NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / MUDA நில மோசடி வழக்கில் கர்நாடக முதல்வர் சித்தராமையாவுக்கு லோக் ஆயுக்தா சம்மன் 
    அடுத்த செய்திக் கட்டுரை
    MUDA நில மோசடி வழக்கில் கர்நாடக முதல்வர் சித்தராமையாவுக்கு லோக் ஆயுக்தா சம்மன் 
    முதல்வர் சித்தராமையாவுக்கு லோக் ஆயுக்தா சம்மன்

    MUDA நில மோசடி வழக்கில் கர்நாடக முதல்வர் சித்தராமையாவுக்கு லோக் ஆயுக்தா சம்மன் 

    எழுதியவர் Venkatalakshmi V
    Nov 04, 2024
    07:15 pm

    செய்தி முன்னோட்டம்

    மைசூரு நகர்ப்புற மேம்பாட்டு ஆணையத்தின் (MUDA) இட ஒதுக்கீடு வழக்கு தொடர்பாக நவம்பர் 6ஆம் தேதி விசாரணைக்கு ஆஜராகுமாறு கர்நாடக முதல்வர் சித்தராமையாவுக்கு லோக் ஆயுக்தா காவல்துறை திங்கள்கிழமை சம்மன் அனுப்பியுள்ளது.

    இந்த விசாரணையில் சித்தராமையாவின் மனைவி பார்வதி பிஎம்மிடம் அக்டோபர் 25-ம் தேதி விசாரணை நடத்தப்பட்டது.

    சித்தராமையா மற்றும் பார்வதி இருவர் மற்றும் அவரது மைத்துனர் மல்லிகார்ஜுன சுவாமி மற்றும் தேவராஜு ஆகியோரின் பெயர்கள் எப்ஐஆரில் குறிப்பிடப்பட்டுள்ளன.

    இந்த வழக்கு செப்டம்பர் 27 அன்று மைசூர் லோக்ஆயுக்தா காவல்துறையால் பதிவு செய்யப்பட்டது.

    வழக்கு

    MUDA வழக்கில் முறைகேடுகள் குறித்து மேலும் விசாரணை

    லோக் ஆயுக்தா, முறைகேடுகள் குறித்து மேலும் தெளிவுபடுத்தக் கோரிய நிலையில், வழக்கு தொடர்கிறது.

    தானும், தனது குடும்பத்தினரும் எந்த தவறும் செய்யவில்லை என்று சித்தராமையா தன் மீது வாய்த்த குற்றசாட்டுகளை மறுத்தார்.

    எதிர்க்கட்சிகள் தன்னைப் பார்த்து "பயந்து" இருப்பதாகவும், இது தனக்கு எதிரான முதல் "அரசியல் வழக்கு" என்றும் கூறினார்.

    முன்னதாக செவ்வாய்கிழமை (அக்டோபர் 29), மைசூரு நில மோசடி தொடர்பான பணமோசடி வழக்கு தொடர்பாக அமலாக்க இயக்குனரகம் (ED) விசாரித்ததை அடுத்து, முன்னாள் மூடா ஆணையர் டிபி நடேஷ் காவலில் வைக்கப்பட்டார்.

    முடா ஊழல்

    முடா ஊழல் என்றால் என்ன?

    முடா இட ஒதுக்கீடு வழக்கில் சித்தராமையா மீது ஊழல் குற்றச்சாட்டுகள் உள்ளன.

    அவரது மனைவி பார்வதிக்கு மைசூருவில் முடா கையகப்படுத்திய நிலத்தை விட கணிசமான அளவு அதிக சொத்து மதிப்புடன் 14 இடங்கள் ஒதுக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

    முடா, பார்வதியின் 3.16 ஏக்கர் நிலத்திற்குப் பதிலாக 50:50 விகிதத் திட்டத்தின் கீழ் பார்வதிக்கு மனைகளை ஒதுக்கியது, அங்கு அது ஒரு குடியிருப்பு அமைப்பை உருவாக்கியது.

    இத்திட்டத்தின் கீழ், வீடுகள் அமைப்பதற்காக, அவர்களிடமிருந்து பெறப்பட்ட வளர்ச்சியடையாத நிலத்திற்குப் பதிலாக, வளர்ந்த நிலத்தில் 50 சதவீதத்தை, நிலத்தை இழந்தவர்களுக்கு முடா ஒதுக்கீடு செய்தது. இந்த 3.16 ஏக்கர் நிலத்தில் பார்வதிக்கு சட்டப்பூர்வ உரிமை இல்லை என்று கூறப்படுகிறது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    சித்தராமையா
    கர்நாடகா

    சமீபத்திய

    பாகிஸ்தானுக்கு பின்னடைவு; சூராப் நகரத்தைக் கைப்பற்றியதாக பலுசிஸ்தான் விடுதலை ராணுவம் அறிவிப்பு பலுசிஸ்தான்
    ஜூன் 1, 2025 முதல் இந்த ஸ்மார்ட்போன்களில் எல்லாம் வாட்ஸ்அப் ஆப் செயல்படாது; எந்தெந்த போன் தெரியுமா? வாட்ஸ்அப்
    திமுக பொதுக்குழு கூட்டத்திற்கு முன்னதாக மதுரையில் முதல்வர் ஸ்டாலினுக்கு பேரணி மூலம் பிரமாண்ட வரவேற்பு மு.க.ஸ்டாலின்
    பாடுவதற்கு விதிக்கப்பட்ட தடைக்கு எதிரான சட்டப் போராட்டம் தொடரும் என பின்னணிப் பாடகி சின்மயி உறுதி சின்மயி

    சித்தராமையா

     5 தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற ஆயத்தமாகும் கர்நாடக அரசு  இந்தியா
    கர்நாடகாவில் மாடுகளை வைத்து போராட்டம் நடத்தும் பாஜகவினர்: காரணம் என்ன  இந்தியா
    அவதூறு வழக்கு: ராகுல் காந்தி, சித்தராமையா மற்றும் டிகே சிவகுமாருக்கு சம்மன்  இந்தியா
    பாஜகவின் மதமாற்ற சட்டம் ரத்து: கர்நாடக அரசு அதிரடி  கர்நாடகா

    கர்நாடகா

    ஊமை மகனை முதலைகள் நிறைந்த ஆற்றில் தூக்கி வீசிய தாய்: கர்நாடகாவில் கொடூரம்  காவல்துறை
    சர்ச்சைக்குரிய பதிவிட்டதற்காக ஜேபி நட்டாவுக்கு கர்நாடக காவல்துறை நோட்டீஸ்  பாஜக
    பிரஜ்வால் வழக்கு: பொய் புகார் அளிக்க பெண் கட்டாயப்படுத்தப்பட்டதாக NCW தகவல் பாலியல் தொல்லை
    கர்நாடகா: 3 பேரை கடத்தி அவர்களது அந்தரங்க உறுப்பில் மின்சாரம் பாய்ச்சி கொடுமைப்படுத்திய கும்பல்  இந்தியா
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025