NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / மருத்துவர்களின் 24 மணிநேர நாடு தழுவிய வேலைநிறுத்தம் தொடங்கியது; தமிழ்நாட்டிலும் போராட்டம்
    அடுத்த செய்திக் கட்டுரை
    மருத்துவர்களின் 24 மணிநேர நாடு தழுவிய வேலைநிறுத்தம் தொடங்கியது; தமிழ்நாட்டிலும் போராட்டம்
    மருத்துவர்கள் நாடுதழுவிய வேலைநிறுத்தம்

    மருத்துவர்களின் 24 மணிநேர நாடு தழுவிய வேலைநிறுத்தம் தொடங்கியது; தமிழ்நாட்டிலும் போராட்டம்

    எழுதியவர் Sekar Chinnappan
    Aug 17, 2024
    07:37 am

    செய்தி முன்னோட்டம்

    கொல்கத்தாவில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரியில் பெண் பயிற்சி மருத்துவர் கற்பழிக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட விவகாரம் தொடர்பாக இந்தியா முழுவதும் மருத்துவர்கள் 24 மணி நேர வேலைநிறுத்தப் போராட்டத்தைத் தொடங்கியுள்ளனர்.

    மருத்துவர்கள், செவிலியர்கள் உள்ளிட்ட மருத்துவத் துறை ஊழியர்கள் பலரும் இந்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதால், நாடு முழுவதும் மருத்துவ சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளன.

    இந்த போராட்டத்தின்போது மருத்துவமனைகளில் வழக்கமான வெளிநோயாளி பிரிவுகள் எதுவும் செயல்படாது. மேலும் முன்கூட்டியே திட்டமிடப்பட்ட அறுவை சிகிச்சைகளும் நடத்தப்படாது.

    விபத்து மற்றும் பிற அத்தியாவசிய சேவைகள் மட்டும் பராமரிக்கப்படும் என்று போராட்டத்தை வழிநடத்தும் இந்திய மருத்துவ சங்கம் தெரிவித்துள்ளது. தமிழ்நாட்டிலும் மருத்துவர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி இந்தப் போராட்டத்தில் பங்கேற்று வருவது குறிப்பிடத்தக்கது.

    கோரிக்கை

    இந்திய மருத்துவ சங்கத்தின் ஐந்தம்ச கோரிக்கை

    இந்திய மருத்துவ சங்கம் இந்த போராட்டத்தின் ஒரு பகுதியாக ஐந்து கோரிக்கைகளை முன்வைத்துள்ளது. 36 மணி நேர பணி ஷிப்ட் உட்பட, ரெசிடெண்ட் மருத்துவர்களின் பணி மற்றும் வாழ்க்கை நிலைமைகள் பற்றிய முழுமையான மறுசீரமைப்பு இதில் அடங்கும்.

    முதல் கட்டமாக கட்டாய பாதுகாப்பு உரிமைகளுடன் மருத்துவமனைகளை பாதுகாப்பான மண்டலங்களாக அறிவிக்க வேண்டும் என்றும் கோரியுள்ளது.

    ஒரு குறிப்பிட்ட காலக்கெடுவில் கற்பழிப்பு-கொலையை உன்னிப்பாகவும் தொழில் ரீதியாகவும் விசாரித்து நீதி வழங்க வேண்டும் என்றும் மருத்துவர்களின் அமைப்பு கேட்டுக் கொண்டது.

    மருத்துவமனை வளாகத்தை நாசப்படுத்தியவர்களை அடையாளம் கண்டு முன்மாதிரியான தண்டனை வழங்கவும் வலியுறுத்தியுள்ளது.

    மேலும், பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு இழைக்கப்பட்ட கொடுமைக்கு ஏற்ப உரிய மற்றும் கண்ணியமான இழப்பீடு வழங்குமாறும் கோரிக்கை விடுத்துள்ளது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    இந்தியா
    வேலைநிறுத்தம்
    போராட்டம்
    கொல்கத்தா

    சமீபத்திய

    ஜப்பானின் சகுராஜிமா எரிமலை வெடித்து, 3 கிலோமீட்டர் உயரத்திற்கு சாம்பல் புகை; காணொளி ஜப்பான்
    மே 18இல் ரிசாட் 18 செயற்கைகோளை ஏவுகிறது இஸ்ரோ; தேசிய பாதுகாப்பில் கவனம் செலுத்துவதாக உறுதி இஸ்ரோ
    2025இல் இந்தியாவிற்கு சீனாவை விட இரண்டு மடங்கு எண்ணெய் தேவைப்படும்; OPEC கணிப்பு இந்தியா
    கதறிய தாயின் வேண்டுகோளை நிராகரித்த ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாதி; வேறு வழியின்று சுட்டு வீழ்த்திய இந்திய ராணுவம் ஜம்மு காஷ்மீர்

    இந்தியா

    2024 ஜூலையில் 8 சதவீதம் வளர்ச்சி கண்ட சுசுகி மோட்டார் சைக்கிள் இந்தியா நிறுவனம் இரு சக்கர வாகனம்
    'எச்சரிக்கையுடன் செயல்படுங்கள்': இங்கிலாந்து கலவரங்களுக்கு மத்தியில் இந்தியா பயண ஆலோசனையை வெளியிட்டது இங்கிலாந்து
    இந்தியாவின் 2025 ஹஜ் கொள்கை: ஒதுக்கீட்டில் மாற்றங்கள், முதியோருக்கான முன்னுரிமை ஹஜ்
    ரெப்போ வட்டி விகிதத்தில் ஒன்பதாவது முறையாக மாற்றமில்லை; ரிசர்வ் வங்கி அறிவிப்பு ஆர்பிஐ

    வேலைநிறுத்தம்

    ஹைதராபாத்தில் குதிரையில் உணவு விநியோகம் செய்த ஸோமாட்டோ ஊழியர்- வைரல் வீடியோ சோமாட்டோ
    ஜனவரி 9ம் தேதி முதல் வேலைநிறுத்தம்- அறிவிப்பை வெளியிட்ட போக்குவரத்து தொழிற்சங்கங்கள் தமிழ்நாடு
    போக்குவரத்து ஊழியர்கள் ஸ்ட்ரைக்: நாளை பேருந்துகள் இயங்கும் என அமைச்சர் உறுதி போக்குவரத்து
    பஸ் ஸ்ட்ரைக்: மதுரை தவிர மற்ற ஊர்களில் பேருந்துகள் வழக்கம்போல இயக்கம் போக்குவரத்து

    போராட்டம்

    100 நாள் வேலை திட்ட கூலி தொழிலாளர்களுக்கு 3 மாத ஊதிய நிலுவை - காரணம் என்ன? தமிழ்நாடு
    பாலஸ்தீன மக்களுக்கு ஆதரவு தெரிவித்து பெங்களூரில் பெரும் போராட்டம்  பெங்களூர்
    தொடரும் ஓலா, ஊபர் போராட்டம்; பாதுகாப்பு கோரும் ராப்பிடோ ஓட்டுனர்கள் ஓலா
    சிவகாசி பட்டாசு விபத்து - உடல்களை வாங்க மறுத்து போராட்டத்தில் ஈடுபடும் உறவினர்கள்  விருதுநகர்

    கொல்கத்தா

    கொல்கத்தாவில் சுற்றுலாவாசிகளை கவரும் டாப் 5 ஜமீன்தார் மாளிகைகள் சுற்றுலா
    வைரல் வீடியோ: ஜங்கிள் சஃபாரியின் போது கவிழ்ந்த ஜீப் இந்தியா
    சென்னை மற்றும் கொல்கத்தாவில் கடல்மட்டம் உயரும் அபாயம் தமிழ்நாடு
    இண்டிகோ விமானத்தில் புகைபிடித்த இளம்பெண் கைது விமானம்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025