்றும் காங்கிரஸ் தவிர, இந்த நிறுவனம் சிக்கிம் கிராந்திகாரி மோர்ச்சா மற்றும் சிக்கிம் ஜனநாயக முன்னணி ஆகியவற்றிற்கும் நன்கொடை அளித்ததுள்ளது.

    ஃபியூச்சர் கேமிங், தேர்தல் பத்திரங்களை அதிகம் வாங்கிய நிறுவனமாகும். இந்த நிறுவனம் வாங்கிய தேர்தல் பாத்திரங்களின் மொத்த கொள்முதலின் மதிப்பு ₹1,368 கோடி.

    திமுக

    தமிழகத்தில் அதிக நிதி பெற்ற கட்சி - திமுக

    சாண்டியாகோ மார்ட்டின் நிறுவனம், தமிழ்நாட்டின் ஆளும் கட்சியான திமுகவுக்கு ₹509 கோடியும், ஆந்திராவின் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சிக்கு கிட்டத்தட்ட ₹ 160 கோடியும், பாஜகவுக்கு ₹100 கோடியும், காங்கிரஸுக்கு ₹50 கோடியும் வழங்கியுள்ளது.

    சிக்கிமின் இரு கட்சிகளும் சேர்ந்து நிறுவனத்திடமிருந்து ₹ 10 கோடிக்கும் குறைவாகவே பெற்றுள்ளன.

    மறுபுறம், மேகா இன்ஜினியரிங் நிறுவனம்- ₹ 966 கோடியை வழங்கிய இரண்டாவது பெரிய நன்கொடையாளர், பாஜக, பாரத் ராஷ்டிர சமிதி மற்றும் திமுகவுக்கு நன்கொடை அளித்துள்ளது. குறிப்பாக பாஜகவுக்கு ₹ 584 கோடி நன்கொடை அளித்துள்ளது.

    நன்கொடை வழங்கும் மூன்றாவது பெரிய நிறுவனமான Qwik சப்ளை, ₹410 கோடி மதிப்பிலான தேர்தல் பத்திரங்களை வாங்கியுள்ளது. பாஜகவுக்கு ₹395 கோடியும், சிவசேனாவுக்கு ₹25 கோடியும் வழங்கியுள்ளது.

    பாஜக 

    அதிக நன்கொடைகளை பெற்ற கட்சி - பாஜக

    மொத்தம் ₹6000 கோடிக்கும் அதிகமான நன்கொடைகளுடன் தேர்தல் பத்திரங்கள் திட்டத்தின் மிகப்பெரிய பயனாளி பாஜக.

    ஒரே கொல்கத்தா முகவரியைக் கொண்ட மூன்று நிறுவனங்களான கெவென்டர்ஸ் ஃபுட் பார்க், எம்கேஜே எண்டர்பிரைசஸ் மற்றும் மதன்லால் லிமிடெட் ஆகியவற்றிலிருந்து கட்சி ₹346 கோடியைப் பெற்றது.

    வேடநாடா ₹226 கோடியும், ஹால்டியா எனர்ஜி ₹81 கோடியும் பங்களித்தது.

    வேதாந்தா நிறுவனமும், காங்கிரஸுக்கு ₹125 கோடி நன்கொடை அளித்துள்ளது.

    வெஸ்டர்ன் யுபி பவர் அண்ட் டிரான்ஸ்மிஷன் நிறுவனத்திடமிருந்து ₹80 கோடியும், வெல்ஸ்பனிடமிருந்து ₹42 கோடியும் நன்கொடையாக பாஜக பெற்றுள்ளது.

    தொழிலதிபர் லட்சுமி மிட்டல் பாஜகவுக்கு ₹35 கோடி நன்கொடை அளித்துள்ளார்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    தேர்தல் பத்திரங்கள்
    தேர்தல்
    மம்தா பானர்ஜி
    திரிணாமுல் காங்கிரஸ்

    சமீபத்திய

    மாணவர்கள் கவனத்திற்கு, SSLC மற்றும் பிளஸ் 1 பொதுத்தேர்வு முடிவுகள் இன்று வெளியீடு பொதுத்தேர்வு
    முதன்முறையாக, தாலிபான் வெளியுறவுத்துறை அமைச்சரிடம் பேசிய இந்தியா வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் எஸ்.ஜெய்சங்கர்
    ஜப்பானின் சகுராஜிமா எரிமலை வெடித்து, 3 கிலோமீட்டர் உயரத்திற்கு சாம்பல் புகை; காணொளி ஜப்பான்
    மே 18இல் ரிசாட் 18 செயற்கைகோளை ஏவுகிறது இஸ்ரோ; தேசிய பாதுகாப்பில் கவனம் செலுத்துவதாக உறுதி இஸ்ரோ

    தேர்தல் பத்திரங்கள்

    'வாக்களிக்கும் உரிமைக்கு தகவல் அவசியம்': தேர்தல் பத்திரத் திட்டத்தை ரத்து உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வாக்காளர்
    அரசியல் கட்சிகளால் பணமாக்கப்படாத தேர்தல் பத்திரங்கள் திரும்பப் பெறப்படும் எஸ்பிஐ
    தேர்தல் பத்திர விவரங்கள் இணையதளத்தில் பதிவேற்றம்; ரூ.1,368 கோடிக்கு பத்திரங்கள் வாங்கிய கோவை தொழிலதிபர் உச்ச நீதிமன்றம்
    தேர்தல் பத்திர எண்களை வெளியிடாத எஸ்பிஐக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ் உச்ச நீதிமன்றம்

    தேர்தல்

    திமுகவுடன் பேச்சுவார்த்தை நிறைவு: மார்க்சிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட் கட்சிகளுடன் தொகுதி பங்கீடு முடிவு திமுக
    தொகுதி பங்கீடு முடிவாகவில்லை..ஆனால் ஒரு கண்டிஷன்; மதிமுகவின் கோரிக்கை மதிமுக
    மக்களவை வேட்பாளர்களை முடிவு செய்வதற்கு பிரதமர் மோடி தலைமையில் விடிய விடிய விவாதித்த பாஜக மக்களவை
    மக்களவைத் தேர்தல்: பிரதமர் மோடி மற்றும் 34 அமைச்சர்களின் பெயர்கள் அடங்கிய பாஜகவின் முதல் வேட்பாளர் பட்டியல் வெளியீடு பாஜக

    மம்தா பானர்ஜி

    ஜனாதிபதி திரௌபதி முர்முவை நடனமாடி வரவேற்ற மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி திரிணாமுல் காங்கிரஸ்
    மம்தா பானர்ஜியை தவிர மற்ற அனைத்து மாநில முதலமைச்சர்களும் கோடீஸ்வரர்கள்  இந்தியா
    ராம நவமி வன்முறை குறித்து NIA விசாரிக்க வேண்டும்: நீதிமன்றம் உத்தரவு இந்தியா
    மம்தா பானர்ஜி பிரதமராக வேண்டும்: பாஜகவின் சுப்பிரமணியன் சுவாமி இந்தியா

    திரிணாமுல் காங்கிரஸ்

    2024 மக்களவைத் தேர்தலில் காங்கிரஸுக்கு ஆதரவளிப்போம்: மம்தா பானர்ஜி இந்தியா
    புதிய நாடாளுமன்ற திறப்பு விழாவை ஒற்றுமையாக புறக்கணிக்கும் 19 எதிர்க்கட்சிகள்  இந்தியா
    ஹெலிகாப்டர் அவசரமாக தரையிறங்கியதால் மம்தா பானர்ஜி காயம் மேற்கு வங்காளம்
    மேற்கு வங்க பஞ்சாயத்து தேர்தலால் வன்முறை: 9 பேர் பலி மேற்கு வங்காளம்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025