NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / தமிழகத்தில் கர்நாடகாவின் 'நந்தினி' - ஆவின் நிறுவனத்திற்கு வரும் ஆபத்து
    அடுத்த செய்திக் கட்டுரை
    தமிழகத்தில் கர்நாடகாவின் 'நந்தினி' - ஆவின் நிறுவனத்திற்கு வரும் ஆபத்து
    தமிழகத்தில் கர்நாடகாவின் 'நந்தினி' - ஆவின் நிறுவனத்திற்கு வரும் ஆபத்து

    தமிழகத்தில் கர்நாடகாவின் 'நந்தினி' - ஆவின் நிறுவனத்திற்கு வரும் ஆபத்து

    எழுதியவர் Nivetha P
    Oct 12, 2023
    01:30 pm

    செய்தி முன்னோட்டம்

    தமிழ்நாடு மாநிலத்தில் 'ஆவின்' பால் நிறுவனம் இயங்கி வருவது போல், கர்நாடகா மாநிலத்தில் 'நந்தினி' என்னும் பால் நிறுவனம் இயங்கி வருகிறது.

    ஆவின் போலவே பச்சை, நீலம், ஆரஞ்ச் வண்ணங்களில் நந்தினி நிறுவனமும் பால் பாக்கெட்டுகளை விற்பனை செய்து வருகிறது.

    இதனிடையே சமீபத்தில் நந்தினி பால் நிறுவனம் சார்பில் அறிக்கை ஒன்று வெளியாகியுள்ளது.

    அதில், தமிழகத்தில் சேலம், கரூர், திண்டுக்கல், மதுரை, நாமக்கல் மற்றும் புதுச்சேரி மாநிலம் உள்ளிட்ட பகுதிகளில் 'நந்தினி' நிறுவனம் பால் மற்றும் பால் சார்ந்த பொருட்களை விற்பனை செய்ய விரும்புகிறது.

    எனவே, மேற்கூறப்பட்ட மாவட்டங்களில் ஏதேனும் ஓரிடத்தில் பால் பாக் செய்யும் ஆலைகள் இருந்தால் வரும் அக்.20ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என்று கூறப்பட்டுள்ளது.

    பால் 

    தமிழக அரசும், ஆவின் நிறுவனமும் தூக்கத்தில் உள்ளதாக குற்றச்சாட்டு 

    இதில் கவனிக்கதக்கது என்னவென்றால், தமிழகத்தில் விற்பனை துவங்கும் முன்னரே 'நந்தினி' பால் பாக்கெட்டுகளை தமிழில் அச்சிடப்பட்டு கர்நாடக பால்வளத்துறை வெளியிட்டுள்ளது.

    தொடர்ந்து, பால் முகவர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது என்றும் கூறப்படுகிறது.

    ஏற்கனவே, குஜராத் மாநில பால் நிறுவனமான 'அமுல்' தமிழகத்தில் கடைகளை அதிகப்படுத்தி பால் கொள்முதல் செய்து வருவதால் ஆவினுக்கு பால் கொடுப்பது குறைத்துள்ளது.

    இதனிடையே, கர்நாடகாவின் 'நந்தினி' பால் நிறுவனமும் தமிழகத்தில் தங்கள் வியாபாரத்தினை துவக்கினால் ஆவின் நிறுவனத்தை இழுத்துமூடும் நிலை ஏற்படும் என்று விவசாயிகள் கூறியுள்ளனர்.

    இவ்விவகாரத்தில் தமிழக அரசும், ஆவின் நிறுவனமும் தூக்கத்தில் உள்ளதாகவும் விவசாயிகள் குற்றம்சாட்டி வருகிறார்கள்.

    போர்கால அடிப்படையில் ஆவின் தனது பால் கொள்முதலை அதிகரிக்க உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் கூறப்படுகிறது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    ஆவின்
    பால்
    பால்வளத்துறை

    சமீபத்திய

    தனது 65வது பிறந்தநாளில் 'முகரகம்' என்ற சுயசரிதை புத்தகத்தை வெளியிட்டார் மோகன்லால் மோகன்லால்
    கல்வி நிதி வழங்க மறுக்கும் மத்திய அரசு மீது உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு வழக்கு தமிழக அரசு
    புக்கர் பரிசு வென்ற முதல் கன்னட பெண் எழுத்தாளர் பானு முஷ்டாக் கர்நாடகா
    175 பில்லியன் டாலர் மதிப்புள்ள 'Golden Dome' பாதுகாப்புத் திட்டத்தை டிரம்ப் வெளியிட்டார்; அதன் சிறப்பம்சங்கள் என்ன? அமெரிக்கா

    ஆவின்

    போலி மாதாந்திர பால் அட்டைகளை அகற்ற நடவடிக்கை - ஆவின் நிறுவனம் சென்னை
    இன்று முதல் ஆவின் நெய், வெண்ணெய் விலை உயர்வு தமிழ்நாடு
    ஆவின் நிறுவன பச்சை நிற பால் பாக்கெட்டுகளின் விநியோகம் 50%மாக குறைப்பு  தமிழ்நாடு

    பால்

    இனி திருப்பதி லட்டு தயாரிக்க இந்த பொருள் சேர்க்கப்படாது என அறிவிப்பு திருப்பதி

    பால்வளத்துறை

    பால் கொள்முதல் நிலையங்கள் எண்ணிக்கை அதிகரிக்கப்படும் - பால்வளத்துறை அமைச்சர்  தமிழ்நாடு
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025