NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / மகாராஷ்டிராவில் அவதூறு வழக்கு; சென்னை உயர் நீதிமன்றத்தில் எப்படி முன்ஜாமீன் பெற்றார் குணால் கம்ரா?
    அடுத்த செய்திக் கட்டுரை
    மகாராஷ்டிராவில் அவதூறு வழக்கு; சென்னை உயர் நீதிமன்றத்தில் எப்படி முன்ஜாமீன் பெற்றார் குணால் கம்ரா?
    மகாராஷ்டிராவில் வழக்கு; சென்னை உயர்நீதிமன்றத்தில் முன்ஜாமீன் பெற்றார் குணால் கம்ரா

    மகாராஷ்டிராவில் அவதூறு வழக்கு; சென்னை உயர் நீதிமன்றத்தில் எப்படி முன்ஜாமீன் பெற்றார் குணால் கம்ரா?

    எழுதியவர் Sekar Chinnappan
    Mar 28, 2025
    05:54 pm

    செய்தி முன்னோட்டம்

    மகாராஷ்டிரா துணை முதல்வர் ஏக்நாத் ஷிண்டேவிற்கு எதிரான கருத்துகள் தொடர்பாக மகாராஷ்டிராவில் பல எஃப்ஐஆர்கள் பதிவு செய்யப்பட்டதை அடுத்து, ஸ்டாண்ட் அப் காமெடியன் குணால் கம்ரா சென்னை உயர் நீதிமன்றத்தில் முன்ஜாமீன் பெற்றுள்ளார்.

    முன்னதாக, யாருடைய பெயரையும் நேரடியாக குறிப்பிடாமல் துரோகி என்று பொருள்படும் வகையில் குணால் கம்ரா வெளியிட்ட பகடி பாடல், மகாராஷ்டிரா துணை முதல்வர் ஏக்நாத் ஷிண்டேவின் ஆதரவாளர்களை கோபப்படுத்தியது.

    இதையடுத்து மும்பையில் உள்ள கம்ரா நிகழ்ச்சி நடத்திய ஹேபிடட் ஸ்டுடியோவை சிவசேனா தொண்டர்கள் சேதப்படுத்தியதால், அது மூடப்பட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.

    மேலும், சிவசேனா கட்சியினர் வழங்கிய புகார்களின் அடிப்படையில் பல்வேறு எஃப்ஐஆர்கள் மகாராஷ்டிராவில் போடப்பட்டுள்ளன.

    சென்னை

    சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல்

    மும்பை காவல்துறை அவரை கைது செய்ய தீவிரம் காட்டி வரும் நிலையில், அவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் கைதாவதில் இருந்து தப்பிக்க முன்ஜாமீன் மனுவை வெள்ளிக்கிழமை (மார்ச் 28) தாக்கல் செய்தார்.

    தமிழ்நாட்டின் விழுப்புரத்தைச் சேர்ந்தவர் என தன்னைக் கூறிக்கொண்ட குணால் கம்ரா, இதனால், தனது வழக்கை விசாரிக்க சென்னை உயர் நீதிமன்றத்திற்கு அதிகார வரம்பு இருப்பதாக தெரிவித்தார்.

    இது அவசர வழக்காக நீதிபதி சுந்தர் மோகன் முன்னிலையில் விசாரணைக்கு வந்த நிலையில், குணால் கம்ராவை கைது செய்து கொண்டு செல்வதற்கு ஏப்ரல் 7ஆம் தேதி வரை இடைக்கால தடை விதித்து உத்தரவு பிறப்பித்துள்ளார்.

    இதற்கிடையே, ஏக்நாத் ஷிண்டே தனது கட்சியினரின் வன்முறையை கண்டித்ததோடு, கம்ராவின் செயலும் சரியல்ல என்று அவரையும் விமர்சித்துள்ளார்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    சென்னை உயர் நீதிமன்றம்
    மகாராஷ்டிரா
    காவல்துறை
    காவல்துறை

    சமீபத்திய

    ஜப்பானின் சகுராஜிமா எரிமலை வெடித்து, 3 கிலோமீட்டர் உயரத்திற்கு சாம்பல் புகை; காணொளி ஜப்பான்
    மே 18இல் ரிசாட் 18 செயற்கைகோளை ஏவுகிறது இஸ்ரோ; தேசிய பாதுகாப்பில் கவனம் செலுத்துவதாக உறுதி இஸ்ரோ
    2025இல் இந்தியாவிற்கு சீனாவை விட இரண்டு மடங்கு எண்ணெய் தேவைப்படும்; OPEC கணிப்பு இந்தியா
    கதறிய தாயின் வேண்டுகோளை நிராகரித்த ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாதி; வேறு வழியின்று சுட்டு வீழ்த்திய இந்திய ராணுவம் ஜம்மு காஷ்மீர்

    சென்னை உயர் நீதிமன்றம்

    செந்தில் பாலாஜி ஜாமீன் வழக்கு: சிறப்பு நீதிமன்றத்திற்கு பறந்த உத்தரவு செந்தில் பாலாஜி
    ஸ்டெர்லைட் ஆலையை திறக்க கோரிய வேதாந்த நிறுவனத்தின் மனுவை தள்ளுபடி செய்தது உச்ச நீதிமன்றம் ஸ்டெர்லைட் ஆலை
    பணிப்பெண் சித்ரவதை வழக்கு: திமுக எம்எல்ஏ மகன், மருமகளுக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கியது உயர்நீதிமன்றம் திமுக
    சனாதன தர்மம் சர்ச்சை: உதயநிதி, சேகர் பாபுவை பதவி நீக்கம் செய்ய தேவையில்லையென உயர் நீதிமன்றம் கருத்து சனாதன தர்மம்

    மகாராஷ்டிரா

    நவி மும்பையில் 3 மாடி கட்டிடம் இடிந்து விழுந்தது: பலர் சிக்கியிருக்கலாம் என தகவல்  இந்தியா
    மகாராஷ்டிராவில் மணிப்பூர் போன்ற சூழல் சாத்தியம்...: சரத் பவார்  இந்தியா
    மகாராஷ்டிராவில் செல்ஃபி எடுக்கப் போய் பள்ளத்தில் விழுந்த இளம் பெண் போராடி மீட்பு வைரல் செய்தி
    மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு ரூ.5,000 கோடி கடன் வழங்கினார் பிரதமர் மோடி பிரதமர் மோடி

    காவல்துறை

    "அரசின் அலட்சியத்தை காட்டுகிறது": கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய இறப்புகள் குறித்து TVK தலைவர் விஜய் கண்டனம் தமிழக வெற்றி கழகம்
    மேற்கு வங்காளத்தில் ஒரு பெண்ணை சரமாரியாக அடித்த அரசியல்வாதி: அடித்தவரை விட்டுவிட்டு வீடியோ பதிவு செய்தவர் மீது பாதிக்கப்பட்ட பெண் புகார்  மேற்கு வங்காளம்
    ஆர்ம்ஸ்ட்ராங் கொலை எதிரொலி, அதிரடியாக மாற்றப்பட்ட சென்னை காவல் ஆணையர் காவல்துறை
    உத்தரபிரதேசத்தில் வேகமாக வந்த பேருந்து, பால் டேங்கர் மீது மோதியதில் 18 பேர் உயிரிழப்பு விபத்து

    காவல்துறை

    முன்னாள் அதிமுக அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கருக்கு வரும் 31ஆம் தேதி வரை நீதிமன்ற காவல் அதிமுக
    துப்பாக்கி கொண்டு மிரட்டியதற்காக, தலைமறைவாக இருந்த பயிற்சி ஐஏஎஸ் பூஜா கேத்கரின் தாய் கைது கைது
    கட்சியால் வேறுபட்டிருந்தாலும், பழிவாங்கும் எண்ணத்தோடு ஒன்றுபட்ட எதிரிகள்? ஆர்ம்ஸ்ட்ராங் கொலை வழக்கில்  திருப்பம் கொலை
    டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலின் காவல் ஆகஸ்ட் 8 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது  அரவிந்த் கெஜ்ரிவால்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025