NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / பெங்களூரு ஒயிட்ஃபீல்டு பகுதிக்குள் நுழைந்த சிறுத்தை: மக்கள் பாதுகாப்பாக இருக்குமாறு அறிவுறுத்தல் 
    அடுத்த செய்திக் கட்டுரை
    பெங்களூரு ஒயிட்ஃபீல்டு பகுதிக்குள் நுழைந்த சிறுத்தை: மக்கள் பாதுகாப்பாக இருக்குமாறு அறிவுறுத்தல் 
    , வனத்துறையினர் அந்த சிறுத்தையை தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

    பெங்களூரு ஒயிட்ஃபீல்டு பகுதிக்குள் நுழைந்த சிறுத்தை: மக்கள் பாதுகாப்பாக இருக்குமாறு அறிவுறுத்தல் 

    எழுதியவர் Sindhuja SM
    Oct 30, 2023
    05:00 pm

    செய்தி முன்னோட்டம்

    பெங்களூரு ஒயிட்ஃபீல்டு பகுதியில் உள்ள எம்.எஸ்.தோனி சர்வதேச பள்ளிக்கு அருகே நேற்று சிறுத்தைப்புலி காணப்பட்டதையடுத்து, அங்கு வசிப்பவர்கள் வீட்டுக்குள்ளேயே இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

    குழந்தைகளுக்கான அனைத்து பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் எடுக்குமாறு அந்த பள்ளி பெற்றோருக்கு மின்னஞ்சல் அனுப்பியுள்ளது.

    "சிங்கசந்திரா பகுதியில் சிறுத்தைப்புலி ஒன்று காணப்பட்டது எங்கள் கவனத்திற்கு வந்துள்ளது. ஆனால் சமீபத்திய தகவலின்படி, அந்த சிறுத்தை வெகுதூரம் நகர்ந்து ஜிபி பாளையம் அருகே காணப்பட்டதாக கூறப்படுகிறது. மேலும் வனத்துறையினர் சிறுத்தையைப் பிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். பள்ளி வளாகத்திற்குள் கூடுதல் பாதுகாப்பு நடவடிக்கைகளை அமல்படுத்தியுள்ளோம்," என்று அந்த மின்னஞ்சலில் கூறப்பட்டுள்ளது.

    நேற்று இந்த சிறுத்தை எலக்ட்ரானிக் சிட்டி, AECS லேஅவுட், சிங்கசந்திரா போன்ற இடங்களில் காணப்பட்டதாக கூறப்படுகிறது.

    டிவ்ஜ்க

    'மக்கள் எச்சரிக்கையுடன் இருக்குமாறு அறிவுறுத்தியுள்ளோம்': வனத்துறை துணைப் பாதுகாவலர்

    "எங்கள் பாதுகாப்புக் குழு மிகுந்த விழிப்புடன் உள்ளது. அப்பகுதியை உன்னிப்பாக நாங்கள் கண்காணித்து வருகிறோம். உங்கள் குழந்தைகளுக்கான பாதுகாப்பு நடவடிக்கைகளை வலுப்படுத்துவதில் உங்கள் ஒத்துழைப்பை நாங்கள் தயவுசெய்து கேட்டுக்கொள்கிறோம்" என்று அந்த மின்னஞ்சலில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இதற்கிடையில், வனத்துறையினர் மற்றும் போலீசார் அடங்கிய கூட்டுப் பிரிவினர் அந்த சிறுத்தையை தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

    "மக்கள் பீதி அடையத் தேவையில்லை. நேற்றிரவு(சனிக்கிழமை) ஒரு குழுவை அங்கு அனுப்பியிருந்தோம். இன்றும்(ஞாயிற்றுக்கிழமை) ஒரு குழு அங்கு குவிக்கப்பட்டுள்ளது. சிறுத்தைப்புலி இருப்பதற்கான எந்த அறிகுறியும் இல்லை. எனினும், நாங்கள் தொடர்ந்து கண்காணித்து வருகிறோம். மேலும், மக்கள் எச்சரிக்கையுடன் இருக்குமாறு அறிவுறுத்தியுள்ளோம்" என்று பெங்களூரு நகர்ப்புற வனத்துறை துணைப் பாதுகாவலர் என் ரவீந்திர குமார் கூறியுள்ளார்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    பெங்களூர்
    காவல்துறை
    காவல்துறை
    வனத்துறை

    சமீபத்திய

    இனியும் வெளிநாடுகளிடம் பிச்சை எடுக்க முடியாது; ராணுவ வீரர்கள் மத்தியில் பேசிய பாகிஸ்தான் பிரதமர் பாகிஸ்தான்
    கருக்கலைப்பு மாத்திரையைக் கண்டுபிடித்த எட்டியென்-எமிலி பவுலியூ 98 வயதில் காலமானார் பிரான்ஸ்
    ஐபிஎல் 2025 எம்ஐvsபிபிகேஎஸ்: டாஸ் வென்றது பிபிகேஎஸ்; மும்பை இந்தியன்ஸ் முதலில் பேட்டிங் ஐபிஎல் 2025
    ரஷ்ய விமான தளங்களை குறிவைத்து உக்ரைன் ட்ரோன் தாக்குதல்; விமானங்களுக்கு சேதம் என தகவல் உக்ரைன்

    பெங்களூர்

    ஜெயலலிதா சொத்துக்குவிப்பு வழக்கு: உரிமை கோரிய தீபா மற்றும் தீபக் மனு தள்ளுபடி  ஜெயலலிதா
    பெங்களூருவில் அமைக்கப்பட்ட நத்திங் பாப்-அப் ஸ்டோரில் திரண்ட வாடிக்கையாளர்கள் ஸ்மார்ட்போன்
    இன்று தொடங்குகிறது பாஜகவுக்கு எதிரான மாபெரும் எதிர்க்கட்சிகள் கூட்டம் எதிர்க்கட்சிகள்
    கேரளா முன்னாள் முதலமைச்சர் உம்மன் சாண்டி உடல்நலக்குறைவால் காலமானார் கேரளா

    காவல்துறை

    மணிப்பூரில் மீண்டும் வன்முறை வெடித்தது- இரண்டு வீடுகளுக்கு தீ வைக்கப்பட்டது மணிப்பூர்
    சிக்கிம் வெள்ளம்- டீஸ்டா நதியில் அடித்துச் செல்லப்பட்ட ஆயுதங்கள் சிக்கிம்
    பெங்களுருவில் ரூ.10 லட்சம் மதிப்புடைய பேருந்து நிறுத்த நிழற்குடை மாயம்! பெங்களூர்
    நாகை மீனவர்கள் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் மீண்டும் தாக்குதல் இந்தியா

    காவல்துறை

    ஜிப்மர் மருத்துவமனை பெண் ஊழியர் கொலை வழக்கில் புதிய திருப்பம் - க்ரைம் ஸ்டோரி  க்ரைம் ஸ்டோரி
    மண்ணுக்குள் மறைத்துவைக்கப்பட்ட 1180 மதுபாட்டில்கள் பறிமுதல் - 9 பேர் கைது கடத்தல்
    கோவை ஆயுதப்படை காவலர்களுக்கு தோள்பட்டை கேமரா - மாநகர காவல் ஆணையர்  கோவை
    லதா ரஜினிகாந்த் மீதான மோசடி வழக்கு - மீண்டும் விசாரிக்க உச்சநீதிமன்றம் அனுமதி  ரஜினிகாந்த்

    வனத்துறை

    அரிக்கொம்பன் காட்டு யானை தாக்கியதில் உயிரிழந்த பால்ராஜ் குடும்பத்திற்கு ₹5 லட்சம் நிவாரணம்!  தமிழ்நாடு
    சதுரகிரி மலைக்கு பக்தர்கள் செல்ல நாளை முதல் 4 நாட்களுக்கு அனுமதி விருதுநகர்
    நீண்ட போராட்டத்திற்கு பிறகு பிடிபட்டது அரிக்கொம்பன் யானை! தமிழ்நாடு
    அரிக்கொம்பன் யானை, களகாடு வனப்பகுதிக்கு அழைத்து செல்லப்படுகிறது  இந்தியா
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025