NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / டிசம்பர் 13 அல்லது அதற்கு முன் நாடாளுமன்றத்தைத் தாக்குவோம்': காலிஸ்தான் தீவிரவாதி பன்னுனின் புதிய மிரட்டல்
    அடுத்த செய்திக் கட்டுரை
    டிசம்பர் 13 அல்லது அதற்கு முன் நாடாளுமன்றத்தைத் தாக்குவோம்': காலிஸ்தான் தீவிரவாதி பன்னுனின் புதிய மிரட்டல்
    காலிஸ்தான் தீவிரவாதி பன்னுனின் புதிய மிரட்டல் pc: indiatoday

    டிசம்பர் 13 அல்லது அதற்கு முன் நாடாளுமன்றத்தைத் தாக்குவோம்': காலிஸ்தான் தீவிரவாதி பன்னுனின் புதிய மிரட்டல்

    எழுதியவர் Venkatalakshmi V
    Dec 06, 2023
    10:14 am

    செய்தி முன்னோட்டம்

    இந்தியா டுடே செய்திப்படி, காலிஸ்தானி பயங்கரவாதி குர்பத்வந்த் சிங் பன்னூன் சமீபத்தில் ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார்.

    அதில், தன்னைக் கொல்லும் சதி முறியடிக்கப்பட்டதாகக் கூறப்பட்டதைத் தொடர்ந்து, டிசம்பர் 13 அல்லது அதற்கு முன், இந்திய நாடாளுமன்றத்தைத் தாக்குவேன் என்று கூறியுள்ளார்.

    2001-ம் ஆண்டு பாராளுமன்றத்தில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலின் 22-வது ஆண்டு நினைவு தினம் டிசம்பர் 13-ம் தேதி என்பது குறிப்பிடத்தக்கது.

    அதே வீடியோவில், 2001 ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தாக்குதல் குற்றவாளி அப்சல் குருவின் சுவரொட்டி இடம்பெற்றிருந்தது.

    அதில், ' டெல்லி பனேகா காலிஸ்தான் ' (டெல்லி காலிஸ்தானாக மாறும்) என்ற தலைப்பிடப்பட்டிருந்ததும் குறிப்பிடத்தக்கது.

    இந்நிலையில், திங்கள்கிழமை தொடங்கிய நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர், வரும் டிசம்பர் 22ஆம் தேதி வரை நடைபெறும்.

    card 2

    பாகிஸ்தானின் ஐஎஸ்ஐ உடன் பன்னுன் கூட்டா?

    பன்னூனின் மிரட்டல் வீடியோ வெளியானதையடுத்து, பாதுகாப்பு அமைப்புகள் உஷார் நிலையில் உள்ளன.

    இந்தியா டுடே வெளியிட்டுள்ள செய்தி படி, பாகிஸ்தானின் புலனாய்வு அமைப்பான ஐஎஸ்ஐயின் கே-2 (காஷ்மீர்-காலிஸ்தான்) மேசை, இந்தியாவுக்கு எதிரான செய்திகளை பரப்புவதற்கான அவர்களின் நிகழ்ச்சி நிரலை, பன்னுனுக்கு வழங்கியதாக தெரிவித்தன.

    கடந்த மாதம், தி பைனான்சியல் டைம்ஸ், பெயரிடப்படாத ஆதாரங்களை மேற்கோள் காட்டி, அமெரிக்க அதிகாரிகள், பண்ணுனைக் கொல்லும் சதித்திட்டத்தை முறியடித்ததாகவும், சதியில் இந்தியா ஏஜெண்டுகள் ஈடுபட்டிருக்கக்கூடும் என்ற சந்தேகங்களை தொடர்ந்து, இந்திய அரசாங்கத்திற்கு எச்சரிக்கை விடுத்ததாகவும் தெரிவித்தது.

    பன்னூன், இந்தியாவில் தடைசெய்யப்பட்ட, இந்திய புலனாய்வு அமைப்புகளால் தேடப்படும் அமெரிக்காவைச் சேர்ந்த நீதிக்கான சீக்கியர்களின் (SFJ) தலைவர் ஆவார்.

    card 3

    பன்னுனின் கொலை சதி திட்டத்தில் நடந்தது என்ன?

    அமெரிக்காவின் அறிக்கைபடி, 52 வயதான இந்திய வம்சாவளி நிகில் குப்தா, பன்னுனைக் கொல்லும் சதித்திட்டத்தில் இந்திய அரசு ஊழியருடன் இணைந்து பணியாற்றியதாக அமெரிக்க பெடரல் வழக்கறிஞர்கள் குற்றம் சாட்டினர்.

    செக் குடியரசில், அதிகாரிகள் குப்தாவை கைது செய்து காவலில் வைத்துள்ளதாக மன்ஹாட்டன் நீதிமன்றத்தில் அமெரிக்க வழக்கறிஞர்கள் தெரிவித்தனர்.

    நீதிமன்ற ஆவணங்களை மேற்கோள்காட்டி அமெரிக்க நீதித்துறை வெளியிட்ட செய்திக்குறிப்பு, இந்த ஆண்டின் தொடக்கத்தில், "இந்தியாவில் மற்றும் பிற இடங்களில் குப்தா உட்பட மற்றவர்களுடன் இணைந்து பணியாற்றிய இந்திய அரசு ஊழியர் ஒருவர், அமெரிக்க மண்ணில் ஒரு வழக்கறிஞரையும், அரசியல் ரீதியாகவும் படுகொலை செய்ய சதித்திட்டம் தீட்டினார். குப்தா, நியூயார்க் நகரில் வசிக்கும் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த அமெரிக்க குடியுரிமை பெற்ற ஆர்வலர்".

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    காலிஸ்தான் ஆதரவாளர்கள்
    நாடாளுமன்றம்
    தீவிரவாதிகள்
    தீவிரவாதம்

    சமீபத்திய

    ஜப்பானின் சகுராஜிமா எரிமலை வெடித்து, 3 கிலோமீட்டர் உயரத்திற்கு சாம்பல் புகை; காணொளி ஜப்பான்
    மே 18இல் ரிசாட் 18 செயற்கைகோளை ஏவுகிறது இஸ்ரோ; தேசிய பாதுகாப்பில் கவனம் செலுத்துவதாக உறுதி இஸ்ரோ
    2025இல் இந்தியாவிற்கு சீனாவை விட இரண்டு மடங்கு எண்ணெய் தேவைப்படும்; OPEC கணிப்பு இந்தியா
    கதறிய தாயின் வேண்டுகோளை நிராகரித்த ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாதி; வேறு வழியின்று சுட்டு வீழ்த்திய இந்திய ராணுவம் ஜம்மு காஷ்மீர்

    காலிஸ்தான் ஆதரவாளர்கள்

    காலிஸ்தான் இயக்கம்: கனடா-இந்தியா நட்பின் விரிசலுக்கு காரணமான இந்த இயக்கத்தின் பின்னணி என்ன? இந்தியா
    கனடாவில் மேலும் ஒரு காலிஸ்தான் தீவிரவாதி சுட்டுக்கொலை கனடா
    சுகா துனேகே கொலை: கேங்ஸ்டர் லாரன்ஸ் பிஷ்னோய் பொறுப்பேற்பு  கொலை
    இந்தியா கனடாவுடன் இணைந்து செயல்பட வேண்டும் - அழைப்பு விடுக்கும் ஜஸ்டின் ட்ரூடோ இந்தியா

    நாடாளுமன்றம்

    நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தொடர்: என்னென்ன எதிர்பார்க்கலாம்? பிரதமர்
    ஒரே நாடு ஒரே தேர்தல்: ராம்நாத் கோவிந்த் தலைமையில் ஆய்வுக்குழுவை அமைத்தது மத்திய அரசு மத்திய அரசு
    நாடாளுமன்ற சிறப்பு அமர்வு: பிரதமர் மோடிக்கு கடிதம் எழுத உள்ளார் சோனியா காந்தி  காங்கிரஸ்
    செப்டம்பர் 18ஆம் தேதி தொடங்குகிறது நாடாளுமன்றத்தின் சிறப்புக் கூட்டத்தொடர் மக்களவை

    தீவிரவாதிகள்

    பாகிஸ்தானுக்கு ரகசிய தகவல் அளித்ததற்காக பாதுகாப்பு ஆராய்ச்சி அமைப்பு விஞ்ஞானி கைது இந்தியா
    பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கையின் போது குண்டுவெடிப்பு; 2 ராணுவ வீரர்கள் பலி  இந்தியா
    மும்பை தீவிரவாத தாக்குதலுக்கு உதவிய LeT தலைவர், பாகிஸ்தான் சிறையில் உயிரிழந்தார்  இந்தியா
    பெங்களூரில் மாபெரும் தீவிரவாத தாக்குதல் நடத்த முயன்ற 5 பயங்கரவாதிகள் கைது  பெங்களூர்

    தீவிரவாதம்

    இந்திய-கனட மோதலுக்கு காரணமான காலிஸ்தான் பயங்கரவாதி: யாரிந்த ஹர்தீப் சிங் நிஜ்ஜார்?  இந்தியா
    முடிவுக்கு வந்தது காஷ்மீர் பயங்கரவாத என்கவுண்டர்: கொல்லப்பட்டார் பயங்கரவாதி உசைர் கான் ஜம்மு காஷ்மீர்
    இன்று அமெரிக்க வெளியுறவுத்துறை செயலாளர் ஆண்டனி பிளிங்கனை சந்திக்கிறார் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் கனடா
    7 ஆண்டுகளுக்கு முன்னர், இதே நாள்: பாகிஸ்தான் தீவிரவாதிகளை பந்தாடிய URI சர்ஜிக்கல் ஸ்ட்ரைக் இந்திய ராணுவம்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025