NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / சட்டப்பேரவையில் மதுபான விதித்திருத்தங்கள் தாக்கல் செய்தது குறித்து உயர்நீதிமன்றத்தில் தகவல் 
    அடுத்த செய்திக் கட்டுரை
    சட்டப்பேரவையில் மதுபான விதித்திருத்தங்கள் தாக்கல் செய்தது குறித்து உயர்நீதிமன்றத்தில் தகவல் 
    சட்டப்பேரவையில் மதுபான விதித்திருத்தங்கள் தாக்கல் செய்தது குறித்து உயர்நீதிமன்றத்தில் தகவல்

    சட்டப்பேரவையில் மதுபான விதித்திருத்தங்கள் தாக்கல் செய்தது குறித்து உயர்நீதிமன்றத்தில் தகவல் 

    எழுதியவர் Nivetha P
    Oct 09, 2023
    07:14 pm

    செய்தி முன்னோட்டம்

    தமிழ்நாடு மாநிலத்தில் டாஸ்மாக் கடைகள், உணவகங்கள், அதனை சார்ந்த பார்கள் ஆகியவற்றிற்கு உரிய உரிமத்துடன் மதுபான விற்பனை மற்றும் பரிமாறுதல் உள்ளிட்டவைக்கு அனுமதி வழங்கப்பட்டு வருகிறது.

    அதன்படி, கடந்த மார்ச் மாதம் தமிழக அரசு, 'எஃப்.எல்.12' என்னும் புதிய உரிமத்தினை அறிமுகம் செய்தது.

    இந்த உரிமம் மதுபானங்கள் இருப்பு, சர்வதேச மற்றும் தேசியளவில் நடக்கும் மாநாடுகள், நிகழ்ச்சிகள், திருவிழாக்கள், கொண்டாட்டங்கள் உள்ளிட்டவைகளில் பங்கேற்போருக்கு பரிமாறுவதற்காக வழங்கப்படுவதாகும்.

    பதில் 

    புதிய அரசாணை பிறப்பிப்பு 

    அதன்படி திருமண அரங்கு, கருத்தரங்கம், விருந்து அரங்குகள் உள்ளிட்டவைகளிலும் மதுபானம் இருப்பு வைத்து பரிமாற, இந்த உரிமம் அனுமதிக்கும் என்று தமிழக அரசு தெரிவித்திருந்தது.

    இதற்கு மிகப்பெரிய அளவில் எதிர்ப்புகள் கிளம்பியது.

    அதனால் திருமண அரங்குகள் போன்ற பொது இடங்களில் அனுமதி வழங்கும் இந்த உரிமம் ரத்து செய்யப்பட்டது.

    அதனைத்தொடர்ந்து, சர்வதேச விளையாட்டு நிகழ்வுகள், கருத்தரங்குகளில் மட்டும் மதுபானம் விநியோகிக்க அனுமதி வழங்கும் வகையில் புதிய அரசாணை பிறப்பிக்கப்பட்டது.

    அரசாணை 

    அரசின் அரசாணைக்கு எழுந்த எதிர்ப்பு 

    இந்த அரசாணைக்கு எதிர்ப்பு தெரிவித்து, சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞர் பாலு என்பவர் மனுதாக்கல் செய்தார்.

    இதுகுறித்த விசாரணை மேற்கொள்ளப்பட்டதில், புதிய அரசாணைக்கு இடைக்கால தடை விதிக்கப்பட்டது.

    மேலும், கடந்த முறை நடந்த விசாரணையில், சர்வதேச கருத்தரங்குகள் மற்றும் விளையாட்டு அரங்குகளில் மதுபானம் விநியோகிக்க அனுமதிக்கப்படும் விதிகளில் மேற்கொள்ளப்பட்ட திருத்தங்கள், சட்டமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டு ஒப்புதல் பெறப்பட்டதா? என்பதை தெரிவிக்குமாறு தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.

    உத்தரவு 

    இடைக்கால தடை நீட்டிப்பு 

    இந்நிலையில், இந்த வழக்கு இன்று(அக்.,9)மீண்டும் விசாரணைக்கு வந்த நிலையில், தமிழக அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் சண்முகசுந்தரம், மதுபான சட்ட திருத்த விதிகள், இன்றைய சட்டமன்ற கூட்டத்தொடரில் தாக்கல் செய்யப்பட்டதாக கூறி, நிகழ்ச்சி நிரலை சமர்ப்பித்துள்ளார்.

    இந்த வழக்கில் தாக்கல் செய்யப்பட்ட பதில்மனு, இன்று தான் வழங்கப்பட்டுள்ளதாக மனுதாரர் தரப்பு கூறிய நிலையில், இவ்வழக்கின் அடுத்த விசாரணையினை அக்.,30ம் தேதிக்கு நீதிபதிகள் ஒத்திவைத்து உத்தரவிட்டனர்.

    மேலும் சட்ட திருத்தங்கள் மீதான இடைக்கால தடையையும் நீட்டித்துள்ளனர்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    தமிழக அரசு
    உயர்நீதிமன்றம்
    டாஸ்மாக்
    தமிழ்நாடு

    சமீபத்திய

    ஜப்பானின் சகுராஜிமா எரிமலை வெடித்து, 3 கிலோமீட்டர் உயரத்திற்கு சாம்பல் புகை; காணொளி ஜப்பான்
    மே 18இல் ரிசாட் 18 செயற்கைகோளை ஏவுகிறது இஸ்ரோ; தேசிய பாதுகாப்பில் கவனம் செலுத்துவதாக உறுதி இஸ்ரோ
    2025இல் இந்தியாவிற்கு சீனாவை விட இரண்டு மடங்கு எண்ணெய் தேவைப்படும்; OPEC கணிப்பு இந்தியா
    கதறிய தாயின் வேண்டுகோளை நிராகரித்த ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாதி; வேறு வழியின்று சுட்டு வீழ்த்திய இந்திய ராணுவம் ஜம்மு காஷ்மீர்

    தமிழக அரசு

    55 ஆயிரம் அரசு பணியிடங்கள் விரைவில் நிரப்பப்படும் என சுதந்திர தின உரையில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவிப்பு மு.க.ஸ்டாலின்
    மகளிர் உரிமைத்தொகை திட்டத்திற்கு விண்ணப்பிக்க மீண்டும் வாய்ப்பு - தமிழக அரசு  மு.க ஸ்டாலின்
    திடீரென முடங்கிய தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக இணையதளம் தமிழ்நாடு
    முதல்வர் ஸ்டாலின் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்தவர் கைது  தமிழ்நாடு

    உயர்நீதிமன்றம்

    மரணதண்டனை மனு விசாரணை: யாசின் மாலிக்கை ஒசாமா பின்லேடனுடன் ஒப்பிட்ட NIA இந்தியா
    ஆடல் பாடல் நிகழ்ச்சிகளுக்கு புதிய உத்தரவு பிறப்பிக்க தேவையில்லை - மதுரை உயர்நீதிமன்றம் தமிழ்நாடு
    சடலங்களுடன் உடலுறவு கொள்வதற்கு எதிராக சட்டம் இயற்றப்பட வேண்டும்: உயர்நீதிமன்றம் இந்தியா
    வனப் பாதுகாப்பு மசோதா தமிழ் மொழியில் வெளியிடப்படும்: மத்திய அரசு  இந்தியா

    டாஸ்மாக்

    500 டாஸ்மாக் மதுபான கடைகள் விரைவில் மூடப்படும்: அமைச்சர் செந்தில் பாலாஜி மது
    தமிழகத்தில் 500 சில்லறை மதுபான கடைகள் மூடப்படும் - டாஸ்மாக் நிர்வாகம்  தமிழ்நாடு
    டெட்ரா பாக்கெட்டில் மது விற்பனை - அமைச்சர் முத்துசாமி விளக்கம்  தமிழ்நாடு
    நிர்ணயம் செய்த விலையினை விட கூடுதலாக வசூலித்தால் சஸ்பெண்ட் - டாஸ்மாக் நிர்வாகம்  தமிழ்நாடு

    தமிழ்நாடு

    வாச்சாத்தி வன்கொடுமை வழக்கின் மேல்முறையீடு மீதான தீர்ப்பு வெளியானது  சென்னை உயர் நீதிமன்றம்
    வறிய நிலையிலுள்ள 10 கலைமாமணி விருதாளர்களுக்கு பொற்கிழி  மு.க ஸ்டாலின்
    காவிரி மேலாண்மை ஆணையக்கூட்டத்தில் கடும் வாக்குவாதம் - 3,000 கனஅடி நீர் திறக்க உத்தரவு காவிரி
    தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் பரவல் தடுப்பு நடவடிக்கை தீவிரம்  டெங்கு காய்ச்சல்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025