NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / மணிப்பூரில் வன்முறை: கூட்டங்களுக்கும் இணையாளத்திற்கும் தடை விதிக்கப்பட்டது 
    அடுத்த செய்திக் கட்டுரை
    மணிப்பூரில் வன்முறை: கூட்டங்களுக்கும் இணையாளத்திற்கும் தடை விதிக்கப்பட்டது 
    பூர்வீக பழங்குடியின தலைவர்கள் மன்றம் பணிநிறுத்தத்திற்கு அழைப்பு விடுத்திருக்கிறது.

    மணிப்பூரில் வன்முறை: கூட்டங்களுக்கும் இணையாளத்திற்கும் தடை விதிக்கப்பட்டது 

    எழுதியவர் Sindhuja SM
    Apr 28, 2023
    11:15 am

    செய்தி முன்னோட்டம்

    மணிப்பூரின் சுராசந்த்பூர் மாவட்டத்திற்கு அம்மாநில முதலமைச்சர் என்.பிரேன் சிங் இன்று(ஏப் 28) வருகை தர இருந்த நிலையில், நேற்று அங்கு வன்முறை வெடித்தது.

    இதனால், அங்கு கூட்டங்கள் சேர்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும், மொபைல் இணைய சேவைகள் நிறுத்தப்பட்டுள்ளன.

    நேற்று, பாதுகாக்கப்பட்ட காடுகள் மற்றும் சதுப்பு நிலங்கள் போன்ற பகுதிகளை கணக்கெடுப்பதாகக் கூறிய ஒரு கும்பல் முதல்வர் கலந்துகொள்ளும் நிகழ்ச்சியின் இடத்தை நாசப்படுத்தி, தீ வைத்து எரித்தது.

    இதனையடுத்து, பொது அமைதிக்கு இடையூறு ஏற்பட வாய்ப்பிருப்பதாலும் மனித உயிர்களுக்கும் சொத்துக்களுக்கும் ஆபத்து ஏற்பட வாய்ப்பிருப்பதாலும், பெரிய கூட்டங்களுக்கு தடை விதிக்க முடிவு எடுக்கப்பட்டது.

    சுராசந்த்பூர் மாவட்ட கூடுதல் மாவட்ட மாஜிஸ்திரேட் எஸ்.தியென்லட்ஜோய் காங்டே தனது அறிக்கையில் இதை தெரிவித்துள்ளார்.

    details

    இன்று காலை 8 மணி முதல் மாலை 4 மணி வரை மாவட்டத்தில் பந்த் அறிவிப்பு 

    மேலும், இதனால், பூர்வீக பழங்குடியின தலைவர்கள் மன்றம் பணிநிறுத்தத்திற்கு அழைப்பு விடுத்திருக்கிறது.

    சமூக வலைதளங்கள் மூலம் பொதுமக்களை அணிதிரட்டுவதற்கான சாத்தியக்கூறுகள் இருப்பதால் சுராசந்த்பூர் மாவட்டத்தில் இணைய சேவைகள் துண்டிக்கப்பட்டுள்ளது.

    அம்மாநில முதல்வர் இன்று அந்த மாவட்டத்தில் ஒரு உடற்பயிற்சி கூடம் மற்றும் விளையாட்டு வசதியை திறந்து வைக்க திட்டமிட்டிருந்தார்.

    சம்பவத்தின் போது எடுக்கப்பட்ட வீடியோவில், ஒரு குழு நாற்காலிகளையும் விளையாட்டு உபகரணங்களையும் சேதப்படுத்துவது தெரிந்தது. மேலும், அவர்கள் நிகழ்ச்சி நடைபெறும் மைதானத்துக்கும் தீ வைத்தனர்.

    பாதுகாக்கப்பட்ட காடுகள் மற்றும் சதுப்பு நிலங்கள் கணக்கெடுப்புக்கு எதிர்ப்பு தெரிவித்திருந்த பழங்குடியின தலைவர்கள் மன்றம் இன்று காலை 8 மணி முதல் மாலை 4 மணி வரை மாவட்டத்தில் பந்த் நடத்துகிறது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    இந்தியா

    சமீபத்திய

    சிம்லாவில் சோனியா காந்தி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் சோனியா காந்தி
    இந்திய பணியாளர்களுக்கு பலனளிக்கும் அம்சம்; ஐக்கிய அரபு எமிரேட்ஸில் வெளிநாட்டு பணியமர்த்தலுக்கு புதிய வசதி ஐக்கிய அரபு எமிரேட்ஸ்
    பயங்கரவாதத்திற்கு எதிராக பூஜ்ஜிய சகிப்புத் தன்மை; பிரிட்டனிடம் உறுதிபடத் தெரிவித்த வெளியுறவு அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் எஸ்.ஜெய்சங்கர்
    சுற்றுப்பாதை விண்வெளி நிலையத்தில் இருந்து டிரோன்களை ஏவும் தொழில்நுட்பத்திற்கு காப்புரிமை பெற்றது ரஷ்யா ரஷ்யா

    இந்தியா

    ஆபரேஷன் காவேரி: சூடானில் இருந்து 278 இந்தியர்கள் மீட்பு  சூடான்
    உலக கோப்பை வில்வித்தை போட்டியில் நான்கு பதக்கங்களை கைப்பற்றிய இந்தியா உலக கோப்பை
    மதுபானக் கொள்கை வழக்கு: மணீஷ் சிசோடியாவின் பெயர் சிபிஐ குற்றப்பத்திரிகையில் சேர்க்கப்பட்டது ஆம் ஆத்மி
    இந்தியாவின் முதல் கிராமமானது உத்தரகாண்டின் 'மனா' உத்தரகாண்ட்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025